பட்டினியில் முன்னேற்றம்.

எதற்கெடுத்தாலும் மோடி ஆட்சியையும்,அவரின் செயற்பாடுகளையும் குறை சொல்லுவது நமக்கே  கொஞ்சம் அசிங்கமாகத்தான் படுகிறது.

ஆனால் மேலும்,மேலும் குளறுபடி அசிங்கங்களை செய்யவும்,அதை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் அவர்களை அசிங்கப்படுத்துவதும்,விட்டால் தாக்குமளவும் பாஜகவினர் செயல் படுகிறார்கள்.


மூத்தத் தலைவரும் ,முன்னாள் அமைச்சரும்,முன்னாள் இ.ஆ.ப,அதிகாரியுமான யஷ்வந்த் சின்காவையே கிழம் வேலை தேடி அலைகிறது என்று கொச்சை படுத்தும் அளவுதான் தற்போதைய பாஜக உள்ளது.

தான் பிடித்தது முயல்தான்.முயலுக்கு மூணு கால்தான் என்ற பிடிவாத மனநிலை.

இப்போது இவ்வளவு கூற காரணம்.
 மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பட்டினியால் வாடுவோர் அதிகரிப்பு என்ற புள்ளி விபரம் வெளிவந்துள்ளதால்தான்.

காங்கிரஸ் ஆட்சியில் 2014-ம் ஆண்டு இந்தப் பட்டியலில், இந்தியா 55-வது இடத்திலிருந்தது. 
இதே ஆண்டு ஆரம்பத்தில்தான்  பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்தது.

மோடி பிரதமர் ஆனார். 
மூன்றே ஆண்டுகளில் 3 வது இடத்தை பிடித்துள்ளது.
பெரும் சாதனைதான்.


உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியா, ஈராக், வங்கதேசம், வடகொரியா போன்ற நாடுகள்கூட இந்தியாவுக்கு பின்னால்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1,ஆப்கானிஸ்தான்.
2,பாகிஸ்தான்
3,இந்தியா
தான் ஆசிய கண்ட தற்போதைய 
 பசி வரிசை.

பாஜகவினர் பாகிஸ்தான் 2ம் இடமா,நம்மை விட முந்துகிறதா என்று எண்ணி தொலைத்து விடக் கூடாது.

காங்கிரசு ஆட்சியில் கொண்டுவர முயற்சித்து பாஜக கொண்டுவந்த உணவு பாதுகாப்புத்திட்டத்துக்கு பின்னர்தான் இந்த பசி நிலை உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு ஒவ்வொருவருக்கும் வழங்க பாதுகாப்பு தருவதற்கு பதில் நியாயவிலைக்கடைகளில் வழங்கப் படும் அரிசி ,கோதுமைக்கு மானியத்தை நிறுத்தியது மிகப்பெரிய மோசடி.
மக்கள் விரோத செயல்.

மோடிக்கு அம்பானி,அதானி நலன்கள் தான் கண்களை மறைத்து நிற்கிறது.
அதன் பின் உள்ள ஏழைகள் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை.

பொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லை என்ற சித்தாந்தம்தான் மோடி வையாறாக்களுக்கு.
கார்ப்பரேட்களுக்கு சலுகை,கடன் தள்ளுபடி ,வரிச்சலுகை என்று தாராளமான போக்கு காட்டிய காட்டிய அதே மோடி விவசாயிகள் சலுகைகள் ,உர மானியம் போன்றவற்றை கைவிட்டார்.
கடன் தள்ளுபடியும் செய்ய மறுத்து விட்டார்.அதற்கான வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் போராட்டம் டெல்லியில் ஆண்டுக்கணக்கில் நடக்கிறது.ஆனாலும் அவர் அவர்களைசந்திக்கவோ,மனுவை வாங்கவோ,குறைகளை கலையவோ மறுத்துவிட்டார்.
அதே நேரம் நடிகைகைகளுடன் செல்பி எடுக்க நேரம் ஒதுக்கி வருகிறார்.இதுதான் மோடி ஆட்சியின் உண்மை முகம்.
மோடி காலடி பூசை செய்யும் அமெரிக்காவில் விவசாயிகளுக்கு பலவகை மானியங்கள்,விவசாய கருவிகள்,டிராக்டர்  வாங்க வட்டியில்லா கடன்,ஓய்வூதியம்  எல்லாம் உண்டு என்பதை மோடி உணராமலா இருப்பார்.
அமெரிக்கா தனது விவசாயப் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யவும்,உணவுப்பொருட்களுக்கு தங்களை சார்ந்தே இந்தியா இருக்க வேண்டும் என்பதும்தானே நோக்கம்.
அதை உணர்ந்தும் மோடி அவர்களின் வழிகாட்டல் படி நடப்பதுதான் இன்றைய பட்டினி களின் அடிப்படை காரணம்.


========================================================================================
ன்று,
அக்டொபர்-17.
  • உலக வறுமை ஒழிப்பு தினம்
  • கவிஞர் கண்ணதாசன் இறந்த தினம்(1981)
  • போட்ஸ்வானா மற்றும் லிசோதோ ஆகியன ஐநாவில் இணைந்தன(1966)
=========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?