கேள்வி கேட்கும் அதிகாரம்

இன்றைய அரசக் கட்டளை. 


"தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்கும் அதிகாரம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை "

 -பிரதமர் மோடி
இதுவரை இந்தியா மக்களாட்சி நடக்கும் நாடகத்தான் இருந்தது.மோடி ஆட்சி வந்ததுமே ,ஆட்சியைப் பற்றி விமரிசிப்பவர்கள் தேச விரோதிகளாகி விட்டனர்.

யாரும் அரசுத் திட்டங்களை குறை சொல்லி பேச,சமூக வலைத்தளங்களில் இடுகை இட மிரட்டல் என்றாகி காவி சர்வாதிகார நாடாக இந்தியா மாறிவருகிறது.

பக்கத்து மாநிலங்களுக்கெல்லாம் தேர்தல் அறிவித்த தேர்தல் ஆணையம் குஜராத்துக்கு மட்டும் பாஜக சொல்கின்ற தேதியை அறிவிக்க காத்திருக்கிறது.

இது எவ்வளவு பெரிய மோசடித்தனம்.தேர்தல் ஆணையம் சில காலமாகவே தமிழகத்தில் அதிமுகவுக்கும்,இந்திய அளவில் பாஜகவுக்கும் இணக்கமாகவே நடந்து வருகிறது சாதாரண வாக்காளர்களுக்கு கூட தெரிந்த உண்மை.


ஆர்.கே நகர் இடைத்தேர்தல் 86 கோடிகள் வாக்காளர்களுக்குப்பட்டுவாடா என்று சொல்லிதான் நிறுத்தப்பட்டது.

ஆனால் இதுவரை அந்த முறைகேட்டின்  மீது  எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அடுத்து தங்களுக்கு சாதகமாக வந்தவனுடன் தேர்தல் டிசம்பரில் என்கிறது ஆணையம்.

எதற்காக நிறுத்தப்பட்டதோ அதற்கான கரணம் இன்னும் நிலுவைதான்.

"நாங்கள் பட்டுவாடா நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க கூறி தமிழக அரசுக்கு பெயர்களுடன் அறிக்கை அனுப்பி விட்டோம் "என்கிறது ஆணையம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிஉடன்பட அமைசசர்கள் பெயர்கள் உள்ள அந்த பட்டியலில் உள்ளவர்கள் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.எப்படி எடுக்கும்.

ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டு தணடனை வழங்கப் பட்டதா என்று கண்காணிக்க வேண்டிய,தண்டனைவழங்க அறிவுறுத்த வேண்டிய  பொறுப்பும்,கடமையும்  தேர்தல் ஆணையத்துக்கு கிடையாதா?
இல்லை என்றால் இந்த தேர்தல் தடை ஏன்?நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் ஏன்?
மொத்தத்தில் தேர்தல் ஆணையர்கள் வீண் என்றுதானே எண்ணத் தோன்றுகிறது.

தற்போது நடந்த உள்ளாட்சி,கூட்டுறவு தேர்தல்களில் சுத்தமாக பாஜக படு தோல்வியை சந்தித்தது அதனால் மோடியும் ,பாஜக அரசும் வரும் சட்டமனறத்தேர்தலில் வெற்றி பெற குஜராத் மக்களை தயார் செய்ய பல சலுகைகளை அறிவிக்கவே தேர்தல் ஆணையத்தை தேர்தல் ஆணையத்தை பணித்து தேர்தல் தேதியை தாமதமாக அறிவிக்க வைத்தது.

குறிப்பிட்ட கட்சி சொல்லுவதை கேட்டு ஆடும் தேர்தல் ஆணையம் எப்படி நடுநிலை கொண்டதாக இருக்கும்,இயங்கும்.?

மோடியும் பல சலுகைகளை அறிவித்து விட்டார்.
குஜராத் பாஜக அரசும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மடங்கு ஊதிய உயர்வை,பல சலுகைகளை வழங்கி விட்டது.

எதிர்ப்பு குரல் எழுப்பிய படேல் சமுதாய போராட்டக்குழு உறுப்பினர்கள் இருவரை விலைக்கு வாங்கி பாஜகவில் இணைத்து அங்கும் குழப்பத்தை உண்டாக்கி விட்டாயிற்று.

இனி தேர்தல் தேதியை ஆணையம் அறிவிக்கலாம்.

அதனால்தான் தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சிகள்  யாரும்  கேள்வி கேட்கக்கூடாது என்று மோடி திருவாய் மலர்ந்துள்ளார்.
கேள்வி கேட்க முடியா அளவு தேர்தல் ஆணையம் நடந்து கொண்டிருக்கிறதா?

குஜராத் தேர்தல் தேதியை அறிவித்தால் அங்கு நடக்கிற வெள்ள நிவாரணப்பணிகள் நின்று விடுமாம்.
இது தேர்தல் ஆணையம் சொல்கின்ற சொத்தைக் காரணம் .
வெள்ளம் முடிந்து இயல்பு வாழ்க்கை இருக்கும் நிலையில் இது வேடிக்கையானது.

மேலும் தேர்தல் அறிவித்தல் புதிய திட்டங்கள்,சீரமைப்புகள் தான் கூடாது.ஆனால் ஏற்கனவே உள்ள,நடைபெறும்  பணிகளுக்கு எந்தத்தடையும் கிடையாது.
சாதாரணமானவர்களுக்கே தெரிந்த இந்த விதி ஆணையர்களுக்கு தெரியாமலா இருக்கும்.

அப்படியே இருந்தால் கூட தேர்தல் நடைமுறை களில் வெள்ள நிவாரணப்பணிகளுக்கு விலக்கு என்று குறிப்பிட்டாலே போதுமே.
தேதியை அறிவிக்காமல் போனதற்கு நல்ல காரணத்தை தேர்தல் ஆணையம் இனி கண்டு பிடித்து வைத்துக்கொள்ளட்டும்.


ஆனால் மோடி அரசை எதிர்த்து பேசக் கூடாது,தவறு செய்யும் நடுநிலை நிறுனங்கள் எனும் ரிசர்வ் வங்கி,தேர்தல் ஆணையம் போன்றவற்றின் மோசமான செயல்பாடுகள் குறித்து யாரும் வாயைத்திறந்து கேள்வி கேட்கக் கூடாது என்பது வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டபோது போட்ட வாய்ப்பூட்டு சட்டம் மறுவடிவு என்றுதான் உணர முடிகிறது.

தற்போதைய திரைப்படம் மோடி அரசின் வரியை விமரிசித்தால் அதற்கான பதிலை தர வக்கில்லாமல் படத்தயாரிப்பாளர்,நடிகர்களை மிரட்டுவது என்ன வகை அரசியல்,மக்களாட்சி.
இட்லிக்கும்,மருந்துக்கும் ஜி.எஸ்.டி,வரியை போட்டவர்கள் சாராயத்துக்கு போடாதது ஏன்?என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலைதான் அவர்கள் இந்த உளறல்களுக்கு மூலக்காரணம்.

எதற்கெடுத்தாலும் முறையின்றி வெட்டி நியாயம் பேசும் தலைவர்கள் இருப்பது மக்கள் விரோத மோடி அரசை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அம்பலப்படுத்த வேறு கட்சி ஆட்களே தேவைப்படா நிலையை உண்டாக்கியுள்ளது.

அது தொடரட்டும்.இந்திய அளவில் மோடி,அமித் ஷா,தமிழகத்துக்கு தமிழிசை,ஏச்சு.ராஜா பணிகள் தொடரட்டும்.
  

=======================================================================================
ன்று,
அக்டொபர்-23.
  • முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது(1911)
  • லெனின், அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்(1917)
  • ஐ.நா., சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் துவங்கியது(1946)
  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் வெளியிடப்பட்டது(2001)
=======================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?