சாதி இரண்டொழிய .....

கட்டபொம்மனில் ஆரம்பித்த போக்குவரத்துக் கழகங்கள்,மாவட்டங்கள்  பெயர்,பெரும்பிடுகு வரை போய் 500பேர்கள் மட்டுமே உள்ள சாதியினர் கூட தங்கள் சாதி தலைவர் பெயரை வைக்கக்கோரி போராடும் அளவு போனது.
அம்பேத்கார் பேருந்து மீது பசும்பொன் முத்துராமலிங்கம் பேருந்து ஆதரவாளர்கள் கல்வீசவும்,அவர்கள் திருப்பி இவர்கள் பேருந்தை  எரிப்பதுமாக போர்க்களமாகியது தமிழகம் .

எந்தப்பேருந்தை எந்த சாதிக்காரன் தாக்குவனோ என்ற பயம் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் அளவு தமிழகம் பாதுகாப்பில்லாமல் போனது பலருக்கு மலரும் நினைவில் இருக்கலாம்.
சாதி தலைவர்கள் பெயரை சூட்டுவதால் உண்டான பலனை தமிழகம் அனுபவித்தப்பின்னர்தான் தலைவர் கலைஞர் மாவட்டங்கள்,போக்குவரத்துக்கழகங்களில் இருந்து அவர்கள் பெயரை நீக்கி கலவரங்களுக்கு முடிவு கட்டினார்.
ஆனால் அதை அவரது மகனே மீண்டும் துவக்குவது சரியல்ல. 



விடுதலைப் போராட்ட வீரர்கள்,அரசியல் தலைவர்களை சாதிய ரீதியில் அணுகும் போக்கு தலை தூக்கி உள்ள நிலையில் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுக்கும் வேலையை தளபதி செய்யக் கூடாது.


ஏற்கனவே மதுரை விமான நிலையத்துக்கு காரராஜர் பெயரை வைக்க கோரி நாடார் சங்கங்கள் கோரிக்கை நிலுவையில் உள்ளதை தளபதி நினைவில் கொள்ளவில்லையே.


காமராஜர் தற்போது தமிழத்தின் பெருந்தலைவராக இல்லை.நாடார் சங்கங்கள் அவரை தங்கள் சாதி தலைவராக குறுகிய வட்டத்தில் அடைத்து விட்டார்கள்.

இந்திய அரசியலிலே பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கர் காமராஜர் படத்தை வீடுகளில் வைத்ததற்காக என்னை நீ அந்த சாதியா என்று கேட்டவர்கள் பலர்.கல்விக்கண் திறந்த காமராஜருக்கே அந்நிலை என்றால் தனது வாழ் நாளில் தனது சாதிக்காக  உழைத்த காங்கிரஸ்,பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்த தலைவர் முத்துராமலிங்கம் நிலை எப்படி என்று தெரியாதா?

சுபாஷ் சந்திர போஸின் பார்வர்ட் பிளாக் கட்சியில் முத்துராமலிங்கத் தேவர் இருந்தது போய் பார்வர்ட் பிளாக் என்றால் தேவரின அமைப்பாக மாறிப்போனது வரலாறு.

முத்துராமலிங்கத் தேவர்,காமராஜர்,வ.உ.சி.போன்றோரை சாதிகள் முன்னிறுத்தும் போக்கு இருக்கையில் வீண் குழப்பத்தை உண்டாக்காமல் இருக்க தலைவர்கள் பெயரை சூட்டாமல் அந்தந்த இடத்தின்,ஊரின் பெயர்களை வைப்பதுதான் அமைதிக்கான வழி .


அதுமட்டுமல்ல வெளி நாடுகளில் உள்ளவர்கள் யார் பெயர் எந்த ஊர் என்று குழம்பாமல் இருக்கவும் உதவும்.

தேவர் பிறந்தநாளில் ஏதாவது சொல்லவேண்டும் என்று அரசியல்வாதிகள் சொல்வது எதிர்தரப்பை அவர்கள் மீது அவநம்பிக்கையை வைக்கத்தான் உதவும்.


தொகுதிகளை சாதி வாக்குகளை
கணக்கிட்டு பார்த்துக்கொடுப்பதே தவறு.


சொல்லப்போனால் பிற சாதியினர் வாக்குகள் ஒட்டு மொத்தமாக அதிகமாகத்தான் இருக்கும்.அவர்கள் திட்டமிட்டு கட்சிகளின் சாதி வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தால்?


அந்நிலை விரைவில் வரப்போகிறது.சாதி வெறியை அரசியல் கட்சிகள்தான் தூண்டுகின்றன.அதற்கு திமுகவும் விலக்கல்ல என்ற அவப்பெயர் வேண்டாம் தளபதி அவர்களே?

==================================================================================================
ன்று,

அக்டொபர்-31.

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்(1875)
  • அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலையான லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது(1913)
  • முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியானது(1931)
  •  முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி  நினைவு தினம்(1984)
சென்னை மழை பேரிடர் உதவி தொலைபேசிகள்.
044-25367823
044-25384965
044-25383694
இந்திராகாந்தி  1917 நவ., 19ல், ஜவஹர்லால் நேரு - கமலா தம்பதிக்கு, மகளாக பிறந்தார். 
நேரு மறைவிற்கு பின், நாட்டின் மூன்றாவது பிரதமராக, 1966ல் பதவியேற்றார். 

1969 ஜூலையில், வங்கிகளை தேசியமயமாக்கினார். 

1971ல் நடந்த பொதுத் தேர்தலில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அச்சமயத்தில், கிழக்கு பாகிஸ்தானில் கலவரம் ஏற்பட்டது. 

இந்திய படைகள் உதவியுடன், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து, வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது.
 1984 ஜூனில், சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலுக்குள் பயங்கரவாதிகள் முகாமிட்டனர். 

பொற்கோவிலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு அனுமதி வழங்கினார் பிரதமர் இந்திரா. பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 
அதனால் கோபங்கொண்ட சீக்கிய இனத்தவர்கள் சிலர் இவரை பழி வாங்க திட்டமிட்டிருந்தனர்.
1984 அக்டோபர் 31ல், டில்லியில் உள்ள  வீட்டில் அவரது மெய்காப்பாளராலே  இந்திராகாந்தி  சுட்டு கொல்லப்பட்டார்.
==================================================================================================

                                                         யாரென்று தெரிகிறதா?


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?