மடை மாற்றம்

கடந்தமூன்றாண்டுகளாக  இந்தியர்கள் அதிகளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலியாகி வருவதாக சமீபத்திய உலக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 
இது போன்ற ஒரு அதிர்ச்சியூட்டும் சூழ்நிலையை நாட்டு மக்கள் சந்தித்தும் வரும் வேலையில் கூட, பிரதமர் மோடியின் போலி தேசியவாத அரசியல் நிகழ்ச்சி நிரலில் கூட இந்த பிரச்சனை இடம் பெறவில்லை. 
போதா குறைக்கு, கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி வந்த ஐசிடிஎஸ் போன்ற அத்தியாவசிய திட்டங்களுக்கான நிதியையும் மோடி அரசாங்கம் நிறுத்தி விட்டது. இதன் காரணமாக மக்களின் இந்த பிரச்சனைக்கு மோடி அரசாங்கம் தான் பொறுப்பு.

உலகளாவிய பசி அட்டவணை, 2017 ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , கடந்த 7 வருடங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்கள் தொகை 16% இருந்து 14% குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது. 
ஆனால் ஆண்டிற்கு 2% மக்கள் தொகை அதிகரித்து வரும் சூழலில், உண்மையில், நாட்டில் உள்ள பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் வருகிறது. 
இந்த எண்ணிக்கை 2007 ஆம் ஆண்டு 19.7 கோடியில் இருந்து தற்போது 20 கோடியாக உயர்ந்துள்ளது.
குழந்தைகளுக்கு மத்தியில் பசியால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு மிக அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது . சில சமயம் இது மிகவும் மோசனமானதாக இருக்கிறது. 
உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாததே ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறி. 
உலகளாவிய பசி அட்டவணைப்படி உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமை என்ற நோயின் தாக்கம் 2006 – 10 காலகட்டத்தில் 20% இருந்தது 2012 -16 காலகட்டத்தில் 21% அதிகரித்துள்ளது. 
அதாவது 9.7 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், வளர்ச்சி குன்றிய அதாவது வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாத குறைபாடு கடந்த ஆண்டுகளில் குறைந்து வந்தாலும், 38.4% குழந்தைகளிடம் இந்த குறைபாடு நிலவுகிறது.
உலகளாவிய பசி அட்டவணை தரவரிசைப்படி , 120 நாடுகளில் 97 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 100 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது நிலைமை மோசமடைந்து வருவதை காட்டுகிறது. நேபால், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகள் இந்தியாவை சிறப்பான நாடுகளாக உள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு குறித்து மருத்துவ பத்திரிகையான லேன்செட் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் உள்ள 58% ஆண் குழந்தைகள் மற்றும் 50% பெண் குழந்தைகள் தேவைக்கு ஏற்ற எடை இல்லாதவர்களாகவே இருக்கிறனர் என் தெரிவித்துள்ளது. 
இது நாளைய குடிமக்களின் பெரும் பகுதியினர் உணவு பற்றாக்குறையால் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது.

குழந்தைகளுக்கு சமச்சீரற்ற ஊட்டச்சத்து இல்லாமை என்பது அவர்களின் உடல் நலனை வலுவற்ற தன்மைக்கு கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் அவர்களது மூளை வளர்ச்சியையும் பாதிக்கிறது. 

இது இன்றைய குழந்தைகளோடு நின்றுவிடாமல், அடுத்த தலைமுறையினரையும் பாதிக்கும். 

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, உலகத்தில் பசியால் வாடும் மக்களில் நான்கில் ஒரு பங்கு மக்கள் இந்தியாவில் உள்ளவர்களே. 
இது இந்தியாவை பசியின் தலைநகரமாக மாற்றியிருக்கிறது. நாட்டின் 50% செல்வத்தை வைத்திருக்கும் 1% மக்களும் , அடுத்தடுத்து வந்த அரசினால் பின்பற்றப்பட்டு வந்த கடுமையான கொள்கைகளே இந்தியாவில் நிலவும் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைக்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.
மக்களிடம் நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி அவர்களுக்கு இரு வேலையாவது உணவு அளிக்க , மோடி தலைமையிலான தற்போதைய அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. 
இந்த பிரச்சனை குறித்து ரேடியோ , தொலைக்காட்சி பிரச்சாரங்களில் மோடி பேசுவதில்லை.
பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவான நிதி ஆயோக்-கிற்கு கோடிக்கணக்கான நாட்டு மக்கள் பசியால் வாடுவதை பற்றி எந்த கவலையும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவாரங்கள் கூட இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.
 அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து தங்களது கருவூலத்தை நிரப்பிக் கொள்ள தேவையான சலுகைகளை பெறும் நாட்டின் பெரிய தொழிலதிபர்களான சிஐஐ மற்றும் எப்ஐசிசிஐ கூட இது பிரச்சனையில் குருடாகவே இருக்கிறது. புல்லட் ரயிலுக்கும் , செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப வசதியுள்ள அரசிடம் ஏழை மக்களுக்கு உணவளிக்க வசதி இல்லை. 
இந்நிலையில் தற்போது அதிகரித்துவரும் வேலையின்மை, நாடு முழுவதும் வேலை இழப்பு மிரட்டல்கள் , பொருளாதார மந்தநிலை, அரசாங்கத்தின் திறமையற்ற தலைமை என இவை எல்லாம் சேர்த்து பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கும்.
ஆனால் பாஜகவின் தலைவர்களோ மக்களின் அன்றாட பிரசனைகளை கலைவதை விட்டு,விட்டு தாஜ்மகால்,ராமர் கோவில் ,தேஜோ மஹால் என்று மக்களின் மதவெறியை தூண்டி மோடி அரசின் தோல்வியை மடை மாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள்.
=======================================================================================
ன்று ,
அக்டொபர்-19.
  • நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம்(1888)
  • சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது(1954)
========================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?