குரோமின் தொடர்ச்சி ?

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தேடல் எந்திரமாக (பிரவுசராக) குரோம் உள்ளது .
 இதற்கான குரோம் தொடர்ச்சி நிரல்கள் ( எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள்), பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை அளித்து வருகின்றன. 

குரோம் இணைய ஸ்டோரில் (Chrome Web Store) இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. அவற்றை இலவசமாகவே பெற்று, நம் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தி, வசதிகளை அனுபவிக்கலாம்.
இது ஒரு நல்ல ஏற்பாடு தான். 


ஆனால், நம் கம்ப்யூட்டரில் பதியப்பட்ட இந்த புரோகிராம்கள், சில வேளைகளில் நம் கணினி இயக்கத்தில் தலைவலையையும் ஏற்படுத்துகின்றன. 


மிக அதிகமான எண்ணிக்கையில், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை, நீங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கினால், அவை நம் கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்தைக் குறைக்கின்றன.

 குறிப்பாக, நாம் பழைய விண்டோஸ் இயங்கு முறையில்  இயங்கினால், இந்த வேகக் குறைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. நம் இணையத் தேடலின் வேகமும் மிகவும் குறைவாகவே இருக்கும். 

இத்தகைய சூழ்நிலைகளில், நமக்குத் தேவையில்லாத, ஏதோ ஒரு காரணத்திற்காக, நாம் பதிந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை நீக்குவதே சிறந்த வழியாகும். 

எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை நீக்கும் முயற்சியில் இறங்கும் முன், எந்த புரோகிராம்கள், அதிக மெமரி இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன என்று அறிந்து, நீக்குவதில் அவற்றுக்கு முதல் இடம் தர வேண்டும். இதற்கு டாஸ்க் மேனேஜரைப் (Chrome Task Manager) பயன்படுத்தலாம். 


அதில் எந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம் அதிக மெமரியை எடுத்துக் கொள்கிறது என்று கண்டறிந்து அதனை அன் இன்ஸ்டால் செய்திடலாம். கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.
குரோம் பிரவுசர் விண்டோவினைத் திறக்கவும். 


இதன் வலது மேல் மூலையில் உள்ள மூன்று கோடுகள் அடங்கிய சிறிய ஐகானில் கிளிக் செய்திடவும். இது 'control and customize' என்று சொல்லப்படும். 

இதில் கிளிக் செய்து, குரோம் பிரவுசர் இயக்கத்தினை, நம் விருப்பப்படி நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். 

இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில் 'tools' என்னும் லேபிள் மீது கிளிக் செய்திடவும். 

பின்னர், 'Task Manager” என்பதில் கிளிக் செய்திடவும். டாஸ்க் மேனேஜரைத் திறக்க Shift+Esc என்ற இரு கீகளை அழுத்தவும் செய்திடலாம்.

இப்போது டாஸ்க் மேனேஜர் விண்டோ உங்களுக்குக் கிடைத்திருக்கும். இங்கு நாம் திறந்திருக்கும் டேப்களுடன், உங்கள் பிரவுசருக்கென, நீங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். 


எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களின் பெயர்களின் முன்னால், jigsaw puzzle கட்டங்கள் போன்ற சிறிய படம் இருப்பதைப் பார்க்கலாம். 
இங்கு எளிதாக, ஒவ்வொரு எக்ஸ்டன்ஷன் புரோகிராமும், எவ்வளவு மெமரி இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன என்று கண்டறியலாம். 


'Memory tab' என்பதில் கிளிக் செய்தால், இந்த மெமரி இட அளவின் அடிப்படையில், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் வரிசைப்படுத்தப்படும். 

'Stats for nerds' என்பதில் கிளிக் செய்வதன் மூலம், மெமரி பயன்பாடு குறித்த கூடுதல் தகவல்களையும் பெறலாம். 
இந்த 'Stats for nerds' டாஸ்க் மானேஜர் விண்டோவின் இடது கீழ் மூலையில் தென்படும். 
இந்த தகவல்களைப் பார்க்கையில், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில், எது அதிகமாக நினைவகத்தில்  இடத்தைப் பயன்படுத்துகிறது என்று தெரியவரும். 


அந்த நிரல் உங்களுக்கு அவசியமாக  தேவைப்படவில்லை எனில், அதனை நீக்கிவிடுங்கள் .இதனால் தேவையற்ற இடநெருக்கடியை தவிர்க்கலாம்.

இதன் பின்னர், மீண்டும் ரீஸ்டார்ட் செய்து உங்கள் கணினியை  இயக்கினால், தேடல் எந்திரத்தை பயன்படுத்தினால், அதன் இயக்கத்தில் வேகம் சற்று அதிகமாக இருப்பதை உணர்வீர்கள்.


=========================================================================================
ன்று,
அக்டொபர் -28
  • ஸ்பெயினின் முதல் ரயில் பாதை திறக்கப்பட்டது(1848)
  • செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா தேசிய தினம்(1918)
  • கனடா- அலாஸ்கா இடையேயான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது(1942)
  • முதலாவது ஏர்பஸ் ஏ300 இயக்கப்பட்டது(1972)
  • ==========================================================================================

சென்னை எண்ணூர் பகுதிகளில் கமல்ஹாசன் ஆய்வு.
எண்ணூர் துறைமுக கழிமுகப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும்.மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லிநடவடிக்கை



சிரிப்புக்கு தடா.



"சிரிப்பதற்கு கூட மோடி அரசு சென்சார் தடை விதிக்கத் துவங்கிவிட்டது. 

ஸ்டார் டி.வி. சமீபத்தில் நடத்திய ஒரு மிமிக்ரி நிகழ்ச்சியில் பிரபல மிமிக்ரி கலைஞரான ஷ்யாம் ரங்கீலா பங்கேற்று நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்களை போல மிமிக்ரி செய்து அசத்தினார். 

ஆனால் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான போது, ஒரு குறிப்பிட்ட தலைவரைப்போல ஷ்யாம் செய்திருந்த மிமிக்ரி மட்டும் எடிட் செய்யப்பட்டுவிட்டது. 

அந்த தலைவர் நமது பிரதமர் நரேந்திர மோடிதான். கடைசியில் நமது நாட்டில் அரசியல் தலைவர்களை - அதாவது பாஜக தலைவர்களைப் போல மிமிக்ரி செய்வது கூட குற்றமாகிவிட்டது. தணிக்கைத் துறைக்கு இது நல்ல காலம் போலும்.
பாரதிய ஜனதா கட்சிக்கு திடீரென்று காஷ்மீர் மீது பாசம் வந்துவிட்டது. 

அங்குள்ள அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் தீனேஷ்வர் சர்மா சென்றிருக்கிறார். 

முதலில் அவர் காஷ்மீர் அமைப்புகளுடன் பேச்சுவார்ததை நடத்துவதற்கான மத்திய அரசின் தூதரா அல்லது பாஜகவின் செய்தி தொடர்பாளரா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். 

அடுத்து, காஷ்மீர் மீது பாஜகவின் பாசம் எத்தகையது என்பதை புரிந்து கொள்ள கடந்த 41 மாத கால மோடி ஆட்சியில் காஷ்மீருக்காக என்ன செய்தார்கள் என்பதை ஆய்வு செய்தாலே போதுமானது. காஷ்மீர் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை."
                                                                                                                        - தோழர் சீத்தாராம் யெச்சூரி

=========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?