எதற்கும் நாணாதவர்கள்!

“சார், உங்க பையன் ஒன்னு கேட்டால்சம்பந்தமில்லாமல் ஏதாவது ஒன்றை உளறுகிறான். கொஞ்சம் கண்டிச்சு வைங்க” என்று ஆசிரியர் கூறியதும்,
 “அப்படியா! நிச்சயமாஒருநாள் அவன் அமைச்சரா வருவான் பாருங்க” என்றுமகிழ்ச்சியுடன் கூறினாராம் தந்தை!

வைகை அணை நீர் ஆவியாகாமல் தடுக்கத் தெர்மாக்கோல் அட்டைகளை மிதக்கவிட்ட அரிய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெறவிருக்கும் அமைச்சரால் நாம் அடைந்துள்ள பெருமை வானிலும் பரந்தது.“நான் மட்டும் சளைத்தவனா” என்று களத்தில் இறங்கினார் மற்றோர் அமைச்சர். 
ஆற்று நீரில் நுரை வெள்ளமாய்ப் பொங்கி வருகிறதே என்று மக்கள் கவலைப்பட்டபோது “வீடுகளில் சோப்பு பயன்படுத்துவதால் வரும் நுரையே இது” என்று உடனடியாக விடை பகர்ந்து தம் மேதைமையை வெளிச்சம்போட்டுக் காட்டினார்

.“ஆதாரத்துடன் பேசுபவனாக்கும் நான்” என்று கம்பீரமாகக் கைகளில் தனியார் நிறுவனப் பால் பாக்கெட்டுகளைப் பிடித்தவாறு “இவை கலப்படம் செய்யப்பட்டவை” என்று நிருபர்களை அழைத்துக் கூறினார் வேறோர் அமைச்சர்.
அந்நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவே, நீதிமன்றம் அமைச்சரின் வாய்க்குப் பூட்டுப் போட்டது. அமைச்சர் மேல்முறையீடு செய்துள்ளார். 


“நுணலும் தன் வாயால் கெடும்” என்பது இதுதான். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்துத் தாம் சொன்னதெல்லாம் பொய்யென்றும் அவர்கள் சொல்லச் சொன்னதையே தாம்சொன்னதாகவும் அமைச்சர் ஒருவர் இப்பொழுதுகூறுவதை எப்படி நம்புவது?

இதை யார் சொல்லிக் கூறுகிறார் என்ற சந்தேகம் வருவது இயல்புதானே?கோவையில் ஆளுநர் ஆய்வு செய்ததை ‘டேக் இட் ஈசி’யாக எடுத்துக்கொள்ளச் சொல்பவரும் இதே அமைச்சர்தான். 
ஒருமுறை பொய் சொன்னால், தொடர்ந்துஎன்ன பேசினாலும் யாரும் நம்பமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியாதா?
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் இந்த அமைச்சர் கூறப் போகும் விஷயங்கள் மிக முக்கியமானவை எனத் தெரிந்தும், ‘டேக் இட் ஈசி’ பாலிசியைக் கடைப்பிடிப்பது நல்லதல்ல என்பது அவருக்குத் தெரியாதிருக்க வாய்ப்பில்லை.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஈ.பி.எஸ். கலந்துகொள்ளும் போதெல்லாம் துணை முதல்வர் ஓ.பி.எஸ் நிழல் போலக் கூடவே செல்வது வேடிக்கையாகத் தெரியவில்லையா? 

கூட்டங்களில் இரண்டு பேரும் குட்டிக் கதைகள் சொல்வது மட்டும் தான் ஜெயலலிதாவைப் பின்பற்றும் ஒரே செயல்.மோடியின் காலில் விழுந்து கிடப்பவர்களுக்கு ‘சுயமரியாதை’ என்ற சொல் எப்பொழுது எதற்காகப் பிறந்ததுஎன்னும் வரலாறு தெரியாது. 

தெரிந்திருந்தால், ஜெயலலிதாவின் காலிலும் பிறகு சசிகலாவின் காலிலும் விழுந்திருக்கமாட்டார்கள்.ஜெயலலிதா இருந்த காலத்தில் பியூஷ் கோயல் படையெடுத்து வந்தபோது பலிக்காத உதய் மின்திட்டம் எவ்வளவு எளிதாகத் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிட்டது.-
 அமைச்சர்கள் சொல்கிறார்கள் இது அம்மாவின் அரசு!நீட் தேர்வைத் தமிழ்நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்தவர் ஜெயலலிதா.

‘நீட்’ நிர்மலாவுடன் நாடகமாடி, மருத்துவராகி மாபெரும் புகழ் பெற்றிருக்க வேண்டியஏழை மாணவி அனிதாவைக் கொன்று, ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவ , மாணவியரின் எதிர்காலத்தை இருளாக்கிட நீட் தேர்வுக்கு வரவேற்பு நல்கியது ஈ.பி.எஸ் அரசு.-

 அமைச்சர்கள் சொல்கிறார்கள் இது அம்மாவின் அரசு!பால் கலப்பட விஷயமாக வாய் திறக்க முடியாத அமைச்சருக்கு ஏதாவது பேசித் தம் இருப்பைக் காட்டவேண்டிய முனைப்பு. “டிரம்ப் வந்தாலும் ஒபாமா வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது -
 மோடி பார்த்துக்கொள்வார்,இரட்டை இலைச் சின்னத்தை மோடி வாங்கித் தருவார்” என்று திருவாய் மலர்ந்து அருளினார். 

தேர்தல் ஆணைய விசாரணையில் சின்னம் இருக்கும்போது மோடி சின்னத்தைப் பெற்றுக் கொடுப்பார் என்றால் தேர்தல் ஆணையம் சுய அதிகாரம் உள்ள அமைப்பல்ல என்றுதானே பொருளாகிறது.
மோடியின் காலடியில் கட்சியையும் ஆட்சியையும் சமர்ப்பித்துவிட்டார் அமைச்சர்.- 

அமைச்சர்கள் சொல்கிறார்கள் இது அம்மாவின் அரசு!ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையைக் கடுமையாக எதிர்த்துவந்தார் ஜெயலலிதா. மாநிலப் பொருளாதார வளர்ச்சிக்குஇது மிகவும் கெடுதலான விஷயம் என்று கருதினார். 
அவருடைய மறைவிற்குப் பின் எவ்விதத் தடையுமின்றித் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிட்டது ஜி.எஸ்.டி. - அமைச்சர்கள் சொல்கிறார்கள் இது அம்மாவின் அரசு!

உணவுத்துறை அமைச்சர் இனிமேல் நியாய விலைக் கடைகளில் உளுந்தம்பருப்பு கிடைக்காதென்றும் கணடியன் பருப்பு, மசூர் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றுள்ஏதேனும் ஒரு பருப்பு மட்டும் ஒரு கிலோ வழங்கப்படும்என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆனால்வாயைத் திறந்தாலே பொய்யே வரும் வேறொரு துறைஅமைச்சர், நிருபர்களிடம் உளுந்தம் பருப்பு கிடைக்காதென்பது தவறான தகவல் என்று கூறியுள்ளார். 

துறைசார்ந்த அமைச்சர் கூறியதை அறியாமல் முரணாகப்பேசும் மற்றொரு துறை அமைச்சரை அடக்கி வாசிக்கக்கூறும் துணிவு முதலமைச்சருக்கு இல்லை. ஜெயலலிதாமுதல்வராக இருந்தபோது அமைச்சர்கள் ஆளாளுக்கு இஷ்டப்படி பேச முடிந்ததா? - 

அமைச்சர்கள் சொல்கிறார்கள் இது அம்மாவின் அரசு!கோவையில் தம்மிச்சையாக ஆளுநர் ஆய்வு நடத்தியது தொடர்பாகப் பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. 
உறுதி மிக்கவர் ஆட்சியில் இருந்தால் பன்வாரிலாலுக்கு இப்படியொரு தைரியம் வந்திருக்குமா? 
மாநிலஉரிமைகள், மாநில சுயாட்சி ஆகிய விஷயங்களில் மத்திய அரசின் சட்டத்துக்குப் புறம்பான மேலாண்மையைச் சற்றேனும் அனுமதித்திருப்பாரா? 
முதல்வர் பழனிசாமிக்கு எந்த உறுத்தலும் ஏற்படவில்லை.

அவரைக் கேட்டால் ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோதுதானே தலைமைச் செயலகத்தில் அவர் இருக்கும்போதே தலைமைச் செயலாளரான ராம்மோகன ராவின் அலுவலகம் வருமான வரித்துறையினரால் சோதனையிடப்பட்டது என்பார். -
 அமைச்சர்கள் சொல்கிறார்கள் இது அம்மாவின் அரசு!

நாணயமான மத்திய அரசாக இருந்தால் முதல்வர்பழனிசாமியைச் சட்டப் பேரவையில் தம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோரியிருக்க வேண்டும். நெருக்கடி நிலையின்போது ஆளுநருக்கு ஆலோசகர்களாக இருந்த தவே, சுப்பிரமணியம் இருவரும்தமிழக நிர்வாகத்தை நடத்தவில்லையா? இப்போதிருக்கும்கோமாளி ஆட்சிக்குப் பதிலாக கொடுங்கோலாட்சி வெளிப்படையாக நடந்தால் பாஜக, அதிமுக இரண்டுக்குமே மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். 

பாஜகவில் எச்.ராஜா என்று ஒரு பெரிய மனிதர். தாமேஆட்சிப் பீடத்தில் இருப்பது போன்று ஒரு மிதப்பு.
“மாநில சுயாட்சி உளுத்துப்போய் விட்டது” என்பது அவருடைய மணிமொழி. 

கர்நாடக முதல்வர் தம் மாநில நலன் கருதி உரிமைகளை நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை ராஜா அறியவில்லையா? 
இந்தி ஆதிக்கத்துக்கு எதிரான குரல் அங்கே உரத்துமுழங்கப்படுவது அவருடைய செவிகளுக்கு எட்டவில்லையா?

கேரள முதல்வர் தமிழ்நாட்டில் நடந்த மாநில சுயாட்சி மாநாட்டில் பங்குபெற்றதை ராஜா எப்படி அறியாதிருக்க முடியும்?
இங்குள்ள உயர்க்கல்வித் துறை அமைச்சர் “ஆளுநரின்கோவை ஆய்வினால் மாநில சுயாட்சி பாதிக்கப்படுவதாகக் கூறுவது தவறு என்றும் மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசு, ஆளுநர், மாநில அரசு என ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று கூறியுள்ளார். 

மாநில நன்மைகளைக் காவு கொடுத்து மத்திய அரசுக்கு அடிபணிந்து போகும் கோழைகள் ஜெயலலிதாவின் பெயரை உச்சரிக்கக்கூட தகுதியற்றவர்கள். பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக முதலமைச்சராகவே தம்மைக் கருதிக்கொண்டு அதிமுகவை ஏளனமாகப் பேசிவருகிறார். அதிமுகவை, அதிமுகவினரே அழிப்பார்கள் என்கிறார்.

நியாயமான மனிதர் என்றால், அதிமுகவுடனான உறவில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டாமா?‘
கறுப்பு’ ராதாகிருஷ்ணனை ஓரங்கட்டச் செய்து ‘வெளுப்பு’ நிர்மலா மிகப் பெரிய பதவியில் அமர்ந்தபிறகாவது மனிதருக்கு ரோஷம் வரவேண்டாமா?

எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு என ஒன்று இருப்பதைப்போல அமைச்சர் கடம்பூர் ராஜூ, பொன்னார் கூற்றுக்குப் பிற அமைச்சர்கள் மவுனம் காத்தது போன்றுநில்லாது பதிலடி தந்துள்ளார். பதவி சுகமே பெரிதென்றெண்ணி பொன்னார் பேச்சுக்கு மறுப்புத் தெரிவிக்க அஞ்சும் ஈபிஎஸ், ஓ.பி.எஸ்வகையறாக்கள் ஜெயலலிதா வளர்த்த கட்சி அழிந்துவிடுமென்பதை ஏற்றுக்கொள்கிறார்களா?- அமைச்சர்கள் சொல்கிறார்கள் இது அம்மாவின் அரசு!

பழி நாணாப் பண்பில்லாதவர்களால் தமிழக நலன்களும் உரிமைகளும் தொடர்ந்து பறிபோய்க்கொண்டிருக்கின்றன. 

அடுத்துவரும் இடைத்தேர்தலில் அவர்களுக்குச் சம்மட்டி அடி கொடுப்பதே, இதற்கான பரிகாரத்தின் துவக்கம்.
தெ.சுந்தரமகாலிங்கம்
கட்டுரையாளர் : (தமுஎகச விருதுநகர் மாவட்டக்குழு உறுப்பினர்)
நன்றி:தீக்கதிர்.
======================================================================================
ன்று,
நவம்பர்-24.
  • ஏபல் டாஸ்மான், வான் டீமனின் நிலம்(தற்போதைய தாஸ்மானியா) என்ற தீவை கண்டுபித்தார்(1642)
  • சார்லஸ் டார்வின், ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் என்ற நூலை வெளியிட்டார்(1859)
=====================================================================================

பாஜகவின் தொடர் வெற்றியின் மந்திரம்.

உத்திர பிரதேச உள்ளாட்சிக்கு நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவில், மீரட் வாக்களர்கள் எந்த சின்னத்திற்கு அமுக்கினாலும் பாஜகவுக்கே வாக்கு விழுந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இஸ்ரத் ஜஹானின் கணவர் முஹம்மது ஷாஹித் போட்டியிடும் தொகுதியில், அவருடைய சின்னமான யானைக்கு வாக்களித்தால் அனைத்தும் தாமரைக்கு விழுந்துள்ளது.
சுமார் 150 வாக்குகள் அவ்வாறு விழுந்ததை ஷாஹித் கண்டுபிடித்துள்ளார்.
இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 பி.எஸ்.பி கட்சியினரும் இதனையே சுட்டிக் காட்டியுள்ளனர்.இதற்கிடையே துணை தேர்தல் ஆணையர் வெத் பிரகாஷ் கூறுகையில் வாக்கு எந்திர கோளாறு இருந்ததால் அவ்வாறு தவறாக பதிந்துள்ளது என்றார்.
😠தவறும்,கோளாறு ம் தேர்தல் எந்திரத்தில் அல்ல.தேர்தல் ஆணையத்தில்தான் உள்ளது..
இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி, கொடி, தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் அணிக்கே தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது என்றாலும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சின்னம் கிடைத்து விட்டதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததுள்ளார்.

அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அதாவது வியாழக்கிழமையன்று பிற்பகல் 2 மணியளவிலேயே தேர்தல் ஆணையம் தனது முடிவை வெளியிட்டது. 

ஆனால், பிற்பகல் 1.30 மணிக்கே இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைத்து விட்டது என்று சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். 

‘இந்திய தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பு வழங்கியிருக்கிறது; தேவையான ஆதராங்களை நாங்கள் அளித்த அடிப்படையில் ஆய்வு செய்து இந்த நல்ல தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்;
இது ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றும் அவர் கூறினார்.
அவருக்கு சற்று முன்பே, பிற்பகல் 1.15 மணியளவில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியும், “இரட்டை இலை சின்னம் ஒபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டிருப்பது, தர்மத்திற்கு கிடைத்த வெற்றி” என்றார்.

இது ஊடகங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிற்பகல் 1.45 மணியளவில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது, தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், ஒபிஎஸ் அணிக்குத்தான் இரட்டை இலை ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எப்படி கூறினார்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘தேர்தல் ஆணையர் முதல்வருக்கு மட்டும் போன் மூலமாக கூறினாரா?’ என்றும் கேட்ட அவர், ஒருவேளை அப்படி ஒரு தீர்ப்பை அளித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றும் கூறினார்.
இன்னொரு புறத்தில் டிடிவி தினகரன் ஆதரவு வழக்கறிஞரான செந்தூர் பாண்டியன், முதல்வரின் பேட்டி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் உடனடியாக புகார் மனுவையும் அளித்தார்.

இந்த அறிவிப்பு கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கும் முன்னரே 11 மணியளவிலேயே "ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்து முதல்வரானதுக்கு வாழ்த்துக்கள் என டுவிட்டியதை ஒத்திருக்கிறது.

தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் நேர்மையாகவும்,நாணயமாகவும் நம்பிக்கை தரும்படியாகவும் இல்லை.
அதன் செயல்பாடுகள் பாஜக,அதிமுகவுக்கே ஆதரவாக உள்ளது.பாஜக சொற்படியே தனது நடவடிக்கைகளை கொண்டுள்ளது என்பது உ.பி,உள்ளாட்சி தேர்தலில் யானை சின்னத்துக்கான வாக்குகள் தாமரைக்கு பதிவனத்திலேயே தெளிவாகியுள்ளது.
எந்திரம் கோளாறு என்றால் ஏன் வேறு சின்னங்களுக்கு பதிவாகவில்லை.
தாமரை வாக்குகள் ஏன் யானைக்கு போகவில்லை.?

இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவசர அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பத்திரிகையாளர்கள் தெரிவித்த உறுதியான கருத்து அடிப்படையிலேயே மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தேன் என்று விளக்கம் அளித்தார்.

தேர்தல் ஆணையத்தின் தற்போதைய தீர்ப்பு மூலம், அதிமுக என்ற கட்சி, சசிகலா - டிடிவி தினகரன் கையை விட்டு மட்டுமல்ல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையை விட்டும் போயிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில், இரட்டை இலைச் சின்னம், கட்சி, கொடி, தலைமை அலுவலகம் ஆகியவற்றை, இ.மதுசூதனன், ஒ. பன்னீர்செல்வம், செம்மலை அணிக்கு ஒதுக்கீடு செய்வதாகத்தான் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறதே தவிர, எடப்பாடி பழனிசாமி பெயர் எந்த இடத்திலும் இல்லை.எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் மதுசூதனன் அணியை ஆதரிப்பதாகத்தான் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள், தங்களை ஆதரித்தாலும் கூட, அவர்களை நம்ப முடியாது என்ற வகையிலும், அதிமுக கட்சியானது தங்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் ஓபிஎஸ் கைக்குப் போவதே நல்லது என்ற அடிப்படையிலும், இப்பிரச்சனையில் மத்திய பாஜக அரசு எடப்பாடிக்கு எதிராக கச்சிதமாக காய் நகர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, சசிகலா, டிடிவி தினகரனை கட்சியிலிருந்து ஓரங்கட்டி விட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில் ஓ. பன்னீர்செல்வம் சாதுரியாக அதிமுக-வை கைப்பற்றியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?