காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி...,

காய்ச்சலை குணப்படுத்த கூடியதும், முகத்துக்கு பொலிவு தரக்கூடியதுமான பப்பாளியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

நமக்கு எளிதில் கிடைக்க கூடியது பப்பாளி. 


இதன் அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடியது. இதில், விட்டமின் ஏ, பி, சி, கே, இ சத்துக்கள் உள்ளன. புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது இதயத்துக்கு நலம் தரக்கூடியது. 

நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை போக்குகிறது. மலக்குடலில் புற்றுவராமல் தடுக்கிறது.

பப்பாளி இலையை பயன்படுத்தி காய்ச்சல், மூட்டுவலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். 


தேவையான பொருட்கள்: 
பப்பாளி இலை, மிளகு, சீரகம், நெல்லிவற்றல். 

செய்முறை: 
காம்புகள் நீக்கிய பப்பாளி இலைகளை எடுக்கவும். இதனுடன், கால் ஸ்பூன் மிளகுப்பொடி, அரை ஸ்பூன் சீரகப்பொடி, சிறிது நெல்லிவற்றல் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை என 3 நாட்கள் குடித்துவர வைரஸ் காய்ச்சல் குணமாகும். காய்ச்சலால் உண்டாகும் மூட்டுவலி, உடல்வலி சரியாகும்.

பப்பாளி இலை அற்புதமான மருந்தாகிறது. 

உயிர்காக்கும் மருந்தாக பயன் தருகிறது. டெங்கு, சிக்குன் குன்யா, டைபாய்டு காய்ச்சலை பப்பாளி இலை குணப்படுத்தும். டெங்கு காய்ச்சல் வருகிறபோது ரத்த வட்டுக்களின் குறைபாடால் ஆபத்து ஏற்படும். இந்நிலையில், பப்பாளி இலை தேனீர் மருந்தாகிறது. 
காய்ச்சல் குணமாவதுடன் ரத்த வட்ட அணுக்கள் அதிகரிக்கும். இரும்பு சத்து அதிகரிக்கும். பாதுகாப்பான மருந்தாக பப்பாளி விளங்குகிறது.

பப்பாளி இலை சாறை பயன்படுத்தி ரத்த வட்ட அணுக்களை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: 

பப்பாளி இலை, மஞ்சள் பொடி, தேன். 

செய்முறை: 
பப்பாளி இலை சாறு 20 மில்லி எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து சாப்பிட்டு வர ரத்த வட்ட அணுக்கள் அதிகரிக்கும். கல்லீரல், மண்ணீரல் வீக்கம் சரியாகும். பன்றி காய்ச்சல், சிக்குன் குன்யா, டெங்கு, மலேரியா, டைப்பாய்டு காய்ச்சல் குணமாகும். பப்பாளி இலைகள் நோய் கிருமிகளை அழிக்க கூடியது
.
 பப்பாளி பழத்தின் பசை 2 ஸ்பூன் எடுக்கவும். அரை ஸ்பூன் சீரகப்பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை என 4 வாரம் சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள பூச்சிகள், முட்டைகள் வெளியேறும். உடலுக்கு பொலிவு தரும் மருந்தாகிறது. 

புறவூதா கதிர்களால் ஏற்படும் கருமையை போக்குகிறது. 
தலைமுடிக்கு செழுமையை தருகிறது. 
குடல், ஈரலுக்கு பலம் கொடுக்கிறது. 
அஜீரணத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் திரிகடுக சூரணத்தை கால் ஸ்பூன் அளவுக்கு எடுத்து காலையில் வெந்நீர் அல்லது தேனில் குழைத்து சாப்பிடும்போது பசியை தூண்டும். 
சளி, இருமலை தணிக்கும்.

=======================================================================================
ன்று,
டிசம்பர்-24.

  • அல்பேனியா குடியரசானது(1924)
  • லிபியா விடுதலை தினம்(1951)
  • லாவோஸ் விடுதலை பெற்றது(1954)
  • பெரியார்  ஈ.வெ.ராமசாமி இறந்த தினம்(1973)
  • தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் இறந்த தினம்(1987)
========================================================================================
😡எத்த னை முறை பட்டாலும் புத்திவரா r .k .நகர் வாக்காளர்கள் இனி சாலை ,குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்க தகுதியில்லாதவர்கள்.
வாக்குகளை 10000க்கு விற்றவர்களுக்கு வாய் திறந்து உரிமை கேட்க என்ன தகுதி இருக்கிறது?
வாக்குகளை விற்றவர்களுக்கு அதை வாங்கிய திருடன்தான் தலைவனாக வர முடியும்.?😡


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?