இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உளவு உரிமை

படம்
'மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, 10 அமைப்புகளுக்கு, நாடு முழுவதும் உள்ள கம்ப்யூட்டர்களை உளவு பார்க்க, முழு அதிகாரம் வழங்கப்படவில்லை. 'ஒவ்வொரு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னும், சம்பந்தப் பட்ட உளவு அமைப்பு, முன் அனுமதி பெற வேண்டும்'  என, மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது. உளவு அமைப்புகள்நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள கம்ப்யூட்டர், மொபைல் போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை, இடைமறித்து தகவல்களை பெற, சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட, 10 உளவு அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக, சமீபத்தில் தகவல் வெளி யானது.  இதற்கு, பல்வேறு அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.   இருப்பினும், நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த நட வடிக்கை எடுக்கப்படுவதாக,மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை கூர்வதவது: கம்ப்யூட்டர்களில் உளவு பார்ப்பதற்கு, அரசு அமைப்புகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு நடவடிக்கை எடுக்கும் முன், சம்பந்தப் பட்ட உளவு அமைப்பு,அதற்கான முன்அனுமதியை, அரசிடம் பெற வேண்டும். இந்த விஷ

இனி இல்லை அந்தரங்கம் என்று ஒன்று.

படம்
இந்தியாவின் அனைத்து கணினியிலுள்ள தகவல்களை கண்காணிக்கவும், பயன்படுத்தவும், வேண்டுமென்றால் அவற்றில் மாற்றம் செய்யவும் 10 அரசு முகமைகளுக்கு அதிகாரம் அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள உத்தரவு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. "இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, குற்றங்கள் தடுப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவை பேணுதல்" போன்ற பல்வேறு காரணங்களுக்காக எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் நாட்டிலுள்ள கணினிகளில் பதியப்பட்டுள்ள தகவல்களை ஆராய்வதற்கு தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000ன், 69(1) பிரிவின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் மின்னணு மற்றும் தகவல் பாதுகாப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, தேசிய பாதுகாப்பு முகமை, மத்திய நேரடி வரித்துறை, வருவாய் புலனாய்வுப் பிரிவு, நாட்கோடிக்ஸ் பிரிவு, உளவுத்துறை, நுண்ணறிவுப்பிரிவு போன்ற விசாரணை அமைப்புகளுக்கும், டெல்லியின் காவல் ஆணையருக்கும், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அசாம் பகுதிகளுக்கான சிக்னல் இண்டெலிஜென்ஸ் பிரிவு ஆகியவை மேற்கண்ட அதிகாரத

நம்மைக் கடந்த அரசியல்.

படம்
  2018ல்  தமிழக அரசியல் நிகழ்வுகள்.! அவசர நிலை'-யின்போது மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட காலத்துக்கு முன்பிருந்தே கலைஞர்  மகனான மு.க.ஸ்டாலின், திமுக மூலம் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். உண்மையிலேயே  கடந்த அரை நூற்றாண்டில் ஸ்டாலினுக்கு நிகராக திமுக-வில் உழைத்தவர்கள் மிகச் சொற்பமானவர்களே எனலாம்.  இருந்தும், குறைந்தபட்சம் ஓராண்டுக்கு முன்னராவது கிடைத்திருக்க வேண்டிய ‘தலைவர்' பதவி, ஸ்டாலினுக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட், 28-ல்தான் கிடைத்தது.  இவ்வளவு காலம் கழித்து வந்தாலும், ஸ்டாலின் இனி ஆற்றப் போகும் செயல் தான், தலைவர் பதவிக்கு அவர் தகுதியானவரா என்பதை எடுத்துக் காட்டும்.  மு.க.அழகிரி-யை இடம் தெரியாமல் ஒதுங்க  வைத்ததன் மூலம் தனது தலைமைக்கான பணியை சிறப்பாக செய்துள்ளார் ஸ்டாலின். '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

விடை தேடும் வினாக்கள்?

படம்
"ஆளுக்கு 15 லட்சம் வாங்க்க்கணக்கில் போடப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த நரேந்திரமோடி  வேலை வாய்ப்கள், பணமதிப்பிழப்பு, சிபிஐ,வெறுப்பைக் கக்கும் குற்றங்கள், ரபேல் -என்று எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலேயே பிரதமர் மோடி கடந்த நான்காண்டு காலத்தைக் கழித்துவிட்டார். " இதுதொடர்பாக தி ஒயர் இணைய இதழ், 15 கேள்விகளை மோடியிடம்  கேட்டிருக்கிறது.  1. வேலையில்லா வளர்ச்சி   வேலைவாய்ப்பு என்பது நாட்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். சென்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, நீங்கள் ஒரு கோடி பேருக்கு வேலை அளிக்கத் தவறியதற்காக, காங்கிரஸ் கட்சியைக் கேலி செய்தீர்கள்.  இப்போது நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன.  வேலைவாய்ப்பை உருவாக்குவது தொடர்பாக உங்கள் பதிவு என்பது மிக மோசம் என்று பல்வேறுசுயேச்சையான மதிப்பீடுகள் கூறுகின்றன. உதாரணமாக2017இல் 14 லட்சம் வேலைகள்தான் தரப்பட்டிருக்கின்றன. உங்கள் முந்த்ரா திட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட கடன்கள்கூட, உங்கள் அமைச்சர்களின் கூற்றின்படியே,அவ்வாறு கொடுத்திட்ட கடன்களில் பெரும்பாலானவை மிகவும் அற்பமானவை என்றும் அவற்றால் எவ்விதமான வேலை

ஊழலுக்கு அர்த்தம் தெரியாத ..., .?

படம்
  கூட்டணி கட்சிகளின் கைப்பிடிக்குள் ... எப்போதும் பாஜகவையும்,மோடியையும் பற்றியே செய்திகள் தருவது எங்களுக்கே சலிப்பாகத்தான் இருக்கிறது. அதை படிக்கும் நீங்களும் வெறுப்பில்தான் இருப்பீர்கள். ஆனால் இன்று இந்தியா முழுக்க காவியாக்கும் முயற்சியில் மோடி செயல்பட்டால் கூட அவர்கள் கொள்கையே இந்துத்துவாதான் என்று பொறுத்துக்கொள்ளலாம் . ஆனால் மோடி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையம் போடும் ஒவ்வொரு சட்டங்களும்  ஓட்ட மொத்த இந்தியாவையும் இந்துக்கள் உடன்பட அணைத்து மக்களையும் பாதிக்கும்,சிக்கலில் வாழ்க்கையை மாற்றிவிடும் ,ஏழைகளாக்கும் ,கொடுமைப்படுத்தும் விதமாகவே உள்ளதுதான் கொடுமையாக இருக்கிறது. பெருவாரியாக வாக்களித்த மக்கள் நலனை முற்றிலும் ஒதுக்கி விட்டு மதவெறியை மட்டம் தூண்டிவிட்டு கார்ப்பரேட்கள் ,அம்பானிகள்,மோடிகள் ,அதானிகள் போன்ற பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே நலன்களை குறிவைத்து பாஜக,மோடி பணியாற்றுவது ,ஆட்சி செய்வதுதான் நரேந்திர மோடி நிர்வாக,பொருளாதாரக் கொள்கையாக ள்ளது. நம் தமிழ்நாட்டை பின்வாசல் வழியே ஆட்சி செய்வது பாஜக தான் என்பது உலகமே அறிந்த உண்மை. ஆனால் தங்களின் சர்வாதிகார போக்கினால் இந்தியாவி