ஆதாரை கைவிடுவதே ஒரே சிறந்த வழி!

100 கோடிக்கும் மேலான ஆதார் எண்களின் விவரங்களைத் தங்கள் செய்தியாளர் எப்படிப் பெற்றார் என்ற ஒரு புலனாய்வு செய்தியை, தி டிரிப்யூன் நாளேடு, ஜனவரி 4 அன்று வெளியிட்டிருந்தது. 

செய்தியாளர் 500 ரூபாயை ஒரு விற்பனையாளரிடம் பேடிஎம் மூலமாகக் கொடுத்து, தனக்கென்று ஒரு இணைய முகவரியை கடவுச்சொல்லுடன் ஏற்படுத்திக்கொண்டு, ஆதார் அமைப்பான உய்தய் எனப்படும் யூனிக் ஐடண்டிபிகேசன் அத்தாரிட்டி ஆப் இந்தியா வில் பதிவு செய்யப்பட்டுள்ள எந்தவொரு பெயரையும், அவர்களின் முகவரி, போட்டோ, தொலைபேசிஎண் மற்றும் மின் அஞ்சல் முகவரியுடன் பெற முடிந்திருக்கிறது.உய்தய் (யுஐடிஏஐ) அமைப்பினரும் மத்திய அரசாங்கமும் பயோமெட்ரிக் தரவுகள் இல்லாமல் ஆதார்விவரங்களை எவரும் பெற முடியாது என்று கூறிவந்ததை எந்த அளவிற்கு போலியான கூற்று என்பதை செய்தியாளரின் புலனாய்வு போட்டு உடைத்திருக்கிறது.

ஆதார் திட்டம் ஐமுகூ அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.அது தொடங்கப்பட்ட சமயத்திலேயே, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி இத்திட்டம் குறித்து, எண்ணற்ற ஆட்சேபணைகளை எழுப்பியது. அவற்றில் ஒன்று. இந்தத் திட்டத்தின்கீழ் கணினியில் மென்பொருளைத் தயாரிக்கும்பணியை இரு அமெரிக்க நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

இந்த நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, அவை இந்திய மக்களிடம் சேகரிக்கும் அனைத்துத் தரவுகளையும் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அவற்றுக்கு உண்டு. இவ்வாறு, அமெரிக்கபாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்பினை வைத்துக்கொண்டுள்ள இந்த இரு அமெரிக்க நிறுவனங்களுக்கும் ஆதார் அட்டைதாரர்களின் தரவுகள் ஏற்கனவே முழுமையாகத் தெரியும்.
இவ்வாறு சேகரிக்கப்படும் தரவுகள் தனியார் வர்த்தக நலன்களுக்குப் பயன்படுத்தப்படவும் முடியும் என்பது கட்சி எழுப்பிய மற்றுமொரு ஆட்சேபணையாகும். 

அரசாங்கத்தின் இணைய தளங்களில் ஆதார் விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதற்கு ஏற்கனவே ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. அரசாங்கத்தாலும், ஆதார் அமைப்பாலும் பாதுகாப்பானது என்று சொல்லப்படும் வளையத்திற்குள் புகுந்து எவ்வளவு எளிதாக விவரங்களை வெளிக்கொணரமுடியும் என்பதை தி டிரிப்யூனின் புலனாய்வு வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது.

ஏர்டெல்லின் அண்மை துஷ்பிரயோகம்ஆதார் பயோமெட்ரிக் தரவு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பாக மற்றொரு அதிர்ச்சியளித்திடும் நிகழ்வு, சென்ற மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. ஏர்டெல்போன் நெட்வொர்க்கிற்கு மத்திய அரசாங்கம் அதனுடைய மொபைல் போன்களை ஆதார் எண்களுடன் இணைத்துக்கொள்ள அதிகாரம் அளித்திருந்தது. 

ஏர்டெல் நிறுவனம், அந்த ஆதார் எண்களில் உள்ள நபர்களை, தன்னுடைய ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி 
யுடன் வாடிக்கையாளராவதற்காக ஒரு வங்கிக் கணக்கைத் திறந்ததன் மூலம் துஷ்பிரயோகம் செய்திருப்பது தெரிய வந்தது. 

வாடிக்கையாளர்களின் சம்மதத்தைப் பெறாமலேயே, மிகப் பெரிய அளவில் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பயன்பாடுகளுக்கான மானியத் தொகைகளை, மக்களுக்கு அவர்கள் கடைசியாக ஆதார் எண்களை எந்தவங்கியில் வைத்திருக்கிறார்களோ அந்த வங்கிகள் மூலமாக அவர்களுக்குச் செலுத்தி வந்தது. 

தற்போதுள்ள விதிகளின்படி, சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றிற்காக மானியங்கள் வாடிக்கையாளர் பெயரில் கடைசியாக எந்த வங்கியில் ஆதார் எண்ணுடன் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறதோ அந்த வங்கிக்கு அனுப்பப்பட்டுவிடும்.

இந்த விதத்தில், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிஇத்தகைய மானியத் தொகை 190 கோடி ரூபாயைத்தங்கள் வங்கியில் சேகரித்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் ஆதார் எண்களை இதற்கு முன்பு பதிவு செய்துவைத்திருந்த தங்களுடைய முறையான வங்கிகளில் மானியங்களைப் பெறமுடியாதபோதுதான், இவ்வாறு ஏர்டெல் பேமெண்ட் வங்கியின் துஷ்பிரயோகம் வெளிச்சத்திற்கு வந்தது. உய்தய் (யுஐடிஏஐ) இப்போது ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியை சஸ்பெண்ட் செய்திருக்கிறது.
அவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை அபராதமாக விதித்திருக்கிறது. 
ஆயினும் அந்த வங்கி மோசடி செய்ததொகையுடன் ஒப்பிடும்போது, உய்தய் (யுஐடிஏஐ) அபராதம் விதித்துள்ள தொகை மிகவும் குறைவாகும்.

ரேசன் பொருட்கள் வாங்க தடையான ஆதார்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொது விநியோக முறையில் ரேசன் பொருள்களை வாங்குவதற்கும், சமூகப்பாதுகாப்புத் திட்டங்களின் கீழான பயன்பாடுகளைப் பெறுவதற்கும் ஆதார் எண்களைக் கட்டாயமாக்கக்கூடாது என்று கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது. பொது விநியோக முறையின் கீழ் ரேசன் பொருட்கள் பயோமெட்ரிக் சான்றுறுதியைப் பெற்ற பிறகுதான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. 

ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சான்றுறுதி அளிக்கும் முறை அமலுக்கு வந்துள்ள ராஜஸ்தான், ஜார்க்கண்ட், தெலுங்கானா போன்ற மாநிலங்களில், லட்சக்கணக்கான குடும்பங்கள் ரேசன்பொருட்களைப் பெற முடியாத கொடுமை நடந்துள்ளது.

அவர்களின் ரேசன் பொருள்களை மாநில அரசாங்கங்கள் அபகரித்துக் கொண்டுவிட்டன. காரணம், இம்மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ள மிஷின்களில் கைரேகை அடையாளம் பதியும் கருவி செயல்படவில்லை. பல ரேசன் கடைகளில்ரேசன் அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவே இல்லை.
விளைவு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் 11 வயது நிறைந்தசந்தோஷி குமாரி என்னும் சிறுமி பட்டினிக் கொடுமையால் இறந்தது போன்ற மிகத் துயரமான மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசம் மற்றும் இதர இடங்களிலும் இதுபோன்ற மரணங்கள் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. 

பொது விநியோக முறைக்கு ஆதார் அடையாளம் அவசியம் என்பது இவ்வாறு நாட்டில் ஏழை மக்களுக்கான உணவுப் பாதுகாப்பிற்குப் பகையானதாக மாறி இருக்கிறது.அரசு மருத்துவமனைக்கும் ஆதாரா?
இந்த லட்சணத்தில் அரசாங்கமானது பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு உட்பட வாழ்க்கையின் அனைத்து விதமானசங்கதிகளுக்கும் ஆதார் அடையாளத்தை இப்போது திணித்துக் கொண்டிருக்கிறது. சில அரசாங்க மருத்துவமனைகள் கூட ஆதார் அட்டை அடையாளத்தை, நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன் கோரக்கூடிய அளவிற்கு நிலைமைகள் சென்றிருக்கின்றன.

ஆதார் அடையாளம் இல்லாமல் ஒருவர் நாட்டின் பிரஜையாகவே இருக்க முடியாது, அ வரை இந்த அரசாங்கம் ஒரு மனிதனாகவே மதிக்கமாட்டோம் என்கிற நிலைக்குஅரசாங்கம் சென்று கொண்டிருக்கிறது.
ஆதார், ஓர் எதேச்சதிகார அரசாங்கத்தின் கைகளில்மற்றுமோர் ஒடுக்குமுறை கருவியாக மாறி, குடிமக்களுடைய அந்தரங்கம் மற்றும் அடிப்படை உரிமைகள் மீது அரசின் நுண்கண்காணிப்பினைக் கொண்டுவருவதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது.

ஆதார் எண்கள் உய்தய் (யுஐடிஏஐ) நிறுவனத்திடம் அப்படியொன்றும் பாதுகாப்பாக இல்லை என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த, தி டிரிப்யூன் நாளிதழுக்கு எதிராகவும், அதன் செய்தியாளருக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்திருப்பதிலிருந்தே அரசாங்கம் மற்றும் உய்தய் (யுஐடிஏஐ) அமைப்பின் உளப்பாங்கை உணர்ந்து கொள்ள முடிகிறது. 
ஆதார் அமைப்புமுறை குறைபாடுகளுடன் கூடியது என்றும், பூரணத்துவமற்ற அமைப்பு என்றும் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அரசாங்கமானது இவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த செய்தியாளர் மீதும், பத்திரிகை சுதந்திரத்தின் மீதும்தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.விலக்குவதே ஒரே வழி..

.அனைத்து அடிப்படை சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் என்று கொண்டுவருவதை நிறுத்திக்கொள்வதே இந்த முட்டுக் கட்டையிலிருந்து வெளிவருவதற்கான ஒரே வழியாகும். 
அனைத்து வங்கிக் கணக்குகளையும், மொபைல் தொலைபேசி எண்களையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்கிற உத்தரவை அரசாங்கம் விலக்கிக் கொள்ள வேண்டும்.
கடந்த ஐந்தாண்டுகளாக, ஆதாருக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தின் முன்பு நிலுவையில் இருந்துகொண்டிருக்கின்றன. 

இந்த மிகவும் முக்கியமான பிரச்சனைமீது காலத்தே முடிவு எடுக்காமல் நீதிமன்றம் அசமந்தமாக மனுக்களைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறது.2017 நவம்பரில் அமைக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வாயம் இப்போது இந்த மனுக்களை விசாரித்துக்கொண்டிருக்கிறது. 

இது மக்களையும், நாட்டின் ஜனநாயக சுதந்திரங்களையும் மிகவும் பாதிக்கும் ஒரு முக்கியப் பிரச்சனையாக இருப்பதால், நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பினை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இதில் வழங்கிட வேண்டும்.
, தமிழில்: ச.வீரமணி
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\=======================================================================================

ன்று,
ஜனவரி-16.
     உழவர் திருநாள்.
  • பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து பிரிட்டிஷார் கைப்பற்றினர்(1761)
  • வெர்மொண்ட், நியூயார்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது(1777)
  • கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது(2003)
========================================================================================
"ஞாநி' நினைவுகள்.

'வீழ்வேன் என்று நினைத்தாயோ'?
பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக படைப்பாளர், குறும்பட இயக்குனர், கல்வியாளர், அரசியல் ஆய்வாளர், அரசியல்வாதி என, பல தோற்றங்களில் வாழ்க்கை எனும் அனுபவத்தை சிறப்பித்துக் கொண்டு இருந்தவரும், 'தினமலர்' நாளிதழில், என் சக ஊழியருமான, திரு.ஞாநி சங்கரன் நேற்று முன்தினம் நள்ளிரவில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, நேற்று அதிகாலை இயற்கை எய்தினார்.
திங்கள் தோறும், பள்ளி மாணவர்களுக்காக, 'தினமலர்' வெளியிடும், 'பட்டம்' இணைப்பு மற்றும் வாரம் ஐந்து நாட்கள் வெளியாகும், 'தினமலர்' மாணவர் பதிப்பை உருவாக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாங்கள் திட்டமிட்டுக் கொண்டு இருந்த நேரத்தில், ஞாநியின் அறிமுகம் கிடைத்தது. அதுவரை அவருடைய எழுத்து மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாக மட்டுமே அவர் எனக்கு பரிச்சயம்.

பள்ளி மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட அவர், எங்கள் முயற்சியில் ஆர்வத்துடன் இணைந்து, வழிகாட்டியாக பொறுப்பேற்றார். மாணவர் இதழுக்கு, 'பட்டம்' என, பெயர் சூட்டியது, பல அடிப்படை கொள்கைகளை வகுத்துத் தந்தது, பல திறமையான நபர்களை அதில் எழுத வைத்தது என, அந்த பணியில் அவருடைய பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. அதே கால கட்டத்தில், தனது பிற தோற்றங்களையும் உயிரோட்டத்துடன் வைத்துக்கொண்டு இருந்தார். இவ்வளவும், கடும் சிறுநீரக கோளாறோடு! அசாத்தியமான உழைப்பாளி!

சில ஆண்டுகளாக உப்பில்லாத சாப்பாடு, அளவான குடிநீர், தொடர்ச்சியான, 'டயாலிசிஸ்'சிகிச்சை என, அவதிப்பட்டுக்கொண்டு இருந்தும், அதை பொருட்படுத்தாமல் எப்போதும் கலகலவென இருப்பார். அனைத்தையும் நையாண்டி செய்வார். வயது 64 ஆகியும், புதிய விஷயங்களை சிறுவன் போல உள்வாங்கிக்கொள்வார். மூன்று நாட்களுக்கு முன், இளைஞர்களுக்கு பிடித்த பாணியில் நாவல்களை எப்படி உருவாக்க வேண்டும் என, பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது, புதிதாக வந்துள்ள, 'பொன்னியின் செல்வன்' படக்கதை பற்றி பேசத் தொடங்கி, 'நீங்க எனக்கு ஒரு சில, யங் அடல்ட்ஸ் கதைகள், காமிக்ஸ் எல்லாம் படிக்கத் தரவேண்டி இருக்கு. தரேன்னு சொன்னீங்க...' என, நினைவூட்டினார்.
உடனே, அவருடைய மொபைல் போனில் ஜப்பான் காமிக்ஸ் படிப்பதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்து, 'காமிக்ஸ் பட்டியலை, இ - மெயில்ல அனுப்பறேன்' என்றேன். 
இன்னும் அனுப்பினபாடு இல்லை. அவருடைய வயதினர் எத்தனை பேர் புதிய காமிக்ஸுக்கு அறிமுகமாக தயாராக இருப்பார்கள்!
இப்படி வாழ்க்கை தரும் அனைத்து அனுபவங்களையும் அரவணைக்கும் போக்கு தான், பல துன்பங்கள் / ஏமாற்றங்களுக்கு இடையிலும், அவரை கசப்பான மனிதராக மாற விடாமல், உற்சாகமான மன நிலையில் வைத்திருந்திருக்க வேண்டும். இதுவே, அவரை பார்த்து நான் படித்த பாடம். அவரிடம் பிரகாசித்த இன்னொரு குணாதிசயம், தர்க்கம். 
கருத்து பன்மையை எதிர்பார்த்தே தர்க்கம் செய்வார். அதனால், அவருடனான தர்க்கங்கள் ஜாலியாக இருக்கும். எதைச் சொன்னாலும் ஒரு முரண்பாடான கருத்தைச் சொல்வார். அவர் நம் கருத்தை ஒப்புக்கொண்டாலும் கூட!

'ஆஹா... இதைப்பற்றி இப்படியும் யோசிக்கலாமா...' என, என்னை மறுபரிசீலனை செய்ய வைப்பார். இறுதியில், அவருடைய கருத்து ஏற்புடையதாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அந்த தர்க்கம் மூலம் என் சிந்தனை பலப்பட்டு இருக்கும். அந்த பலம் இப்போது விலகிவிட்டதே என, வருந்துகிறேன்.
இந்த தர்க்க குணம், அவருடைய அறிவு / கருத்து சார்ந்த வாழ்க்கை அணுகுமுறையில் இருந்து உருவாகி இருக்க வேண்டும். 
கருத்துகள், புதிய சிந்தனைகள், புதிய ஆக்கங்களை பற்றியே அவருடைய பேச்சு இருக்கும்.
பிற மனிதர்களை குறை சொல்வது, அவர்களின் சிறு சிறு பிழைகளை உதப்புவது என்பன எல்லாம் அவரிடம் அறவே கிடையாது. அதே போன்றது தான் அவருடைய எழுத்தும்; அழகியலை விட கருத்துக்கும், கதைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். எளிதாக புரியும் படி எழுதுவார்.


பாரதியை நேசித்தவர், பாரதியை குறிக்கும் முத்திரையாக பிரபலமாக இருக்கும், 'கண்கள்+மீசை' வரைபடத்தை உருவாக்கியவர், பாரதியின்;
"தேடிச்சோறு நிதந் தின்று - பலசின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்வாடித் துன்பமிக வுழன்று - பிறர்வாடப் பல செயல்கள் செய்து - நரைகூடி கிழப்பருவமெய்தி - கொடும்கூற்றுக் கிரையென பின்மாயும் - பலவேடிக்கை மனிதரை போலே - நான்வீழ்வே னென்று நினைத் தாயோ?"

என்ற கேள்விக்கு பதில் அளிப்பது போல், தன் வாழ்க்கையை வாழ்ந்து சென்றவர் ஞாநி. அவருடைய கண்கள் தானம் கொடுக்கப்பட்டன; உடல் மருத்துவக் கல்லுாரிக்கு தானம் கொடுக்கப்பட்டது.

-கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு
-துணைஆசிரியர், 'தினமலர்' 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?