பிரச்னை ஆண்டாள் அல்ல.!

ஆண்டாள் தான் இன்று பரபர செய்தி,தமிழ் நாட்டின் அத்தனை அவலங்களுக்கும் காரணம் கவிஞர் வைரமுத்து ஆண்டாளை தேவதாசி குலம் என்று சொன்னதால்தான் என்று அவாள் கூட்டம் போராடுகிறது.
வைரமுத்து மன்னிப்பு கேட்டால் தமிழ்நாடே செழிப்பாக்கி விடும் என்பது போல் கலகம் செய்து வருகிறார்கள்.
பார்ப்பன சூழ்ச்சி தெரியாமல் அவர்களால் தீட்டு என்று ஒதுக்கி வைத்தவர்களும் அவாள் சாணக்கியத்தனத்துக்கு   ஒத்து ஊதுவதும் ,வைரமுத்து தலைக்கு கோடிகளை விலை வைப்பதுதான் மிக வேதனை.

இன்று போராடும் கூட்டம் தமிழ் நாட்டின் மக்கள் பிரச்னைக்கு என்றாவது எதிர் குரல் கொடுத்துள்ளதா?

ஜல்லிக்கட்டு,மீத்தேன்,நியூட்ரான்,கெயில்,ஸ்டெர்லைட்,குடிநீர் பிரச்சனை,விலைவாசி உயர்வு ,பணமதிப்பிழப்பு சோகங்களுக்கு எதிராக ,பெட்ரோல் விலை உயர்வு என்று எதிலாவது இந்த ஆன்மிக அரசியலை இவர்கள் ,இந்த கும்பல் செய்துள்ளதா?

முதலில் இந்து என்ற ஒரு குறிப்பிட்ட மதம் கிடையாது.ஒவ்வொருவருக்கும் ஒரு சாமி இருக்கிறது.வழிபாடு முறை இருக்கிறது.
ஒரு வழிபாட்டின் சைவம்.மற்றோருவினர் அசைவம்.
ஒரு கூட்டத்துக்கு மாடு (பசு)கோமாதா.
சிலருக்கு எளிமையாக கிடைக்கும் உணவே மாட்டு இறைச்சிதான்.

சில சாமிகளுக்கு சக்கரைப்பொங்கல்,புளியோதரை நைவேத்தியம் .
எளியோர் சாமிகளுக்கு பன்றிக்கறியும்,சாராயமும்தான் படையல்.
இதுதான் இந்தியா முழுக்க உள்ள வழிபாடுகள்.

இந்தியாவுக்கு கைபர் கணவாய் வழியே வந்த ஆரியக் கூட்டம் திராவிடர்களை சிந்து நதிக்கரையில் இருந்த தள்ளித்தள்ளி தென்பகுதிக்கு ஒட்டியது.
வெள்ளைத்தோலையும் ,வஞ்சக வார்த்தைகளைக்காட்டியும் திராவிடர்களை இந்திய பூர்விகர்களை அவர்களை விட தங்களை மேம்பட்டவர்கள் என்று காட்டியது ஆர்ய கூட்டம்.
மக்களின் உழைப்பை சுரண்ட தங்களை ஆண்டவனுக்கு தரகர்களாக்கியது.

சிதறிய பல சாமிகள் வழிபாட்டையும் ஒன்றாக்கி அவர்களை இந்துக்கள் என்றாக்கியது.
ஏற்கனவே தமிழர்களின் வழிபாட்டில் இருந்த சிவன்,முருகன் ஆகியோர்களை அதை வழிபடுபவர்கள் சைவ உணவினர் என்பதால் தங்கள் வைணவ மதத்துடன் ஒட்டிக்கொண்டனர்.

சிவன்,பார்வதி முருகன் என்ற குடும்பத்தில் தங்கள் உருவாக்கிய பிள்ளையார் என்ற விநாயகரை நுழைத்தனர்.சிவனுக்கு முதல் பிள்ளையாக்கினார்.

பூணுல் இல்லா சிவன், முருகனுக்கு பூணுல் பூண்ட விநாயகர் எப்படி மகனாவார்?


பழைய தமிழ் நூல்களில் சிவன்,முருகன் வருகிறார்கள்,விநாயகர் பிற்கால கதைகளில்தான் வருகிறார்.
தலைச்சங்க இலக்கியங்களில் சிவன்,முருகன் என்ற அரசர்கள் பெயர்கள் உள்ளது.அவர்கள்தாம் ஒருகாலக்கட்டத்தில் அவர்களின் சிறப்பான ஆட்சி மூலம் கடவுளர்களாகி இருக்கலாம் என்பதே கணிப்பு.
இந்துக்கடவுள்களின் வரலாறு இப்படித்தான் உள்ளது.

இதில் தமிழில் திருவெம்பாவை பாடிய ஆண்டாளுக்கு சம்ஸ்கிருத ஆரியர்கள் வக்காலத்து வாங்கியது,வாங்குவது  ஏன்?
அவர் தமிழில் பாடியதாலேயே அப்படி "ஆண்டாள் என்று ஒருவர் பார்ப்பன குடும்பத்தில் இருந்திருக்க மாட்டார்.அவர் கற்பனையாக உருவாக்கப்பட்டவர் .திருவெம்பாவை பாடியது மாணிக்க வாசகர்,அப்பர் போன்ற வேறு ஆள்தான்" என்கிறார்.அவாள்களின் மூதறிஞர் ராஜகோபாலச்சாரியார் .

பின் ஏன் அவர்கள் எழுச்சி "அங்கேதான் இருக்கிறது அவாள்களின்  சூழ்ச்சி"
எத்தனையோ முறை நோட்டாவிடம் போட்டியிட்டாலும் அதை வெல்ல முடியா பாஜகவை தமிழ் நாட்டில் காலூன்ற வைக்க முயற்சி.அதற்காக மத வெறியை தட்டி எழுப்பி குளிர் காய இந்த வேலை.
ஆனால் இந்த முயற்சியும் வீண்.

காரணம் பெரியார்,கலைஞர் போன்றோர் பேசியும் எழுதியும் உருவாக்கி வைத்துள்ள பகுத்தறிவு.
இன்று ஆண்டாளுக்காகப் போராடுவது பார்பனக் கும்பல்தான்.சில பாஜகவினர்தான் .
ஆண்டாளுக்காக குரல் கொடுப்பவர்களின் பேச்சுகளில் அசிங்கமும்,நரகல் வாடையும்,கொலை வெறியும் தான் மேம்பட்டுள்ளது.
பேசிய பேச்சுகளுக்காக எச் .ராஜா ,நயினார் நாகேந்திரன் ஆகியோர் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருந்தாரா,இல்லையா என்று தெரியாதவரைப்பற்றி தேவதாசி(பொட்டு கட்டுப்பட்டவர் ) ஏன்று ஏற்கனவே கூறப்பட்ட கருத்தை சொல்லியதற்காக  வந்தவுடன் வைரமுத்துவும்,தினமணி நாளிதழும் மன்னிப்பு கேட்ட பின்னரும் பாஜக ராஜா வைரமுத்து தாயாரை அசிங்கமாக பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது.யார் அந்த தைரியம் தந்தது?

இந்த வார்த்தைகளை ராஜா கூறியதற்காக வைரமுத்து அவர் மீது வழக்கு தொடுக்கலாம்.
ஆனால்  தமிழர்களின் பெருந்தன்மையை காட்டியுள்ளார்.

திராவிடர்களின் இந்த பெருந்தன்மைதான் ஆரியர்களை நம்மை சூத்திரர்களாக்கியுள்ளது.
தலைக்கு விலை,நாக்கை அறுக்க விலை வைப்பதெல்லாம் பாஜக,ஆர்.எஸ்.எஸ் சினரின் வழக்கம்.
அதை தான் அவர்கள் மத்தியில் தீண்டத்தகாதவன் என்பதை அறியாமலேயே தன் இனத்துக்கு எதிராகவே நயினார் நாகேந்திரன் என்ற முன்னாள் அதிமுக,இந்நாள் பாஜகக்காரர் பயன்படுத்தியுள்ளார்.
இது நம் கையை வைத்தே நம் கண்ணைக் குத்தும் ஹௌடில்யரின் ஆரிய தந்திரம்.
இதற்கு அவர் துணை  போனதுதான் நம் இன பலகீனம்.

வைரமுத்து தலைக்கு கோடி ரூபாய் என்று நயினார் நாகேந்திரன் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தப் பின்னரும் அவர் மீது காவல்துறை இதுவரை வழக்கு தொடராதது ஏன்?
இங்கு ஆட்சி என்று ஒன்றும்,சட்டம்-ஒழுங்கு என்று ஒன்றும் இல்லையா?

இருபக்கமும் நடுநிலையாக இருந்து பேசி இந்த சூழலை மாற்ற வேண்டிய கட்டாயம் ஆள்வோருக்கு இல்லையா?
அல்லது இங்கு நடப்பது பாஜகவின் அடிமைகள் ஆட்சிதானா?

இந்த ஆண்டாள் பிரச்னையை தூண்டிவிடுவது தினத்தந்தி,தினமலர் நாளிதழ்களும்,தந்தி  தொலைக் காட்சியும்தான்.

இதன் பின்னணியைப் பார்த்தால் NDTV பிரணாய் ராய் வெளிக்காட்டிய பாஜகவின் திட்டத்திற்கான வேலை நடக்க ஆரம்பித்து விட்டது.

அதற்காக பிரபலமான ரங்கராஜ் பாண்டே தலைமையிலான தினத்தந்தி ,ரஜினிகாந்த் கூட்டம் களமாட ஆரம்பித்து விட்டன.
பகுத்தறிவு அரசியலில் இருந்து தமிழ் நாட்டை ஆன்மிக அரசியல் பக்கம் நகர்த்த பாஜக களம் இறங்கி விட்டது என்ற உண்மைதான் வெளியாகிறது.

அதற்கு தமிழ்நாட்டு மக்கள் பலியாகி விடக்கூடாது என்பதே தற்போதைய வேண்டுகோள்.
தற்போது பிரச்னை ஆண்டாள் அல்ல.ஆட்சி தான்.
=======================================================================================
ன்று,
ஜனவரி-19.


  • நன்னம்பிக்கை முனையை பிரிட்டிஷ் அரசு கைப்பற்றியது(1806)
  • கிழக்கிந்திய கம்பெனி, ஏமனின் ஏடென் நகரை கைப்பற்றியது(1839)
  • ஆங்கிலோ எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது(1899)
  • அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று (1903)
  • பாடகர் சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்ததினம்.(1933)
========================================================================================
உரிய விசாரணை தேவை 

தில்லி யு.சி.எம்.எஸ் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பட்ட மேற்படிப்பிற்காகச் சென்ற திருப்பூர் மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் இறந்தது தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்துள்ளதோடு பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி ஜிப்மரில் கிடைத்த வாய்ப்பைக் கூடஏற்காமல் புதுதில்லிக்கு விருப்பத்துடன் சென்றவர் அந்த மாணவர். அங்கு இருக்கப் பிடிக்கவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்துகொண்டார் என்று தில்லி காவல்துறையினர் கூறுவது ஏற்கமுடியாதது. 

தமிழகத்தில் இருந்து உயர்கல்விக்காக ஏராளமான மாணவர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று படித்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பாக மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதையே மாணவர் சரத்பிரபு மரணம் உணர்த்துகிறது.


காரணம் நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு கடும்போட்டி நிலவுகிறது. 
ஏற்கனவே புகழ்பெற்ற தில்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் படிக்கச்சென்ற திருப்பூர் மருத்துவர் சரவணன் 2016ஆம்ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். 

அவர் விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தில்லி காவல்துறையும் கல்லூரி நிர்வாகமும் முதலில் கூறின. சரவணன் கொலை செய்யப்பட்டால் காலியாகும் மருத்துவ மேற்படிப்பு இடத்தில் சேர வாய்ப்புள்ள சிலர் தான் அவரைக் கொலை செய்திருக்கக்கூடும் என்றுகுற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதை மூடிமறைக்க மருத்துவமனை நிர்வாகம் தீவிரமாக முயன்றது. 
தமிழக அரசியல் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக சரவணன் உடற்கூறு ஆய்வுகள் முறையாக நடத்தப்பட்டதால் அவர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னரும் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. அதேபோல், மருத்துவர் சரத்பிரபு மரணத்தில் உள்ள மர்மமும் விலக்கப்படவேண்டும். 
சரவணன் மரணத்திற்குப் பிறகாவது தமிழக அரசு விழித்துக்கொண்டதா என்றால் இல்லை.

வெளிமாநிலங்களுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் முறையாக தங்களது பெயரை மாநிலஅரசிடம் பதிவு செய்வதில்லை என்று கூறிதனக்குள்ள பொறுப்பை அரசு தட்டிக்கழிக்கக்கூடாது. சரத்பிரபு தற்கொலை செய்துகொள்ளக்கூடிய மனநிலையில் இருக்கவில்லை.

தற்கொலை என்று கூறிகுற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்காமல் தில்லி காவல்துறையினர் தீர விசாரித்து உண்மையை வெளிக்கொணரவேண்டும். 
மேலும் இந்தப்பிரச்சனையில் நேர்மையான விசாரணையை உறுதிப்படுத்தத் தமிழக அரசும் மத்திய அரசுக்குஉரிய அழுத்தம் தரவேண்டும். 

வெளிமாநிலங்களுக்குச் சென்று படிக்கும் தமிழக மாணவர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப்போக்கும் வகையிலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையிலும் நடவடிக்கைகள் அமையவேண்டும். 

மேலும் மாணவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்துக் கல்லூரி வளாகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதை கட்டாயமாக்கவேண்டும்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?