மெய்யான கடவுள் நம்பிக்கையாளர்களே

அன்புமிக்க நண்பர்களே, தோழர்களே, மெய்யான கடவுள்
நம்பிக்கையாளர்களே வணக்கம்…
*
‘மெய்யான’ என்ற வார்த்தையை நான் வலிந்து சேர்க்கவில்லை, அவசியம் சேர்க்கப்பட வேண்டிய காலகட்டம் இது என்பதால் சேர்த்திருக்கிறேன்.
ஆம், கடவுளின் பெயராலும் ஆன்மீகப் போர்வையிலும், கொலைகார, ஆபாச, ரவுடிக்கும்பல் வலுத்து வருவதால் ‘மெய்யான’ என்ற சொல் முக்கியத்துவம் பெறுகிறது…
ஒரு கட்டுரையை முன்வைத்து வைரமுத்து மீது வன்மத்தையும் ஆபாசத்தையும் வீசி, ஆர்எஸ்எஸ் கழிவு எச்.ராஜா ஆரம்பித்து வைத்த யுத்தம்…
இப்போது, பார்ப்பனியத்திற்கும் பார்ப்பனிய எதிர்ப்பிற்குமான அல்லது பார்ப்பனிய அடிவருடிகளுக்கும் முற்போக்காளர்கள் – பகுத்தறிவாளர்களுக்குமான யுத்தமாக மாறியிருக்கிறது. இதில் (மெய்யான) கடவுள் மற்றும் மத நம்பிக்கையாளர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே.
அவர்களுக்குத் தெரியும்…
ஏற்கனவே பல பார்ப்பன பிரபலங்களும், மத அடிப்படைவாதிகளும் சொல்லாததை – எழுதாததை கவிஞர் வைரமுத்து எழுதவில்லை என்பது. அதே நேரத்தில் ஆண்டாளை இழிவுபடுத்தும் நோக்கம் அதிலில்லை என்பது மட்டுமல்ல, உண்மையில் அந்தக் கட்டுரை ஆண்டாளுக்கு சூட்டிய பாமாலை என்பதை “தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பே சொல்லும். எனக்கென்னமோ இந்த தலைப்புதான் அவாளுக்கு இடிக்குதோ என்னமோ. “சமஸ்கிருதத்தை ஆண்டாள்” என்று வைத்திருக்கலாமோ!
ஒருவேளை வைரமுத்து பார்ப்பனராக இருந்திருந்தால், அல்லது ஒரு பார்ப்பன புலவர் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தால் நச்சு ராஜாவோ, மணிகளையும் தீபாராதனை தட்டுகளையும் கடாசிவிட்டு தெருவுக்கு வந்து ஓலமிடும் பார்ப்பன ஓதுவார்களோ, அவர்களது அடிவருடிகளோ, சூத்திர நித்தி மடத்து பார்ப்பனக் குஞ்சுகளோ நவத்துவாரங்களையும் மூடிக்கொண்டிருந்திருப்பார்கள் அல்லது மூட வைக்கப்பட்டிருப்பார்கள்.
ஆக, பிரச்சனை ஆண்டாளோ கடவுள் பக்தியோ அல்ல, கலவரபுத்தி!
(சுயநலமிக்க ஏதோ ஒரு காரணத்திற்காக இந்துத்துவவாதிகளிடம் மயக்கத்திலிருக்கும் வைரமுத்து மீது எங்களுக்கும் கடும் விமர்சனம் உண்டு என்பது தனி)
*
இனி வீடியோ மேட்டருக்கு வருவோம்…

நித்தி ‘மர்ம மடத்தின்’ பெண் குழந்தைகள் பேசும் ஆபாச வீடியோ குறித்த பதிவுகளை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு ஒரு விசயம் தெளிவாகப் புரியும்…
சமூக வலைதளங்களில் அதே பாணியிலான எதிர்வினைகள் வார்த்தைகளாகவும் மீம்ஸ்களாகவும் கொட்டிக் கிடக்கின்றன. அதுவெல்லாம் நித்தியின் சமூக விரோத மடத்தின் மீதான கோபம், கிண்டல் என்றாலும் எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை, அதில் நாங்கள் விருப்பக் குறியும் இடுவதில்லை.
எனது அல்லது தோழர் கருப்பு கருணா பதிவுகளில் நித்தி மடத்தின் மீதான அதீதக் கோபமும், தரங்கெட்டு ஆபாசமாகவும் வக்கிரமாகவும் பேச பயிற்றுவிக்கப்பட்ட அந்தக் குழந்தைகள் மீதான பரிவும்தான் இருக்கும்.
அதற்குக் காரணம், எங்களை வழி நடத்தும் மார்க்சிய தத்துவமும், நாங்கள் கற்றுக் கொண்ட பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளும்தான். பொதுவாகவே எங்களைப் போன்ற ஏராளமான நண்பர்கள், தோழர்களின் பதிவுகளும் இதேபோல் சமூகப் பொறுப்புடன்தான் இருக்கும்.
இதை நான் குறிப்பிட்டுச் செல்வதற்குக் காரணம், அப்படியான ‘இவர்கள் பாணி’ பதிவுகளையெல்லாம் விட்டுவிட்டு (அவர்களுக்கு வீடியோ போட்டால் இவர்கள் நாறிவிடுவார்கள்) எங்கள் இருவருக்கும் வீடியோ போடுவதற்கு ‘திருவண்ணாமலை பவழக்குன்று மலையை நித்தி கும்பல் ஆட்டையப் போடுவதை’ அம்பலப்படுத்திய கருணா மற்றும் அவருக்குத் துணை நின்ற நான் என எங்கள் இருவர் மீதான வன்மமே காரணம்.
ஆனால், கால் நூற்றாண்டுக்கும் மேலான எங்கள் அரசியல் வாழ்க்கையில் இது போல் ஆயிரம் கழிசடைகளையும், பொறுக்கிகளையும் போராட்டக் களத்திலும், கருத்தியல் தளத்திலும் சந்தித்தவர்கள் நாங்கள். இதையும் சந்திப்போம், எதையும் சந்திப்போம்.
இப்போது மீண்டும் வீடியோவுக்கு வருவோம்…
இதில், நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து போன்ற இரண்டு காமெடி பீஸுகள் (அந்த மாபெரும் கலைஞர்களோடு இதுகளை ஒப்பிட்டதற்கு அவர்கள் மன்னிப்பார்களாக) ‘வானொலிக்கு வரும் வாசகர் கடிதத்தை கடனுக்கு வாசிப்பவர்கள் போல்’ செல்லை கையில் வைத்துக் கொண்டு காமெடி பண்ணுவது எது தெரியுமா?…
ஓரிரு நாட்களுக்கு முன், அந்த மடத்துக் குழந்தைகள் குறித்த கருணாவின் பதிவில், கவலையுடன் எழுப்பப்பட்ட கேள்விகளை மட்டும் எடுத்து அதையும் அந்த குழந்தைகள் புகைப்படத்தையும் இணைத்து ஒரு போஸ்டராக்கி (அதவிட நமக்கு என்ன சோலி) எனது பதிவுடன் பகிர்ந்திருந்தேன். அதைத்தான் இப்படி “ஓலப்பாயில் நாய் ஒன்னுக்கடித்தது போல்” ஆபாசமாய் பேசி வீடியோவாக்கியிருக்காய்ங்க.
‘வீடியோவால் நாறிய கும்பல்’ வீடியோக்கே ‘அடிட்’ ஆகிட்டாய்ங்க. ஆ ஊன்னா ஆபாசமா பேசி ஒரு வீடியோவ ரிலீஸ் பண்ணிருவாய்ங்க!
*
இப்போ மீண்டும், ‘மெய்யான’ கடவுள் நம்பிக்கையாளர்களிடம் வருகிறேன்…
இந்த வீடியோவையும், இதற்கு முன் அந்தக் குழந்தைகள் பேசிய.. இல்லை இல்லை ஆபாச வாந்தியெடுத்த வீடியோவையும் பார்த்திருப்பீர்கள் (பார்க்கவில்லை என்றால் பார்த்து விடுங்கள்)
இப்போது உங்களிடம் சில கேள்விகள்.
1). இந்த பொறுக்கி சாமியார்கள் பேசுவதில் 90 சதவீதம் ஆபாசமும், வக்கிரமும்தான் வெளிப்படுகிறது. அப்படியென்றால் இதுதான் ஆன்மீகமா? இந்த ஆன்மீகத்தை ஏற்கிறீர்களா??
2). இந்த வீடியோவில், “இந்த குழந்தைகள் யார்?” என்ற கருணாவின் கேள்விக்கு…
இந்த ‘தர ரவுடி’ (அதுவே சொன்னது) “இதன்ன கேள்வி, இங்குள்ளவர்களின் குழந்தைகள் தான் இவர்கள். எம்பொண்ணுகூட அதுல ஒன்னுதான்” என்கிறது. ஆனால் பாவம் அந்த பொண்ணுகளோ, இதற்கு முந்தைய வீடியோவின் அரை மணி நேரமும் ‘யாரு யாருகூட படுத்தா’… (நாகரிகம் கருதியும், உலகம் பூராம் நாறிவிட்டதாலும் மேற்கொண்டு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை) என்ற ஆராய்ச்சியும் ‘பக்தி பரவசமும்தான்’.
இப்போது என் கேள்வி…
நம் வீடுகளில் பதின் பருவக் குழந்தைகளிடம் நாமும், நம்மிடம் அவர்களும் இப்படித்தான் பேசிக் கொள்வோமா? இதற்குப் பெயர் ஆன்மீகமா??
3.) பார்ப்பனிய கொழுப்பின் உச்சமாக ஒரு குட்டிப் பிசாசு “சேரி மாதிரி யோசிக்கிற பழக்கம் எங்களுக்கு இல்ல”ன்னு சனாதன விஷத்தை கக்குகிறது. அப்படியென்றால் இந்த பொறுக்கி மடத்தில் பிள்ளைகளுக்கு எதை ஊட்டி வளர்க்கிறார்கள்? இந்த ஆன்மீகம் உங்களுக்குச் சம்மதமா??
இன்னும் கேள்விகள் நிறைய இருக்கிறது என்ற போதிலும் “இந்தப் பருக்கைகளே இந்தப் பொறுக்கிப் பானைகளுக்குப் பதம்” என நினைக்கிறேன்.
நன்றி.
*
இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து, தங்கள் பக்கங்களில் கண்டனங்களைப் பதிவு செய்த, ஆதரவு தந்து ஒருமைப்பாட்டை தெரிவித்த அத்தனை தோழமைகளுக்கும் நன்றியும் அன்பும்.
*
இறுதியாக, எனது நேற்றைய முதல்நாள் பதிவு இங்குதான் சரியாகப் பொருந்தும் என்பதால். மீண்டும் உங்களுக்காக.. இல்லை இல்லை நமக்காக…
*
உண்மையிலேயே மனதார கடவுளை நம்புபவர்களுக்கும், கடவுள் என்று எதுவுமில்லை என அதை மறுப்பவர்களுக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த இரு தரப்புமே ஒருவர் உணர்வுகளை மற்றவர் மதிக்கத் தெரிந்தவர்கள். ஆனால். கடவுளைச் சொல்லிப் பிழைப்பு நடத்துபவர்கள் கடவுள் மறுப்பாளர்களுக்கு மட்டுமல்ல…
கடவுள் நம்பிக்கையாளர்களுக்கும் எதிரிகளே....
                                                                                                                      - வெண்புறா சரவணன் 
ஆன்மீகம் என்ற பெயரால் திறந்தவெளி ஆபாச விடுதி ஒன்றை நடத்திக் கொண்டிரு க்கும் நித்தியானந்தா ஒரு புதிய டிரண்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறான். அந்தப் பையனோட சமீபகால நடவடிக்கைகள் எல்லைமீறிப் போய்க் கொண்டிருக்கின்றன.
பள்ளியில் படிக்கவேண்டிய சிறுமிகளை ஆசிரமத்தில் வைத்துக் கொண்டு அவர்களு க்கு கெட்டகெட்ட கெட்டவார்த்தைகளால் எப்ப டித் திட்டுவது என்று டிரைனிங் கொடுத்துக் கொண்டிருக்கிறான். கருப்புக் கருணா
வில் ஆரம்பித்து இன்று வைரமுத்துவரை அவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் அந்த சிறுமிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் வாயைத் திறந்தாலே கழிப்பறை யைத் திறந்ததுபோல் அவ்வளவு துர்நாற்றம். தாங்க முடியவில்லை. ஆன்மீகத்தை நேசிக்கக் கூடிய பொதுமக்கள் எப்படி இதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
நாத்திகர்களை நாத்திக நாதறிகள் என்று வசைபாடுவதும் அசிங்க அசிங்கமான வார்த் தைகளால் தங்களுடைய நாற்றமெடுத்த வாயைத் திறந்து துர்நாற்றத்தைப் பரப்புவது மான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பையனோ அதை ரசித்து ருசித்துக் கொண்டிருக்கிறான்.
தமிழகத்தில் உள்ள நித்தியனந்தாவின் அனைத்து ஆசிரமங்களையும் தமிழக அரசு விரைவில் இழுத்துமூட வேண்டும்.இல்லா விட்டால் என்போன்றவர்கள் நித்தியனந்தா வின் ஆசிரமங்களின் முன்பு “சாகும்வரை உண்ணாவிரதம்” இருப்போம் என்பதைத் தெரியப் படுத்திக்கொள்கிறேன்.
========================================================================================

ன்று,
ஜனவரி-20.

  • முதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்டம் மசாசூசெட்சில் இடம்பெற்றது(1892)
  • பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாக்கியது  அமெரிக்கா. (1887)
  • (இங்குதான் பிரபலமான ஜப்பானிய தாக்குதல் நடந்தது) 
  • வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு நீள திரைப்படம் திரையிடப்பட்டது(1929)
=========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?