ராணுவமும்,கல(க்)கமும் ?

டெல்லியை நோக்கி சில ராணுவத் துருப்புக்கள் வருவதாக ஆங்கில நாளேடு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி முன்பு வெளியிட்டது, ஆனால், அதுவும் ராணுவ புரட்சி போன்ற நடவடிக்கை இல்லை.
அந்த நேரத்தில் சில குழப்பங்கள் எழுந்ததாக கூறப்பட்டாலும், ராணுவ துருப்புக்கள் உடனடியாக திரும்பிச் செல்ல உத்தரவிடப்பட்டது.
ராணுவ புரட்சி எப்போது ஏற்படும்? நாட்டில் உறுதியற்ற தன்மை நிலவினால் ராணுவ புரட்சிக்கான வாய்ப்பு ஏற்படும். அரசியல் மோதல் உச்சத்தில் இருக்கும்போதும், ஜனநாயக அமைப்புகள் பலவீனமடைந்த நிலையிலும், நாட்டில் குழப்பமான சூழ்நிலை நிலவினாலும் ராணுவ புரட்சி ஏற்படலாம்.
முதல் உலகப்போரில் பங்கேற்ற இந்தியர்.

இதுபோன்ற நிலைமை இந்தியாவில் எப்போதுமே ஏற்பட்டதில்லை. இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்திய காலத்தில்கூட அரசியலில் இருந்து ராணுவம் விலகியே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
முப்படைகளின் தளபதிகளும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடன் எமர்ஜென்சி பற்றி விவாதித்திருக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
இருந்தபோதிலும் அதுபோன்ற இக்கட்டான சூழலிலும் இந்திய ராணுவம் அரசியலில் இருந்து விலகியே இருந்தது.
ஏனென்றால், அடிப்படையில் ஒழுங்குமுறைக் கொள்கைகளால் ஒன்றிணைக்கப்பட்டிருக்கும் இந்திய ராணுவம், சிவில் நிர்வாகத்தில் தலையீடு செய்யாத அளவு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்தியாவில் ராணுவ புரட்சி ஏற்படும் சாத்தியம் அசாத்தியமானது.
பாகிஸ்தான் விடுதலை அடைந்த சில நாட்களிலேயே தொடங்கிய ராணுவப் புரட்சி அந்நாட்டில் பலமுறை தொடர்ந்துள்ளது. ஆனால் ஆஃப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளைப் போன்றே இந்தியாவும் இதுவரை ராணுவப் புரட்சியை சந்தித்ததில்லை.
.ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தலைநகர் ஹராரேவில் தனது வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அங்கு ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
இதற்கு முன் துருக்கி மற்றும் வெனிசுவேலாவில் ராணுவப் புரட்சிகள் நடைபெற்றுள்ளன.ஆனால் ஆஃப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளைப் போன்றே இந்தியாவும் இதுவரை ராணுவப் புரட்சியை சந்தித்ததில்லை.
இதற்கு முக்கிய காரணம் இந்திய ராணுவத்தை உருவாக்கிய ஆங்கிலேயர்கள், மேற்கத்திய நாடுகளில் இருப்பதைப் போன்றே இந்திய ராணுவத்தின் அடிப்படையை கட்டமைத்துள்ளனர்.
பண்டைய ராணுவம் 

மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் ராணுவப் புரட்சி எதுவும் ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்திய ராணுவத்தில் 1857ஆம் ஆண்டு ஏற்பட்ட கலகத்திற்கு பிறகு, இந்திய ராணுவம் புனரமைக்கப்பட்டது. இந்தியா முழுவதிலுமிருந்து ராணுவத்திற்கு ஆள் எடுக்கப்பட்டனர்.

ராணுவத்தின் படைப்பிரிவுகள் சாதி அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், ஆங்கிலேய-இந்திய பாணியிலான பயிற்சியும், நியதிகளுமே பின்பற்றப்பட்டன.
இந்திய ராணுவத்தின் கட்டுக்கோப்புக்கு முக்கிய காரணம் இதுவே. 1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் வரை இந்திய ராணுவத்தில் வேறு எந்தவித கிளர்ச்சியும் ஏற்படாமல் கட்டுக்கோப்பாக நிர்வகிக்கப்பட்டது.
ஆனால், அந்த காலகட்டத்தில் நாட்டில் பல்வேறு ராஜியங்களும் தன்னாட்சி அதிகாரம் கொண்டிருந்த அரசுகளும் இருந்ததால், ஒற்றுமை குறைந்தது. ராணுவத்திலும் பிராந்திய மற்றும் சாதி அடிப்படையிலும் ரெஜிமெண்டுகள் இருந்தன.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சுதந்திர இந்தியாவுக்கான ராணுவம் உருவாக்குவதற்கான முயற்சிகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது 12 முதல் 20 ஆயிரம் வீரர்கள் மட்டுமே இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ) சேர்ந்தனர்.
எதிரிகளின் பிடியில் இந்திய தேசிய ராணுவத்தின் 40 முதல் 50 ஆயிரம் இந்திய வீரர்கள் இருந்தனர். அந்த சமயத்திலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
1946ஆம் ஆண்டு, பாம்பேயில் ராணுவ கிளர்ச்சி ஏற்பட்டது ஒரு விதிவிலக்கான சம்பவம் என்றாலும் அதுவும் கடற்படைக்கு எதிரான கலகமாகவே பார்க்கப்பட்டது. ஏனெனில் கிளர்ச்சியில் பங்கேற்ற பத்தாயிரம் பேரும் கடற்படையை சேர்ந்தவர்கள். அந்த சமயம் இந்திய ராணுவத்தின் மொத்த எண்ணிக்கை சுமார் 25 லட்சமாக இருந்தது.
அது இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம் என்பதும், இந்திய விடுதலைப்போர் உச்சத்தில் இருந்த சமயம் அது என்பதும் இந்த பாம்பே கிளர்ச்சியின் பின்னணியில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ராணுவத்தில் பணிபுரிந்தவர்களுக்கும் சுதந்திர தாகம் ஏற்பட்டது இயற்கையானதே.
கடற்படையில் ஏற்பட்ட கிளர்ச்சியின் தாக்கம் பல இடங்களில் எதிரொலித்தபோதிலும், ஒட்டுமொத்தமாக இந்திய ராணுவம் கட்டுக்கோப்பாகவே இருந்தது.
விடுதலைப் பெற்றபின்னர் இந்தியாவில் சில சிக்கல்கள் ராணுவத்தில் உருவாகத்தான் செய்தன.
ஆனால் அவை ராணுவத்தின் கட்டுக்கோப்பான அமைப்பினால் தானாகவே  விட்டன.
உதாரணமாக 1984ஆம் ஆண்டில் சிக்கலான சூழலை இந்திய ராணுவம் சந்திக்க நேர்ந்தது. அது இந்திராகாந்தி பிரதமராக இருந்து பஞ்சாப் பொற்கோயிலில் எடுக்கப்பட்ட 'ப்ளூ ஸ்டார்' நடவடிக்கை.
புளு ஸ்டார் நடவடிக்கை சீக்கியர்களின் புனித இடமான பொற்கோவிலில் நடைபெற்றது.தீவிரவாதி பிந்தரன் வாலேயை கைது செய்ய பொற்கோவிலில் நுழைந்த துணை ராணுவம் அங்கு பதுங்கியிருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் இறங்கியது.அதில் தீவிரவாதிகளும்,பிந்தரன் வாலேயும் கொல்லப்பட்டார்கள்.ஆனால் பொற்கோவில் சேதமடைந்தது.அதனால் இந்த நடவடிக்கைக்கு  எதிராக ராணுவத்தில் இருந்த சீக்கிய படைப்பிரிவில் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் பிற படைப்பிரிவுகள் ஒற்றுமையாக இருந்ததால் அந்த எதிர்ப்பு, மேகமூட்டமாய் கலைந்துவிட்டது. 
ஆனால் பிரதமர் இந்திராகாந்தியின் பாதுகாலராக இருந்த சீக்கியர் ஒருவர் அவரை சுட்டுக்கொன்று பழி தீர்த்துக்கொண்டனர்.
அறுபதுகளில், ராணுவத் தளபதி சாம் மானெக்ஷாவிற்கும் அப்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்டாலும், அதுவும் பெரிதாக உருவெடுக்கவில்லை.
உண்மையில், இந்தியாவில் முதல் இடைக்கால அரசு உருவானபோது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்திய ராணுவத்தை ஜனநாயக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
முதலில், அவர் 'தலைமை தளபதி' (கமாண்டர் இன் சீஃப்) என்ற பதவியை முடிவுக்கு கொண்டுவந்தார். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயே அதிகாரிகள் இந்த பதவியில் இருந்தனர். பிறகு ஜெனரல் கரியப்பா இந்த பதவியில் நியமிக்கப்பட்டார்.
இந்திய தலைமை தளபதி' (கமாண்டர் இன் சீஃப்)ஜெனரல் கரியப்பா 

ராணுவம் நவீனமயமாக்கப்படும்போது, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளின் முக்கியத்துவம் சமமாக இருக்கும் என்பதால் முப்படைகளுக்கும் தனித்தனி தளபதிகள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் மூவரும், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சரின் கீழ் செயல்படுவார்கள்.
ஜனநாயக அரசு மட்டுமே உச்ச அதிகாரம் பெற்றது
அந்த சமயத்தில் டெல்லி தீன்மூர்த்தி பவனம்தான் முப்படைகளின் தளபதியின் இல்லமாக இருந்தது. ராணுவத்தின் முதல் காமண்டர் இன் சீஃப்பாக இருந்த கரியப்பாவும் தீன்மூர்த்தி பவனில் வசித்தார்.
அந்த பதவி நீக்கப்பட்டபிறகு, பிரதமர் ஜவஹர்லால் நேரு, தீன்மூர்த்தி பவனத்திற்கு தனது இல்லத்தை மாற்றிக்கொண்டார்.
நாட்டின் ஜனநாயக அரசே மிகவும் உயர்ந்த சக்தியாக இருக்கும் என்ற செய்தியை இந்த நடவடிக்கைகள் தெள்ளத் தெளிவாகவும், உறுதியாகவும் பறைசாற்றின.
ஜெனரல் கரியப்பா அரசின் பொருளாதார கொள்கைகளை ஒருமுறை விமர்சித்தபோது, சிவில் விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று அவருக்கு நேரு கடிதம் எழுதினார். மேலும் கரியப்பாவை நேரில் சந்தித்தபோதும் ராணுவ தளபதியின் எல்லைகளை அவரிடம் அறிவுறுத்தினார் பிரதமர் ஜவஹர்லால் நேரு.

உண்மையில், இந்தியாவில் ஜனநாயகத்தின் அஸ்திவாரங்களில் ராணுவமும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. பின்னர், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போன்ற ஜனநாயக அமைப்புகள் ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்தின.
இதன்பிறகு, பாகிஸ்தானில் நடப்பது போன்ற ராணுவ புரட்சி என்ற பேராபத்து இந்தியாவில் முடிவுக்கு வந்துவிட்டது என்றே கூறலாம். 1958இல் பாகிஸ்தானில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் ஆஃப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் ராணுவ புரட்சிகள் ஏற்பட்டன.
இந்திய ஜனநாயகம் தனது சுயவலிமையில் நிலைபெற்றதால் ராணுவ புரட்சி என்ற ஆபத்து இந்தியாவை எப்போதுமே அண்டாது. அதில் இந்திய ராணுவத்தில் அரசியல் கலக்காமல் இருப்பது மற்றும் ஜென்ரல் கரியப்பாவின் இயல்பு மிக முக்கிய பங்காற்றியது என்றே கூறலாம்.
பிறிதொரு சமயம் ராணுவம் தொடர்பாக ஏற்பட்ட ஒரு சர்ச்சைக்கு காரணமானார் ஜெனரல் சாம் மானெக் ஷா. டெல்லியில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க ஒரு படைப்பிரிவை பயன்படுத்தினார் அவர்.
இது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு உரிய பதிலளித்த அவர், இதில் அச்சப்பட ஏதுமில்லை என்றும், இதுவொரு ராணுவ புரட்சிக்கான முயற்சி அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.
இந்திய ராணுவத்தில் ஏழு கட்டளையகங்கள் (commands) உள்ளன. ஒரே நேரத்தில் ஏழு கட்டளையகங்களுக்கும் ஒரு ஜெனரல் உத்தரவிடுவது நடைமுறையில் சாத்தியமற்றது.
காலம் மாறுகிறது, ஜென்ரல் வி.கே. சிங் ஓய்வு பெற்ற பின்னர் அரசியலுக்கு வருகிறார், தற்போதைய அரசில் அமைச்சராக பதவிவகிக்கும் அவர் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு சவால் விடுத்தார், அது தொடர்பான ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ராணுவ அதிகாரிகள் தற்போது ராணுவ தளவாடங்கள் பேரங்களில் ஆளும் கட்சி அமைசசர்களுடன் சேர்ந்து ஈடுபடும் செய்திகள் வெளியாவதும் ,சிலர் பதவி காலம் முடிந்த பின்னர் அரசியலுக்கு வருவதும் இந்திய ராணுவம் இதுவரை கட்டிவந்த கட்டுக்கோப்பை கலைத்து விடுமோ என்ற பயத்தை தருகிறது.
இந்திய அரசில் ராணுவம்,பாதுகாப்பு,வெளியுறவு போன்றவற்றில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இ.ஆ.பணி அலுவலர்கள்,,நீதிபதிகள் ஆகியோர் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்கனவே விதிகள் இருந்தால் அவை  கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் ஜென்ரல் வி.கே. சிங்,வினோத் ராய் போன்றோர் பெருகி தங்கள் பதவி காலத்திலேயே ஒரு சார்பாக நடந்து கொள்வது அதிகரித்து விடும்.அது இந்திய  ஆபத்து.
=======================================================================================
ன்று,
ஜனவரி-23.


  • ராமலிங்க அடிகளார் மறைந்த  தினம் (1873)
  •  சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1897)
  • இஸ்ரேல் சட்டசபை, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது(1950)
  • சென்னை மாநிலத்தில்(அன்றைய தமிழ்நாடு)தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது(1957)
  • புனித ரோம் பேரரசின் கீழ் லீக்டன்ஸ்டைன் நாடு 


                   "சுராங்கணி" பாப் பாடல் புகழ் "சிலோன் மனோகர்" சென்னையில் காலமானார்.
            \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
1556 - இதே நாளில் உலகவரலாற்றில் நிலநடுக்கத்தால் மிக அதிக உயிர்ப்பலி ஏற்பட்ட நிலநடுக்கம் சீனாவில் ஏற்பட்டது. சுமார் 8,30,000 பேர் இதில் உயிரிழந்தனர். 
இதன் நிலநடுக்க மையம் ஷாங்சி மாகாணத்தில் இருந்ததால், பொதுவாக 1556 ஷாங்சி நிலநடுக்கம் என்றும், மிங் வம்சத்தின் ஜியாஜிங் பேரரசர் காலத்தில் ஏற்பட்டதால் சீன வரலாற்றில், ஜியாஜிங் பெரும் நிலநடுக்கம் என்றும் இது குறிப்பிடப்படுகிறது. 
நிலநடுக்க மையம் இருந்த ஷாங்சி மாகாணத்தில் எதுவுமே மிச்சமின்றி அனைத்துக் கட்டிடங்களும் தரைமட்டமாயின. சில பகுதிகளில் புவியில் வெடிப்பு ஏற்பட்டு, 60 அடிக்கும் அதிக ஆழமுள்ள பள்ளங்கள் உருவாயின. 

அக்காலத்தில் மண்மேடுகளான லோயஸ் பீடபூமி போன்ற பகுதிகளில் யோங்டாங் என்னும் செயற்கைக் குகைகளில் ஏராளமான மக்கள் வசித்தனர். 
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் இவை முற்றிலுமாக அழிந்தது உயிரிழப்பு அதிகரிக்கக் காரணமாக அமைந்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில், மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் உயிரிழந்தனர். 
சீனப் பேரரசுக்குள் இருந்த 97 நாடுகள் பாதிக்கப்பட்டன. 
நிலநடுக்க மையத்திலிருந்து சுமார் 500 கி.மீ. சுற்றளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தால் பீஜிங்கில்கூட கட்டிடங்கள் லேசாகச் சேதமடைந்தன. அடுத்த 6 மாதங்களுக்கு இதன் தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டன. 
இந்த நிலநடுக்கம் குறித்துப் பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்களிலிருந்து, இது 8 ரிக்டர் அளவு இருந்திருக்கும் என்று நவீன அறிவியல் கணக்கிட்டுள்ளது. ஆனாலும் உலகில் ஏற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களில் இது மிகப்பெரியதல்ல! 
1960இல் சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.4-9.6 ரிக்டர் ஆகும்! 
அதைப்போலவே, மிக அதிக உயிரிழப்பு ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களிலும் இது மூன்றாமிடத்தையே பெறுகிறது. 
1931இல் சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 40 லட்சம் பேர் வரையும், 1887இல் சீனாவின் மஞ்சள்நதி வெள்ளத்தில் சுமார் 20 லட்சம்பேர் வரையும் உயிரிழந்தனர்.
==================================================================================================================================

மக்களாட்சி தத்துவம் இதுதானா?
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்வதில் தலைமைத் தேர்தல் ஆணையம் காட்டிய அவசரம், ஆணையத்தின் மீது சந்தேக நிழல்களை அதிகரிக்கச் செய்கிறது . 
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 20 பேர், சட்டமன்ற செயலர்கள் என்ற பெயரிலான ஆதாயம் தரும் பதவியை வகித்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் அவசர அவசரமாக அவர்களை தகுதிநீக்கம் செய்திட தலைமைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. 
இதற்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து 20 பேரின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்பாட்டை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. ஒருபுறம் போராட்டத்திலும், மறுபுறம் இந்த முடிவை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்து எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி.
இந்நிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், ஆதாயம் தரும் பதவியில் இருந்ததாக கூறி அவசர கதியில் அவர்களது பதவியை பறித்துள்ள செயலானது இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை நிகழாதது என்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு விமர்சித்துள்ளது.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மீது எழுந்த குற்றச்சாட்டைப் போலவே ஹரியானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அதுதொடர்பான மனுக்கள் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளன. 
அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆணையம், ஆம் ஆத்மி உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டை உடனடியாக எடுத்துக் கொண்டது சந்தேகத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது. 
மேற்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையா எனவும் மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 
கடந்த சில ஆண்டுகாலமாகவே தேர்தல் ஆணையத்தின் மீதான சந்தேக நிழல் அதிகரித்துள்ளது என்றும், சமீபத்தில் குஜராத் தேர்தலில் இதேபோன்ற அணுகுமுறையை ஆணையம் பின்பற்றியது கவனிக்கத்தக்கது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 
எந்தவிதமான கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபடாத சட்டமன்ற உறுப்பினர்களை, அவர்கள் ஆதாயம் தரும் பதவியில் இருந்ததாக எழுந்த ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் மட்டுமே உடனடியாக தகுதி நீக்குவது ஜனநாயக படுகொலை என்றே கருதப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது. 
ஆதாயம் தரும் பதவி என்ற பதத்தின் பொருள் என்ன என்பதை மறு வரையறை செய்யவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை கண்டு கொள்ளாமலேயே குடியரசுத்தலைவர் ஒருபக்க வாதத்துடன் நிறுத்திக்கொண்டு பதவி நீக்கம் செய்தது உண்மையிலேயே மக்களாட்சி தான் இந்தியாவில் நடக்கிறதா என்று கேட்க வைக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தங்களுக்கு பிடிக்காதவர்கள் என்பதால்  மத்தியில் ஆள்வோர் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி எதிர்தரப்பு வாதத்தை புறந்தள்ளி நீக்கம் செய்வது எந்தவகையில் மக்களாட்சியாகும்?
தேர்தல் ஆணையம் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதுடன் நின்று விட வேண்டும்.
அவர்களை தகுதி நீக்கம் செய்வதென்றால் அது நீதிமன்றம் மூலமே நடக்க வேண்டும்.அதற்கு மட்டுமே தேர்தல் ஆணையம் உதவ வேண்டும்.
வன்முறை, பணம் கொடுத்து ,சாதி-மத வெறியை தூண்டி வெற்றி பெற்றவர்களை ஆதாரத்துடன் நிரூபித்தும் இதுவரை யாரையாவது இந்த தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ததுண்டா?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?