சென்னையில் தீவிர (வாதிகளுக்கு) வசூல் ?

சென்னை, பெரம்பூரை சேர்ந்தவர், பிரதீப், கமல்.
இவர்கள்  இருவரும், அசாமில் இருந்து கள்ள துப்பாக்கிகள் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகளை, ரயிலில் கடத்தி வந்த போது ரகசிய தகவல் மூலம் தேடிய  வேப்பேரி காவல்துறையினரிடம்  சிக்கினர். 

இவர்களை விசாரித்தபோது "தமிழகத்தில், கள்ளத் துப்பாக்கிகள் விற்பனை மற்றும் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டதன் வாயிலாக, பாக்., பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய" தகவல் தெரியவந்துள்ளது.


அதன்படி  திருச்சியில் இரு பெண்கள்  துப்பாக்கிகளுடனும்,அவர்களுக்கு துப்பாக்கி கொடுத்து மறைத்து வைக்க சொன்ன சென்னையைச் சேர்ந்த  காவலர்  பரமேஸ்வரன் உள்ளிட்ட மூவரும்  கைது செய்யப்பட்டனர். 
இவர்களுக்கு தலைவன் பாக்., உளவாளி, முகமது ரபீக்  என்பதும் தற்போது அவன்  புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான் என்பதும் தெரிந்தது.



கொடுங்கையூரை சேர்ந்த, முகமது ரபீக், 2014ல், என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான். 

அசாமில் இருந்து, 10 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுக்களை, ரயிலில் கடத்தி வந்தது தொடர்பான வழக்கும், இவன் மீது உள்ளது.
இந்நிலையில், செயின் பறிப்பு வழக்கில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்ட பிரதீப்புடன் நட்பு ஏற்படுத்திய முகமது ரபீக், அவரை தன் சதி வேலைகளுக்கு உதவும் வகையில் தயார்படுத்தினார். தன் யோசனைப்படி செயல்பட்டால், ஆயிரக்கணக்கில் பணம் கிடைக்கும் என்றும், ஆசை வார்த்தை கூறினார்.

கள்ளத்துப்பாக்கி கடத்தி விற்பது, கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது தொடர்பான, விபரங்களையும் தெரிவித்தார். 

இதையடுத்து, ஜாமினில் வெளிவந்த பிரதீப், தன் கூட்டாளி கமலுடன் சேர்ந்து, ரபீக்கின் யோசனைப்படி, மேற்குவங்க மாநிலம், மால்டாவில் இருந்து, கள்ளத் துப்பாக்கிகள் வாங்கி வந்து, தமிழகத்தில் உள்ள ரவுடிகள், கூலிப்படையினர் மற்றும் சில முக்கிய புள்ளிகளுக்கு விற்றுள்ளார். 


மேற்குவங்கத்திற்கு கள்ள நோட்டுக்களை கடத்தி வரும், பாக்., உளவாளிகளை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து, அவற்றை பெற்று தமிழகத்திற்கு கொண்டு வந்து புழக்கத்தில் விட்டுள்ளார். இவர்களுக்கு, போலீஸ்காரர் பரமேஸ்வரன் உள்ளிட்டோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இவர்களை பகடைகாயாக பயன்படுத்தி, புழல் சிறையில் இருந்தபடி, மொபைல் போன் வாயிலாக, சதி திட்டம் தீட்டிய ரபீக், கள்ள துப்பாக்கி விற்பனை மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டதன் வாயிலாக, பாக்., பயங்கரவாதிகளுக்கு, நிதி திரட்டியது தெரிய வந்துள்ளது. 

மேலும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டும், ஒருங்கிணைப்பாளர், காஜா மைதீனுக்கும், ரபீக்கிற்கும் தொடர்பு இருக்கும் தகவலும் கிடைத்துள்ளது. அதனால், முகமது ரபீக்கை மீண்டும் கைது செய்து, காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதற்கிடையில், திருச்சியில் கைதான போலீஸ்காரர் பரமேஸ்வரன், சென்னை வழக்கறிஞர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிலருக்கு, துப்பாக்கி விற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

தற்போது  தனிப்படை போலீசார், துப்பாக்கி வாங்கியோரை தேடி வருகின்றனர்.
==========================================================================================
மனதில் உறுதி வேண்டும்,

ஒருவர் மன உறுதியுடன் இருக்க, தனக்குள் மன உறுதி ஏராளமாக இருப்பதாக நம்புவது மிக முக்கியம் என்கிறது ஆய்வு ஒன்று. 
மலைக்க வைக்கும் செயல்களை செய்து முடிப்பதற்கு முன், தனக்குள் மிகக் குறைந்த அளவே சுய கட்டுப்பாடும், உறுதியும் இருப்பதாக நம்புபவர்களை விட, தன்னிடம் அளவற்ற மன உறுதி இருப்பதாக நம்புபவர்கள், சிக்கலான காரியங்களையும் வெற்றிகரமாக முடிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 




சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில், 4,000 பேருக்கும் மேல் பங்கேற்ற ஆய்வின் முடிவு இது.


தனக்கு,வைராக்கியம் ( 'வில்பவர்') அதிகம் என்று நம்புபவர்களுக்கு, எடுத்த காரியத்தை முடிக்கும் மன உறுதி இருப்பதையும், தனக்கு வில்பவர் கம்மி என்று நினைப்பவர்களால், எடுத்த காரியங்களை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதையும் இந்த ஆய்வில் தெளிவாகத் தெரிந்தது,'

இதைத்தான் நம் வள்ளுவர் 
"எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் -எண்ணியார் 
திண்ணியாராகப்  பெறின் ."
என்று முன்பே கூறி சென்றார்.
என்னதான் அர்ஜுன் சம்பத்லாம் இந்து இந்துனு பார்ப்பானுகளுக்கு முட்டுக்கொடுத்து சூத்திரர்களிடம் சண்டை போட்டு வாங்கிக்கட்டிக்கொண்டாலும் அவனுகள பொறுத்தவரை "நாலு அடி தள்ளிதான் நிக்க வச்சிருப்பானுக" காரணம், அவனுகள பொறுத்தவரை நீ சூத்திரன் முடிந்தால் விஜயேந்திரனை உன்னிடம் கைகுலுக்கச்சொல் பார்க்கலாம் போடா சூத்திராம்பான்.நீ போன பிறகு உன்னால் தீட்டான இடத்தை புனித நீர் தெளித்து சரி செய்வான்.
இதுதான் அவாள் இந்துதர்மம்.
அவாளைப் பொறுத்தவரை நீங்கள் என்னதான் அடிபணிந்தாலும் சூத்திரன்தான்,தீட்டுதான் .சரிக்கு சரியாக சாமியார் எதிரே அவாள்கள் உட்காருவது போல் உட்கார விடமாட்டான்.ஆண்டவன் கருவறை அருகே கூட விடமாட்டான்.
அவாள் அர்ச்சகர் கருவறையில் பலானது பண்ணினாலும் தீட்டு அல்ல.ஆனால் நம் கால் பட்டாலே பரிகாரம் செய்தாகணும்பா .
=======================================================================================
ன்று,
ஜனவரி-30.
வள்ளலார் ராமலிங்க அடிகளார் மறைவு(1874)
  • இந்திய தியாகிகள் தினம்
  • உத்தமர் காந்தி இறந்த தினம்(1948)
  • ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது(1964)
  • பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது(1972)
=======================================================================================
கமல்ஹாசன் தான் சரிப்பட்டு வருவார்!
தினமலர் இணையதளத்தின் விவாத தள பகுதியில், அவ்வப்போது மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், முக்கிய சம்பவங்கள் குறித்த கேள்விகள் கேட்கப்படும். கடைசியாக கேட்கப்பட்ட கேள்வி
' "அரசியலுக்கு வந்தால் யார் வெற்றி பெறுவார்கள்? 
கமல்ஹாசன் ?ரஜினிகாந்த் ?' 

உலகம் முழுவதிலும் இருந்து 1600 தினமலர் இணைய தள வாசகர்கள், இதில் கலந்து கொண்டு ஓட்டளித்தனர். 

அரசியலுக்கு வந்தால் ரஜினியே முன்னணியில் இருப்பார் என்று சமீபத்தில், நடத்திய கருத்து கணிப்பு மூலம் தெரிய வந்தது. 

ஆனால், இந்தியா டுடே கூறியதற்கு  மாறாக தினமலர் கணிப்பு  முடிவு ஆச்சரியப்படுத்ததக்க வகையில் அமைந்தது.  

தினமலர் இணையதள வாசகர்கள் கமலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். 
அதாவது, கமலுக்கு ஆதரவாக விழுந்த ஓட்டு 67 சதவீதம். 
ரஜினிக்கு 33 சதவீதம் மட்டுமே . 
ஆக இந்தியா டுடே கருத்துக்கணிப்பு பெரும்பாலும் தமிழ் நாட்டு மக்கள் கணிப்பு அல்ல என்பதும் தமிழ் நாட்டில் இருந்து மேல்தட்டு மக்கள் மட்டுமே  கலந்திருப்பார்கள் என்ற ஐயத்தையும் உண்டாக்கியிருக்கிறது.
=========================================================================================


தமிழ் எழுத்துருக்களை யூனிகோடுக்கு மாற்றி தரும் அதியமான் எழுத்துரு மாற்றி, 
தகடூர் தமிழ் மாற்றி ஆகிய கருவிகளை உருவாக்கி தமிழுக்கு பெருமை சேர்த்தவர் தகடூர் கோபி..
==========================================================================================
நானும் ரவுடிதான்!


தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும்என்பதற்காக பாரதிய ஜனதாகட்சி என்னென்ன வெல்லாமோ சொல்லிப்பார்க்கிறது; என்னென்னவெல்லாமோ செய்து பார்க்கிறது. 
குஜராத் மாதிரி வளர்ச்சி கோஷம் தமிழ்நாட்டில் எடுபடாது என்பதால் ‘கவலையற்ற தமிழகம் கழகங்களில்லா தமிழகம்’ என்று விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள்; ஆனாலும் கூட மோடியா, இந்த லேடியா என்று பாஜகவுக்கு - மோடிக்கு சவால்விட்ட ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவை அவரது மறைவுக்குப் பிறகு கைப்பாவையாக்கி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆயினும் தமிழகத்தில் திராவிட அரசியலின் தாக்கத்தை மீறிச் செயல்பட முடியாது என்று எண்ணிவிட்டார்கள் போல. தமிழக பாஜக தலைவர்களில் ஒருவரும் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனின் ஈரோட்டு பேச்சைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

‘‘தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட திராவிட மாநிலங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் பாஜகவும் திராவிடக் கட்சிதான்’’ என்று அவர் கூறியிருப்பது நகைப்புக்குரியதாகும்.தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாஜக மேற்கொண்ட நடவடிக்கைகளை கொஞ்சம் பொன்.ராதாகிருஷ்ணன் பட்டியலிட்டால் நன்றாக இருந்திருக்கும். 

ஆனால் சொல்வதற்குஎதுவுமில்லை என்பதால் அதோடுவிட்டு விட்டார் போலும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லஇந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக் கும் உதவக்கூடியதாக அமைந்திருந்த சேது சமுத்திரத் திட்டத்தை - நாட்டின் பிரதமரே மதுரையில் துவக்கி வைத்த திட்டத்தை - ஊற்றி மூடியவர்கள் பாஜகவினர் தானே.அது தவிர வெள்ளச்சேதம், புயல்சேதம், வறட்சி, அண்மைக்காலத்து ஒக்கி புயல் நிவாரணம் என எதற்கும் தமிழகத்துக்கு உதவும் வகையில் மத்திய அரசும் பாஜகவும் நடந்து கொள்ளவில்லையே. 

காவிரிநீர், ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பிரச்சனையில் பாஜக என்ன செய்தது? 
செய்து கொண்டிருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாதா? 
ஆனாலும் கூட துணிந்து உண்மை யில்லாதவற்றை உண்மை போல பேசுவது அவர்களுக்கே உரியகுணம்தானே!ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவது என்ற உறுதிமொழியை நிறைவேற்ற மத்திய அரசு மறுக்கிறது என்றும் வேறு பல திட்டங்களை புறக்கணிக்கிறது என்றும் கூறியுள்ளதுதான் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும் வளர்ச்சி போல.

கேரளம், கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பாஜக என்னென்ன செய்து கொண்டிருக்கிறது என்பதும் அமைதியை கெடுக்கவும் வளர்ச்சியைசிதைக்கவுமே அங்கு பாஜக முயன்று கொண்டிருக்கிறது என்பதும் நாடறிந்தது. 

இந்த நிலையில் தான் நாங்களும் திராவிடக் கட்சிதான் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவதைப் பார்த்தால் ஒரு படத்தில் வடிவேலு நானும் ரவுடிதான் எனச் சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

                 சீன விமான நிலையத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும்  வரவேற்பு 
அவரவர்  கொடியுடன் மொழியில்.                              இந்தியர்களுக்கு  வரவேற்பு.                                                                    


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?