இடுகைகள்

பிப்ரவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவே முதன்மை எலும்பு சந்தை

படம்
உடல் உறுப்புகளிலேயே அதிக விலை உடையது எலும்பு மஜ்ஜைதான் என்கிறார்கள். சர்வதேச மார்க்கெட்டில் வெறும் 10 கிராம் எலும்பு மஜ்ஜை 23,000 டாலர் வரை  விலைபோகுமாம்.   மனித எலும்பு வாங்க இந்தியா வாங்க.. காஞ்சிபுரம் மாவட்ட பாலேஸ்வரத்தில் இயங்கி வந்த முதியோர் காப்பகத்தில் இறந்தவர்களின் உடல்களில் இருந்து எலும்புகள் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் இரண்டாவது நாளாக 200 பேர் முதியோர் இல்லத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் தொடர் சோதனையில் முதியோர் இல்லத்திற்குள் பாதாள பிணவறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்றோர் காப்பகத்தில் தினந்தோறும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகிக்கொண்டிருக்கிறது.  ஆதவற்றோருக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி இங்கே தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சரியான உணவு மற்றும் பராமரிப்பு இல்லாமல் இருப்பதோடு அவர்களை வெளியில் விடவும் நிர்வாகம் மறுப்பது தெரிய வந்தது. பாலேஸ்வரம்  முதியோர் காப்பகம்   கடந்த 20ம் தேதி காப்பகத்திற்கு சொந்தமான வாகனத்த

மோடி ஆட்சியும் ,இன்றைய ஊழலும் !

படம்
காங்கிரசு ஊழல் கட்சி என்று செல்லுமிடமெல்லாம் ஊதி வருகின்ற பிரதமர் மோடி தனது  ஆட்சியில் இப்போது வரிசை கட்டி வருகிற ஊழல் புகார்களைப்பற்றி பாராளுமன்றமானாலும் சரி,மக்கள் மன்றமானாலும் சரி வாயைத்திறப்பதே இல்லை. எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பி பாராளுமன்றத்தை முடக்கினாலும் கல்லுளி மங்கன் என்றால் எப்படி இருப்பான் என்பதற்கு எடுத்துக்காட்டாக உட்கார்ந்திருப்பார். காதில் மாட்டியதில் உறுப்பினர்கள் பேச்சைக்கேட்கிறாரா?அல்லது சம்ஸ்கிருத சுலோகங்களை கேட்கிறாரா என்பதையே கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தியவின் மனசாட்சியை சொல்லுகின்ற ஊடகங்களோ தங்கள் மனசாட்சியை பாஜக தரும் விளம்பரக்காசுக்கு விற்று விட்டதால் அதைப்பற்றி கேளிவியை எழுப்புவதே இல்லை. ஆனால் இதுவரை நடந்த ஊழல்களை எல்லாம் பல லட்சம் கோடிகளைத்தொடும் மோடி ஆட்சி கால ஊழல்கள் கிண்டலடிக்கிறது. மேலும் இதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த ஊழல்கள்,மோசடிகள் எல்லாம் மோடி ஆட்சிக்காலத்தில் அம்பானி,அதானி போன்ற மோடியின் நண்பர்கள் வட்டாரத்திலேயே நடப்பதுதான் அதிர்சியானது. அமித்ஷா போன்ற பாஜக தலைவர்கள்,மற்றும் அம்பானி உறவினர்கள் ,அதானி உறவு முறைகள் என்ற வட்ட

விமானத்தை தரையிறக்கும் சக்தி?

படம்
இது வேடிக்கையான நிகழ்வாக தெரியலாம். ஆனால் ஆங்காங்ககே நம்மில் பலர் அனுபவிக்கும் ,அனுபவித்த நம்மை சுருங்க வைத்த நம்மால் தவிர்க்க இயலா நிகழ்வுதான். என்ன  கொஞ்சம் இடம் ,பொருள் மாறி பெரிய அளவில் கலவரமாகி விட்டதுதான் உலக செய்தியாகி விட்டது. ஒருவாரம் முன்பு  டிரான்சேவியா விமான நிறுவனத்தின் விமானம் ஒரு  அதிரடி தாக்குதலை எதிர்கொண்டது. இதனால் அந்த விமானம் அவசரம்,அவசரமாக தரையிறங்கியது . துபையில் இருந்து நெதர்லாந்து சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் ஆஸ்த்திரியாவை சேர்ந்த பயணி ஒருவரின்  இந்த செயல் அல்லது தாக்குதல் முதலில் அனைவரின் மூக்கையும் பொத்திக் கொள்ளதான்  வைத்தது. ஆனால் அவரின் தாக்குதல் தொடரவே  நாற்றம் தாங்க முடியாமல் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.  இப்படி விமானம் தரையிறங்க காரணம்  " Fart Attack '' ( குசு தாக்குதல் ) என்று ஆவணங்களில் பதிவானது.  இந்த சம்பவம் முதலில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், வயிறு பற்றிய பிரச்சனைகளை கவலையுடன் அணுக செய்கிறது.  இந்த தாக்குதலின் மய்யமான  அந்த பயணியின் அப்போது என்ன மனநிலை கொண்டிருந்திருப்பார். நிசசயம் ஒரு விமானத்தையே

ஐ.டி துறையின் ஒப்பந்த கூலிகள்?

படம்
இ லட்சங்களில் சம்பளம் என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்திய ஐ.டி துறையில் நிலவுகின்ற வேலைநிலைமை காண்டிராக்ட் தொழிலாளர்களின் வேலை நிலைமையை ஒத்திருக்கிறது. ஐ.டி துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் தமது பணியிடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் சிலவற்றைப் பாருங்கள். அமர்த்து & துரத்து (hire & fire) என்கிற கொள்கைப்படி இஷ்டம் இருந்தால் கொடுக்கின்ற சம்பளத்துக்கு வேலை செய்; இல்லையென்றால் ஓடிப்போ என்று வேலையை விட்டு துரத்துதல் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு ஷிப்டுகள் அளவுக்கு வேலை செய்வது கூடுதல் நேரம் உழைப்பது என்கிற பழக்கத்தின் உச்சகட்டமாக வாரத்தின் ஏழுநாட்களும் உழைப்பதாக வளர்ந்து நிற்பது. வாராந்திர விடுமுறை என்பது கேள்விக்குறியாவது. 8 மணிநேர வேலைக்கு மேல் செய்யப்படுகின்ற வேலைக்கு மிகை நேரப்பணி (ஓவர்டைம்) அடிப்படையில் இரட்டிப்பு சம்பளம் தராமல் ஏய்க்கப்படுவது. ’எச்.ஆர்’ என்கிற பெயரில் வலம் வருகின்ற அடியாளுக்கு ஊழியர்கள் நடுங்குதல். பெண் ஊழியர்கள் மீது பாலியல் வக்கிரங்கள் ஐ.டி துறையில் வேலை செய்வது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய இளைஞர்களின் கனவு வாழ்க்கையாக இருந்து வந்தது. டி.சி.எ