போட்டுத் தாக்கு, போட்டுத் தள்ளு.

மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலம் தற்போது மாநில முதலமைச்சராக  யோகி ஆதித்யநாத் பொறுப்பில் வந்தது முதல் "என்கவுண்டர்" செய்யும் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்திருக்கிறது. 
உத்தரப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட 1200 என்கவுண்டர்களில், பொதுமக்களுக்கும், நாட்டின் நலனுக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடிய 40 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர்.
 அதை மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சட்டசபையிலேயே புள்ளிவிபரங்கள் கூறுகையில்  உறுதிபடுத்தினார்.

 போலிஸின் என்கவுண்டர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்று அவர் உறுதியாக சொன்னார்.
இந்த  என்கவுண்டர் விவகாரத்தில் ஆளும்யோகி ஆதித்யநாத், பாரதிய ஜனதா கட்சி மீது எதிர்கட்சிகள்,மக்கள்,சமூகநல,அமைப்புகள்  குற்றம் சுமத்துகின்றன. 
யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு எல்லா விதத்திலும் தோல்வியடைந்து விட்டதாகவும், அதன் குறைபாடுகளை பூசி மறைப்பதற்காக என்கவுண்டர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டுகிறது.
சமாஜ்வாதி கட்சி ராஜேந்திர செளத்ரி பேட்டியில் "உத்தரப்பிரதேசத்தில் ஆளும் கட்சித் தலைவர்களின் செயல்பாடு, அரசியலமைப்பை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக  மேலும், மாநிலத்தின் 22 கோடி மக்கள் அரசாங்கத்தின் இலக்காக உள்ளனர்.
விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர், இளைஞர்களுக்கோ வேலைவாய்புகள் இல்லை, நீதி கேட்டு லக்னோவுக்கு வரும் மக்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது.
மதுராவில் ஜனவரி 18ஆம் தேதியன்று நடந்த என்கவுண்டரில் மூன்று வயது  குழந்தை  துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானது.என்கவுன்டருக்கும் மூன்று வயது குழந்தைக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்? 

 நொய்டாவில் நடத்தப்பட்ட ஒரு என்கவுண்டரில் அப்பாவி முஸ்லிம்  ஒருவர் கொல்லப்பட்டார். அதன் பிறகு, மாநில அரசின் என்கவுண்டர்களின் இலக்கு சிறுபான்மை சமூகத்தினர் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளன.
என்கவுண்டரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர், மேலும் பழி வாங்கும் எண்ணமும் நிறைவேற்றப்படுகின்றன.ஆனால் குற்றவாளிகள்,குண்டர்கள் பாஜக முத்திரையுடன் வளம் வருகின்றனர்.மாட்டிறைசி என்று மக்களை தாக்கி கொள்கின்றனர்.
தங்களுக்கு வாக்களிக்காத பகுதி மக்களை தேர்ந்தெடுத்து தண்டிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் விவசாயிகளே அரசின் இலக்கு. என்கவுண்டர்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்."
என்றுள்ளார்.
என்கவுண்டரை அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைக்கு அரசு பயன்படுத்துகிறதா? குறிப்பிட்ட சிலர் இலக்கு வைக்கப்படுகிறார்களா? 
என்பது போன்ற கேள்விகளுக்கு உ. பி,  முன்னாள் ஐஜி எஸ்.ஆர். தாராபுரிஎ
"ன்கவுண்டர்களில் பெரும்பாலானவை மாநில அரசின் ஆதரவுடன்ஆள்வோர் தரும் பட்டியல்படியே  நடத்தப்படுவதாகவும், என்கவுண்டர்களில் 90% போலியானவை.
அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் என்கவுண்டர்களில், ஆளும் கட்சிக்கு எதிரானவர்களும் பயனில்லாதவர்களும், அவர்களால் ஒடுக்க விரும்பும் பிரிவினரும் இலக்காக இருப்பார்கள். உத்தரப்பிரதேச மாநில அரசு என்கவுண்டர் தொடர்பாக ஒரு புள்ளிவிவரம் வெளியிட வேண்டும். 

எனக்கு தெரிந்த வரையில் என்கவுண்டர்களில் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டோர் அதிக அளவில் இருப்பார்கள். உயர் சாதிகளை சேர்ந்தவர்கள் இருக்கமாட்டார்கள். 
அதில் என்கவுண்டர்களில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காலில் சுடப்பட்டவர்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று பிரித்து காண்பித்தால் உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும்.
என்கவுண்டர்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சென்று சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர் என்னிடம் கூறினார். 
காலில் சுடப்பட்ட சிலருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. 
எனக்கு பத்திரிகையாளர்கள்,காவல்துறை நண்பர்கள் கூறியதை வைத்துப் பார்க்கையில் அப்பாவி பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள் , தலித்துகளுமே என்கவுண்டரில்  இலக்கு." என்று பதில்  தருகிறார்.
90% அதிகமான என்கவுண்டர்கள் போலியானவை. 
உண்மையான என்கவுண்டர்கள் அரிதாகவே இருப்பதாக நம்புகிறேன். என்கவுண்டவர்கள் பெரும்பாலும், திட்டமிடப்படுகிறது அல்லது மாநில அரசின் விருப்பத்திற்கு ஏற்பவே நடைபெறுகின்றன
முன்னாள் காவல்துறை அதிகாரி  எஸ்.ஆர். தாராபுரி.


உத்தரப் பிரதேசத்தில்  ஆயிரக்கணக்கில் நடக்கும் என்கவுண்டர்களை  அடுத்து, மாநில அரசு இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.
என்கவுண்டர்கள் மூலம் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படுமா என்றால் காவல்துறை பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. போலிசாரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதைத்தவிர வி.ஐ.பி பாதுகாப்பு, தேர்வுகளுக்கு, தேர்தலுக்கு பாதுகாவல் பணி என்று அவர்கள், உண்மையான காவல்துறைப் பணிகளில் இருந்து மடை திருப்பப்படுகிறார்கள். இதனால்தான் குற்றங்களை கட்டுப்படுத்துவது கடினமானதாக இருக்கிறது.
சொராபுதீன் ஷேக், இஷ்ரத் ஜஹான், ஹாஷிம்பூரா என்கவுண்டர் ஆகிய பல என்கவுண்டர்கள் போலி என்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

தற்போது உ.பி.யோகி ஆத்யநாத் நடத்தும் ஆயிரக்கணக்கான என்கவுண்டர்கள் பின்னணி நீதிமன்றத்தில் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவு உத்தரப்பிரதேசத்தில்  நடக்கும் ஆயிரக்கணக்கான  என்கவுண்டரில் எவ்வளவு உண்மை இருக்கும்.
அதுவும் மீண்டும்,மீண்டும் மதக்கலவரங்கள் ,மாட்டிறைச்சி கலவரங்கள் நடக்கும் இடங்களில் அல்லாமல் பிற்பட்டோர்,தலித்,முஸ்லீம்கள் பகுதியில் நடப்பதுதான் ஆத்யநாத் மீது ஐயம் வரவைக்கிறது.
காரணம் அங்கெல்லாம் பாஜக நோட்டாவை மட்டும் வென்ற இடங்கள்.

=========================================================================================
ன்று,
பிப்ரவரி-18.


  •  உலகிலேயே முதலாவது  விமான அஞ்சல்  இந்தியாவின் அலகாபாத்தில் ஆரம்பமானது(1911)
  • முதல் முறையாக ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது(1929)
  • காம்பியா விடுதலை தினம்(1965)
  • அணுகுண்டை கண்டுபிடித்த ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் இறந்த தினம்(1967)

==========================================================================================
அஞ்சல்களை விமானத்தில் அனுப்பும் வழக்கத்துக்கு முன்னோடி இந்தியாதான்.
ஓலை அனுப்புவது என்பது வழக்கமாக இருந்தாலும் அஞ்சல் சேவையில், அஞ்சல் தலையை ஒட்டி, அஞ்சலைக் கொண்டுபோய்ச் சேர்க்க முன்கூட்டியே கட்டணம் வசூலிக்கும் முறையைப் புகுத்தியது பிரிட்டிஷ்காரர்கள்தான். 
சர் ரௌலட் ஹில் என்பவர்தான் இதை ஆரம்பித்து வைத்தார். 
அதன் பிறகுதான் ‘பிளாக் பென்னி’ என்றழைக்கப்படும் அஞ்சல் முத்திரை பயன்பாட்டுக்கு வந்தது. பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் உருவப்படத்தை அந்த அஞ்சல் தலையில் பொறித்தனர்.
 1908-ல் விமானத்தில் பறப்பதைச் செம்மைப்படுத்தி உலகில் வழக்கத்துக்குக் கொண்டு வந்தார்கள் ரைட் சகோதரர்கள்.
அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தது பிரிட்டிஷார் என்றாலும் விமானத்தில் அஞ்சல் சேவையைத் தொடங்கியவர்கள் இந்தியர்கள்..
 உத்தரப் பிரதேசத்தின் அலாகாபாத் நகரில்தான் அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. 
 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கே கும்பமேளாவின்போது அலாகாபாதில் இந்த சேவை முதல்முதலாகத் தொடங்கியது.
மேளாவை முன்னிட்டு, அரசு சார்பில் தொழில் – விவசாய பொருள்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. அங்கு வரும் மக்கள் விவசாயத்திலும் தொழில்துறையிலும் ஏற்பட்டுவரும் நவீன மாற்றங்களை நேரில் பார்த்து மகிழ ஏராளமான இயந்திரங்களையும் வேளாண் கருவிகளையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள்.
 அதில் 2 விமானங்களும் இருந்தன! அந்த விமானங்கள் பகுதிபகுதியாகப் பிரித்து எடுத்துவரப்பட்டு அலாகாபாதில் மீண்டும் கோக்கப்பட்டு முழு வடிவம் பெற்றன.
வால்டர் ஜி வைந்தம் என்ற ராணுவ அதிகாரி, அஞ்சல்துறை அதிகாரிகளை அணுகி, சில அஞ்சல் பைகளை விமானத்தில் எடுத்துச் சென்று வேறிடத்தில் இறக்க விரும்புவதாகக் கூறினார். 
அவர்களும் அதற்கு அனுமதியளித்தனர். 
டிரினிடி சர்ச் என்ற கிறிஸ்தவ மிஷனரி அமைப்பு அதற்கு ஆகும் செலவை ஏற்க முன்வந்தது. பொருட்காட்சி மைதானத்தின் மீது அந்த விமானத்தைப் பறக்க வைத்து மக்களைப் பரவசப்படுத்துவதென்று முடிவாயிற்று.
அப்போது நாட்டின் தலைமை சர்வேயராக இருந்தவர் தான் அஞ்சல்துறைக்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். அஞ்சல் பைகளை எடுத்துச் செல்ல அனுமதிப்பது என்ற முடிவுடன், அந்த சம்பவத்தை நினைவுகூரும் விதத்தில் சிறப்பு அஞ்சல்தலையை வெளியிடவும் அவர் தீர்மானித்தார். அஞ்சல் உறையில் அழகிய வண்ணச் சித்திரம், அஞ்சல்தலை ஆகியவற்றுடன் முதல் நாள் உறை வெளியிடப்பட்டது. 
‘முதல் விமான சேவை’, ‘உ.பி. கண்காட்சி அலாகாபாத்’ என்ற பொருள்தரும் இரு ஆங்கில வாசகங்கள் வட்டவடிவ முத்திரையாகத் தயாரிக்கப்பட்டு அந்த உறைமீது பொறிக்கப்பட்டன. 
சிறு மலைகள் மீது விமானம் பறப்பது போன்ற சித்திரம் வரையப்பட்டு உறைமீது பொறிக்கப்பட்டது. வழக்கமாக அஞ்சல் முத்திரை என்றால் கருப்பு வண்ணம்தான் பயன்படுத்தப்படும், அது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி என்பதால் மெஜந்தா வண்ணம் பயன்படுத்தப்பட்டது.
அந்த விமானத்தில்  6,500 கடிதங்களை மட்டும் ஏற்ற முடிவாயிற்று. 
கண்காட்சித் திடலிலிருந்து, 1911-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதியன்று மாலை 5.30 மணிக்கு அஞ்சல் பைகளுடன் விமானம் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வியப்பும் மகிழ்ச்சியும் முகங்களில் ஒருசேர அந்த விமானம் தரையிலிருந்து புறப்பட்டதையும் விண்ணில் ஏறிப் பறப்பதையும் கண்கொட்டாமல் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்த்துக்கொண்டே நின்றனர்.

அலாகாபாதுக்கு புறத்தில் இருந்த அந்த இடத்தில்தான் நைனி மத்திய சிறைச் சாலையும் இருந்தது. 12 கிலோ மீட்டர் தொலைவுள்ள அந்தப் பயணத்துக்கு வெறும் 13 நிமிஷங்களே பிடித்தன.  தரையிறங்கியதும் அஞ்சல் பையிலிருந்தவை தரை, கடல், ரயில் என்று எல்லா வழிகளிலும் உரியவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மிகவும் அரிதானது அந்த நிகழ்ச்சி என்பதால் அதன் தனித்தன்மையைப் பாதுகாக்க அஞ்சல்துறை அதிகாரிகள் அந்த அஞ்சல் உறைகள் மீது பொறித்த வட்டமான முத்திரை இலச்சினையை உடைத்து அழித்துவிட்டார்கள். 
அடுத்த நாளையிலிருந்து பயன்படுத்த வேறொரு வட்டமுத்திரை தயாரிக்கப்பட்டிருந்தது.
 இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உலகின் பிற நாடுகளிலும் இருந்த மிக முக்கியப் பிரமுகர்களின் பெயர்களுக்கெல்லாம் சம்பிரதாயமாகக் கடிதங்கள் எழுதிச் சேர்க்கப்பட்டன. 
மோதிலால் நேரு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயிலும் தன்னுடைய மகன் ஜவாஹர்லால் நேருவுக்குக் கடிதம் எழுதி அந்த அஞ்சல் பையில் சேர்த்திருந்தார்.
இந்த முதல் விமான அஞ்சல் சேவை பற்றி  ‘லண்டன் டைம்ஸ்’ பத்திரிகை பிப்ரவரி 3-வது வாரத்தில் சிறிய செய்தி வெளியாகியிருந்தது. 
பிரிட்டிஷ் மகாராணிக்கும் ஐந்தாவது ஜார்ஜுக்கும் அன்றைய இந்திய அதிகாரிகள் எழுதிய ‘முதல் விமானசேவைக் கடிதங்கள்’ இப்போதும் பக்கிங்காம் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டு மிக பத்திர மாகப் பாதுகாக்கப்படுகின்றன. 
சுமார் 40 கடிதங்களில் அந்த விமானத்தின் புகைப்படம், அதை ஓட்டிய விமானியின் கையெழுத்துடன் இடம்பெற்றிருந்தது. 6,500 கடிதங்களில் சாதாரணக் கடிதங்கள், பதிவு அஞ்சல்கள், 40 அஞ்சல் அட்டைகள் என்று சில வகைகள் இருந்தன.
ஆனால் இதன் முக்கியத்துவம் அறியாமல் அந்தக் கடிதங் களைப் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற நினைப்பில்லாமல் தொலைத்து விட்டனர்.
அந்தக் கடிதங்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டவர்களிடம்கூட பராமரிப்பின்றி மிகவும் நைந்த நிலையில்தான் இருக்கின்றன. 
அஞ்சல் அட்டைகளில் சுமார் 10-தான் இன்னும் இருக்கின்றன. 
========================================================================================
                                                         1991 இல் வங்கி சேவை விளம்பரம்.
                            எப்படியிருந்த நான்,இப்படி ஆயிட்டேன்?-பொதுத்துறை வங்கிகள்.
========================================================================================
 மக்கள் பணம் 11,400 கோடிகளை நீரவ் மோடிக்கு வாரி வழங்கி சாதனை படைத்த  பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதல் வங்கி அலுவலகம்.கான்பட்றை சாலை,லாகூர்.(1894)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?