பொருளாதார கொள்(கை)ளை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11,360 கோடி ரூபாய் ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்திய அரசு, இந்திய வங்கிகளில் 2012க்குப் பிந்தைய  காலகட்டத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி அதிர்ச்சி தரும் தரவுகள் அதிகம்.



2012-2016 இடையிலான காலக்கட்டத்தில் மட்டும் நடந்த மொத்த  முறைகேடுகள் 22,743 கோடி ரூபாய்கள் 

ஆனால் 2017 &2018 முறைகேடுகள் நான்காண்டு முறைகேட்டை விட பன்மடங்கு  அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது.
பொது மக்கள் வங்கிகளில் வைத்திருக்கும் பணத்துக்கு வட்டி கொடுத்த நிலை மாறி ,பொதுமக்கள் சேமித்துள்ள பணத்தை ஏதாவது கரணம் சொல்லி வங்கிகள் எடுத்துக்கொள்வதும்,அபணத்தையே பெரும் நிறுவனங்கள் ,தொழிலதிபர்களுக்கு வராக்கடனாக கொட்டிக்கொடுப்பதும்,அவர்கள் ஏப்பம் விடுவதும் அவர்கள் பிரதமர் மோடிக்கு,பாஜகவுக்கு வேண்டியவர்களாக இருப்பதும் தற்போதைய பாஜக பொருளாதார கொள்கைளையாக  உள்ளது. 
 2017 ஆம் ஆண்டின் முதல் 9 மாதத்தில், 455 முறைகேடான பரிவர்த்தனைகள் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 
அதுபோல, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா-வில் 429 பரிவர்த்தனைகளும், ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் 244 பரிமாற்றங்களும், ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் 237 பரிவர்த்தனைகளும் முறைகேடாக நடந்துள்ளது.


இந்த முறைகேடான பரிவர்த்தனைகளில் பெரும்பாலானவை வங்கி ஊழியர்களின் துணையுடனே நடந்துள்ளது.
இந்தியாவின் 5 மிகப்பெரிய வங்கி முறைகேடுகள்:

2011 
பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், மற்றும் ஐ.டி.பி.ஐ அகிய வங்கிகளின் நிர்வாகிகள் 10 ஆயிரம் போலி கணக்குகளை உருவாக்கி 1,500 கோடி ரூபாய் அளவிற்கு அந்த போலி கணக்குகளுக்கு கடன் வழங்கி உள்ளனர் என்று 2011 ஆம் ஆண்டு, சி.பி.ஐ ஒரு விசாரணை நடத்தி இந்த முறைகேட்டினை வெளிக் கொண்டுவந்தது.
2014 
வைப்புத் தொகையில் 700 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என பல பொதுத் துறை வங்கிகளுக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு 9 வழக்குகளை பதிவு செய்தது மும்பை போலீஸ். அதே ஆண்டு, கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் பிபின் வோஹ்ரா, போலியான ஆவணங்கள் கொடுத்து சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1,400 கோடி ரூபாய் கடன் பெற்றது தெரியவந்தது.


இதற்கு மத்தியில், அதே ஆண்டில், சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்கே ஜெயின் லஞ்சம் பெற்று ரூபாய் 8,000 கோடி கடன் கொடுத்தார் என்ற தகவல் வெளியே வந்தது.

விஜய் மல்லையாவை கடனை திரும்ப செலுத்தாதவர் என பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் அறிவித்தன.
2015 
2015 ஆம் ஆண்டு வெளிநாட்டு பரிவர்த்தனை ஊழலுக்கான ஆண்டு. வெவ்வேறு வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் ஹாங்காங்க் கார்ப்பரேஷன் உட்பட வெளிநாட்டில் உள்ள பல போலியான நிறுவனங்களுடன் பரிவர்த்தனை மேற்கொண்டு இருக்கிறார்கள் என தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய தொகை 6000 கோடி ரூபாய்.
2016 
சிண்டிகேட் வங்கியிலிருந்து ஆயிரம் கோடி ரூபாயை வெளியே எடுத்து செல்வதற்கு நான்கு மோசடிப் பேர்வழிகள் ஒன்றாக இணைந்தனர். 380 போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு, போலி காசோலைகள், புரிந்துணர்வுக் கடிதங்கள், எல்.ஐ.சி. பாலிசிகள் மூலம் இந்த போலி பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டன.

2017 
2017ஆம் ஆண்டின் சிறப்பு, விஜய் மல்லையா மீதான வழக்குதான். 9,500 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, விஜய் மல்லையா மீது வழக்கு பதிந்தது சிபிஐ. அவர் 2016ஆம் ஆண்டே நாட்டைவிட்டு தப்பிச் சென்று இருந்தார். இப்போது, இங்கிலாந்தில் வசித்து வரும் அவர் மீது வழக்கு நடந்து வருகிறது.
இதே ஆண்டு, அடுத்த சில மாதங்களில், வின்சம் டைமண்ட்ஸ்க்கு எதிராக 7,000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. சிபிஐ இந்த நிறுவனத்திற்கு எதிராக ஆறு வழக்குகள் பதிவு செய்தது.
கொல்கத்தா தொழிலதிபர் நிலேஷ் பரேக், குறைந்தது 20 வங்கிகளை ஏமாற்றி அவர்களுக்கு இழப்பு உண்டாக்கியதாக 2017 ஆம் ஆண்டு சி.பி.ஐ-யினால் கைது செய்யப்பட்டார். வங்கிகளை ஏமாற்றிப் பெற்ற கடன் தொகையை ஹாங்காங்க், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் உள்ள போலி நிறுவனங்களுக்கு மடைமாற்றினார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.
இந்த வழக்கில், பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ராவின் முன்னாள் மண்டலத் தலைவர் மீதும், சூரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் மீதும், 836 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
2018
நீரவ் மோடியின் 11,360 கோடிகளுடன் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகள்  பாஜக கட்சியின் மோடி ஆட்சியில்தான் அதிகம் என்பதும்.பெருந்தொழில் அதிபர்கள்,கார்பரேட்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடை களில் 86% பாஜவுக்குத்தான் என்பதும் தற்செயல்கள்தான்.

==========================================================================================
ன்று ,
பிப்ரவரி -19.
  • துருக்மேனிஸ்தான் கொடி நாள்
  • தமிழறிஞர் உ.வே.சா' பிறந்த தினம்(1855)
  • கிராமபோனிற்கான காப்புரிமத்தை தாமஸ் எடிசன் பெற்றார்(1878)
  • கலிப்பொலி போர் துவங்கியது(1915)
  • ஐக்கிய ராஜ்யத்திடம் இருந்து சைப்பிரஸ் விடுதலை பெற்றது(1959)
============================================================================================
அழியும் மொழிகள்?
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தக் கூடிய, 22 பட்டியலிடப்பட்ட மொழிகள், 100 பட்டியலிடப்படாத மொழிகள் புழக்கத்தில் உள்ளன.அதே நேரத்தில், 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பயன்படுத்துவதால், 42 மொழிகள், வட்டார பேச்சு வழக்குகள் மிக விரைவில் அழிந்துவிடும் அபாயம் உள்ளது.

யுனெஸ்கோவும் இதை பட்டியலிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில், கோட்டா மற்றும் தோடா ஆகிய மொழிகள் காணாமல் போய்விடும். இந்தப் பட்டியலில் மிகவும் அதிகமாக அந்தமான் - நிகோபார் தீவுகளில், 11 மொழிகளும், மணிப்பூரில், ஏழு மொழிகளும் அழியும் நிலையில் உள்ளன. 

தமிழகத்தில் உள்ள கோட்டா மற்றும் தோடா போன்ற தென் திராவிட மொழிகள் உட்பட, 42 மொழிகள் மற்றும் வட்டார பேச்சு வழக்கு மொழிகள் விரைவில் காணாமல் போகும்பட்டியலில் உள்ளன.

குறைந்த அளவு மக்கள் பயன்படுத்துவதால், 42 இந்திய மொழிகள் மற்றும் வட்டார பேச்சு வழக்கு மொழிகள் விரைவில் காணாமல் போகும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த மொழிகளை, யாருமே பேசாத நிலை உருவாகும் என, தெரிய வந்துள்ளது.

===============================================================================================
                                   கமல்ஹாசன்,ரஜினிகாந்த கலைஞர் சந்திப்பு.செயல்தலைவர் ஸ்டாலின் முகபாவம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?