ஸ்டெர்லைட்டை மூடு

லண்டனில் வசிக்கும் அணில் அகர்வாலின் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனம் மும்பையை தலைமை அலுவலகமாக கொண்டு இந்தியாவிலும் இதர நாடுகளிலும் தொழிற்சாலைகள் சுரங்கங்கள் அமைத்து தாதுக்களை சுத்திகரித்து பிற தொழில்களுக்கு தேவையான உலோக மூலகங்கள், அமிலங்கள், பலமான கான்கீரிட் டிற்கு தேவையான செயற்கை மணல் ஆகியவைகளை மலிவு விலையில் உலக சந்தையில் விற்பதாக மார்தட்டுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் குறிப்பாக தூத்துக்குடியிலும். பூமியையும் காற்றையும் கெடுக்கும் பழைய தொழில் நுட்பங்களையும் பழைய கருவிகளையும் வைத்து தொழிலாளர்களை நோகடித்து சுரண்டுவதையும் .
 எதிர்க்கும் மக்களை பஜ்ரங்தள் போன்ற குண்டர் படையை வைத்து மிரட்டுவது தீவைத்து கொல்வது போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் அது சாதுர்யமாக மறைத்துவிடுகிறது. 
அவற்றை காசு வாங்கிக்கொண்டு  ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. ஸ்டெர்லைட் மக்கள் தொடர்பு அலுவலர் கூட்டம் என்ற பெயரில் செய்தியாளர்களை மாதாமாதம் அழைத்து கவனித்து விடுகிறார்.உணவு,உற்சாகாப்பானம்,கையில் பண உறை என்று குளிப்பாட்டி விடுகிறார்.மது வெளியில் கொடுக்கப்பட்டு விடுகிறது.மாது மட்டும் இல்லை.பெரிய கடைகளில் 5000 ரூபாய் வரை பொருட்கள் வாங்கிக்கொள்ள அடிக்கடி பரிசு அட்டை வழக்கப்படுகிறது.
வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை 1975ல் தூத்துக்குடியில் இயக்க துவங்கிய பொழுது உள்ளூர்வாசிகள் முதலில் வர வேற்றனர். 

காரணம் பலருக்கு வேலை வாய்ப்பு,ஆளுங்கட்சி அதிமுகவின் முதல்வர் ஜெயலலிதாவே வந்து கலந்து கொண்டு நாச வேலைக்கு அடிக்கல் நாட்டி மக்களை ஏமாற்றி வைத்திருந்தனர்.
தமிழ் மாந்தன் என்பவர் ஸ்டெர்லைட் அழிவைப்பற்றி மக்களிடம் எடுத்துக்கூறிய  போது அதிமுகவினராலும்,காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டு தான் பார்த்துக்கொண்டிருந்த பணியையும் இழந்து காணாமல் போக்கடிக்கப்பட்டார்.
ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த தாதுக்களிலிலிருந்து தாமிர உலோகத்தை (காப்பர்) பிரித் தெடுக்கும் வேலையில் திரளும் திட விஷ ஆர்சினிக் கழிவுகளை ஆயிரக்கனக்கான டன்களை கொட்டி நிலத்தையும் நீரையும் கெடுத்த பிறகே மக்கள் உணரத் தொடங்கினர். 
சல்ஃபர்-டை ஆக்சைடு அமோனியா போன்ற எரிசலூட்டும் வாயுக்களை அவ்வப் பொழுது புகை போக்கி மூலம் காற்றிலே கலந்து சுற்றி வாழும் மக்களையும் பிஞ்சு குழந்தைகளையும் கண் எரிச்சல் இருமல் தோலில் புண்கள் போன்ற உபாதைகளை உணரத்தொடங்கிய பிறகுதான் இதன் ஆபத்தை உணர்ந்தனர்.
லண்டன் வாசி அணில் அகர்வால் 

அறிவியல் பொருளாதார மூடர்கள் இந்தியவையும் தமிழகத்தையும் இன்று நிர்வகிப்பதால் தூத்துக்குடியில் 20க்கும் மேற்பட்ட ரசாயன ஆலைகளை அடுத்தடுத்து தனியாரை அமைக்கவிட்டுள்ளனர் .
இதனால் திட மற்றும் வாயு விஷக்கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியில் தள்ளி விட்டு மற்றவர் மேல் பழியை சுமத்தி தப்பிட முடிகிறது. 
அதில் வேதாந்தா, நீதிமன்றத்தில் மற்றவர் மேல பழியை போட்டு வாதாடி தப்புவதற்கு அதிகாரிகளே துணைபோனர் .
மக்களின் போராட்டங்களின் விளைவாக ஐந்து முறை ஆலையை மூட நேர்ந்தது . 
வேதாந்தா ஒவ்வொரு முறையும் நீதி மன்றம் செல்லும் பின்னர் ஆலையை திறந்துவிடும். 
அதில் வேதாந்தா நிர்வாகத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியமே துணைபோகிறது .
மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை சுற்றி 250 மீட்டர் அகலத்தில் மரங்கள் வளர்க்க வேண்டும் என்று முதலில் உத்தரவிட்டது. 
வேதாந்தா நிர்வாகம் அது முதலீட் டு செலவாகி உற்பத்தி செலவை கூட்டும் என்பதால் 25 மீட்டர் அகலத்தில் மரங்கள் வளர்க்க அனுமதி கேட்டது. 
அதனை மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஏற்றுக் கொண்டது.
2010ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் ஆலையை மூட தீர்ப்பளித்தது வேதாந்தா மேல் முறையீட்டில் கட்டபஞ்சாயத்து தீர்ப்பாக உச்ச நீதி மன்றம் 100 கோடி ரூபாய் தண்டம் விதித்து தொழிற் சாலையை திறக்க உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர்கள் குழு சமர்பித்த புலன்விசாரனை அறிக்கை இந்த நிறுவனத்தின் கிரிமினல் நடவடிக்கை களை பட்டியலிட்டது.
ஒடிசா மக்கள் போராட்டக்குழு 

2003ம் ஆண்டில் ஒடிசா மாநிலத்தின் காடுகளில் அலுமினிய சுரங்கத்தை உருவாக்க அங்குவசித்த குடும்பங்களை விரட்டிட குண்டர் படையை (பஜ்ரங்தள்) ஏவி பயமுறுத்தியது. 
அதனை சாதுர்யமாக இந்து கிருத்துவ மத மோதல்களாக காட்டிட ஒரு பாதிரியார் குடுமபத்தையே எரித்து திசை திருப்பிவிட்டது. 
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாம்பியாவில் தாதுக்களை சுத்தம் செய்ய காஃபு ஆற்றில் கழிவுகளை கொட்டி நீரை கெடுத்த குற்றச்சாட்டுக்கு ஆளானது. 
அங்குள்ள நீதிமன்.றம் வேதாந்தா நிறுவனத்தை பொருப்பற்ற லாப வெறிபிடித்த நிறுவனம் என்று தீர்ப்புக் கூறி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்கவைத்தது. 
சாதுர்யமாக அரசிற்கு தாது எடுக்க கொடுக்க வேண்டிய கட்டணத்தை கொடுக்காமல் நிவாரணமாக கொடுத்து அரசையே ஏமாற்றியது.
 உச்ச நீதிமன்றம் இந்த அறிக்கையை ஏற்று இருந்தால் அகர்வாலை ஏமாற்று பேர்வழி என்று தீர்ப்பை வழங்கியிருப்பார்.
தமிழக மக்களின் கவனத்திற்கு வேதாந்தா என்ற பன்னாட்டு நிறவனத்திற்கு பஜ்ரங்தள் இருப்பது போல் இந்துத்வா அமைப்புகள் அனைத்தும் ஏதேனும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஸ்பான்செர் செய்யும் கூலிபட்டாளமாகவே இருக்கும் . 
ஒடிசா அலுமினிய ஆலை 

இந்துத்வ.அரசியல் ரவடி ராஜா வின் ஸ்பான்சர்யார் என்பதை கவனியுங்கள்.

பல ஆண்டுகளாக சி.ஐ.டி.யு மார்க்சிஸ்ட் கட்சி ம.தி.முகவும் ஆலையை மூடக் கோரி இயக்கத்தை துவக்கினர் ஊடகங்கள் பரபரப்பான செய்தியாக வெளியிட்டன. 
அதே வேளையில் வேதாந்த நிறுவனத்தின் கிரிமினல் நடவடிக்கைகளை இருட்ட டிப்பு செய்தன . . சி.ஐ.டியு தலைவர்கள்தான் ஆக்க பூரவமான தீரவிற்கு குரல் கொடுத்தனர் .
தாதுவை இறக்குமதி செய்து காப்பர் தயாரிக்கும் ஸ்டெர் லைட் ஆலையை மூட வேண்டும். 
அதற்கு பதிலாக தாது மணலை வைகுந்த ராஜன் போன்றோர் ஏற்றுமதி செய்வதை தடுத்து அதனை பயன்படுத்தி பொதுத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை கொண்ட தொழிற்சாலை அமைக்க வேண்டும். 
தூத்துக்குடியை நரகமாக்கும் ரசாயன ஆலைகளை மூட வேண்டும். 
நவீன தொழில் நுட்பங்களை புகுத்தி மாசுகட்டுப் பாட்டு வாரியமே சுற்றுப்புற சூழலை பேணுகிற முறை புகுத்த வேண்டும்.
இடது சாரி அரசியலே சரியான தீர்வை தரும். மற்ற அரசியல் வேதாந்தா போன்ற கார்ப்பரேட்களின் ஏவல் படி அசையும்.
                                                                                                                    -மீனாட்சி சுந்தரம் (தீக்கதிர்)
=====================================================================================
ன்று,
மார்ச்-29.
  • தாய்வான் இளைஞர் தினம்
  •  பணியிடங்களில்  புகைப்பிடித்தலை  தடை செய்த முதல் நாடுஅயர்லாந்து (2004)
  • யாஹூவின் 360 டிகிரி சேவை ஆரம்பிக்கப்பட்டது(2005)
  • பூமி மணித்தியாலம், அனைத்துலக மயமாக்கப்பட்டது(2008)
======================================================================================






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?