உலக முதலாளிகளே ஒன்று கூடுங்கள் ..!

எண்ணெய் உற்பத்தியாளர்கள் மாநாட்டை நடத்திய பிரதமர் அம்மாநாட்டின் மூலம் பெட்ரோல் விலை குறைவு தொடர்பாக முடிவெடுக்கவே இது நடக்கிறது என்கிறார்.
ஆனால் அக்கூட்டத்தில் எந்தவிதமான பெட்ரோல் விலைக்குறைப்பு முடிவும் எடுக்கப்படவில்லை.குறைந்த அளவுக்காவது விலை குறைப்பு பற்றிய ஆலோசனையும் நடத்த்தப்படவில்லை.
மாறாக இந்தியாவில் இயற்கை எரிவாயு,எண்ணெய் எடுக்கும்,சுத்திகரிக்கும் ஆலைகள் துவக்க தனியார் முதலாளிகளுக்கு,முதலீட்டார்களுக்கு அழிய்ப்பு மட்டுமே வைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் 
'' தனியார் நிறுவனங்கள்,மற்றும் எண்ணெய் உற்பத்தி நாடுகள், தங்களிடம் உள்ள உபரி நிதியை இந்தியா போனற  நாடுகளில் எண்ணெய் துறையில் முதலீடு செய்ய வேண்டும்.

இயற்கை எரிவாயு எடுப்பு மற்றும் வினியோக துறையில் ஈடுபடவும் வேண்டும் அதற்கான வசதிகளை இந்திய அரசு செய்து தரும் "என  அழைப்பு விடுத்தார். "

இந்த கூட்டத்தில்  ரிலையன்ஸ் அனில் அம்பானி,அதானி, ஸ்டெர்லைட் அனில் அகர்வால் போன்ற பெரும் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டார்கள்.மக்கள் பிரதிநிதிகள் என்று கூறப்படும் யாரும் இந்த பெட்ரோல் விலை குறைப்பு(?) ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துவில்லை.

ஆக தனியார்கள் பெட்ரோலியத்துறையில் நுழைந்து தங்கள் வியாபாரக்கூட்டணி மூலம் இன்னமும் விலையை உயர்த்த்தான் மோடி அழகிய்ப்பு விட்டுள்ளார்.

அம்பானி,அதானி,அகர்வாள்கள் பெட்ரோலியத்துறையில் நுழைந்தபின்னர்தான் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வே தொடர்கதையாகிவிட்டது.

வியாபாரிகள் தங்கள் லாபத்தை எப்படி குறைப்பார்கள்.மோடி கடந்த கால அனுபவத்தில் படம் கற்றுக்கொண்டதாகவே தெரியவில்லை.அரபு நாடுகளில் கூட அரசு சார்பில்தான் பெட்ரோல் ஏற்றுமதி,விலை நிர்ணயம் நடக்கிறது.

ஆனால் இந்தியாவில்  தனியார்கள் தினசரி விலையை உயர்த்த அரசுதன்பங்குக்கு அந்த விலையை விட அதிகமாக வரிகளைப்போட்டு கொடுமைப படுத்துகிறது.சானிட்டரி துணியைக்  கூட ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டுவந்த பாஜக அரசு பெட்ரோலை ஏன் அதன் கீழ் கொண்டுவர மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.

அதுவும் ஜி.எஸ்.டி வரியி கீழ் வந்தால் விலை குறையும் எல்லாப் பகுதிகளிலும் பெட்ரோல் விலை சமமாக இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கமல் சேலம் கூட்டம் .

 அதிர்ந்த ஆளுங்கட்சி!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அக்டோபர் 12, 13, 14 தேதிகளில் சேலம், நாமக்கல் சுற்றுப் பயணத்தை முடித்திருக்கிறார். இதுவரையில் கமல் மேற்கொண்ட மக்கள் பயணங்களிலேயே இந்தப் பயணம்தான் டாப் என்று கமல்ஹாசனைப் பற்றி உளவுத்துறை சென்னைத் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது.

சென்னையில் இருந்து சேலத்துக்கு விமானத்தில் சென்ற கமல்ஹாசன், அங்கே சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு அக்டோபர் 15 ஆம் தேதி காலை சேலத்தில் இருந்து சென்னைக்குத் திரும்பினார். கமல்ஹாசன் சென்னையைத் தொடுவதற்கு முன்னதாகவே அவரது சேலம் மாவட்ட பயணம் பற்றிய உளவுத்துறையின் விரிவான அறிக்கை ஆளுந்தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அக்டோபர் 13 ஆம் தேதி மாலை கமல்ஹாசன் சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னரே பல பாயிண்ட்டுகளில் பேசிப் பேசி நகர்ந்து வந்துகொண்டிருந்ததால், கோட்டை மைதானத்துக்கு அவர் வந்து சேர அறிவிக்கப்பட்ட நேரத்தை விடத் தாமதம் ஆனது. 
ஆனாலும் உண்மையிலேயே ‘மாபெரும்’ கூட்டம் கமலுக்காக காத்திருந்தது. இது கமலுக்கு மட்டுமல்ல, மக்கள் நீதிமய்ய பொறுப்பாளர்களுக்கே ஆச்சரியமான அதிர்ச்சியாக இருந்தது. கூட்டத்தை ஒழுங்குபடுத்த அவர்கள் கடுமையான சிரமத்தை அனுபவித்தார்கள், ஆனாலும் இதை மகிழ்ச்சியோடு அனுபவித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

கோட்டை மைதான பொதுக்கூட்ட மேடை வழக்கம்போல இல்லாமல், விருது வழங்கும் விழா, அழகிப் போட்டி விழா மேடை போல முன் பக்கம் கொஞ்சம் நீண்டிருந்தது. அதனால் பொதுமக்களிடையே அவ்வப்போது வந்து பேசிவிட்டுச் செல்வது போல ஓர் உணர்வு ஏற்பட்டது.


கமல்ஹாசன் ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போது அவரை எம்.ஜி.ஆர். தன் தோளில் தூக்கி வைத்திருந்த புகைப்படத்தை பெரிய சைஸ் பதாகைகளாகத் தயாரித்து கூட்டத்தில் ஆங்காங்கே அசைத்துக் கொண்டிருந்தனர் தொண்டர்கள்.

“மாபெரும் கூட்டம் என்றால் இதுதான். இந்த அன்பில் நான் திக்குமுக்காடிவிட்டேன். இந்த அன்பு தொடர வேண்டும்” என்று பேசத் தொடங்கிய கமல்ஹாசன் சேலத்தின் முக்கியப் பிரச்சினைகளை எல்லாம் தொட்டு வெறும் 20 நிமிடங்களில் தன் பேச்சை முடித்துவிட்டார்.

கமல் பேசுவதற்காக கேட்டிருந்த பல சின்னச் சின்ன பாயின் ட்டுகளில் மேடை போட்டு பேசக் கூடாது என்று காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
 அதனால் ஆங்காங்கே வாகனத்தில் இருந்தபடியே பேசினார். ஒவ்வொரு பாயின் ட்டிலும் கமலுக்கு ஆயிரம் பேராவது குறைந்தபட்சம் கூடிவிட்டனர்.

இந்த சேலம் கோட்டை மைதானத்தில்தான் கடந்த மாதம் முதல்வரின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே கூட்டம் கலைந்துகொண்டிருந்தது. 
ஆனால் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் அவர் பேசி முடித்த பிறகே கூட்டம் எழுந்து செல்ல ஆரம்பித்தது. 

மக்கள் நீதி மய்யத்தினர் கூட்டம் சேர்க்க வழக்கமான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால் சுமார் பத்தாயிரத்துக்கும் நெருக்கமானவர்கள் கமல் பொதுக்கூட்டத்துக்கு வந்திருக்கிறார்கள் என்று உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது.

இதனால் சேலம் மாவட்டத்தில் கமலுக்கு அப்படி என்ன ஸ்பெஷல் செல்வாக்கு என்று ஆராய உத்தரவிட்டிருக்கிறது அரசு.
                                                                                                                                                                                                                                                        -ஆரா
=======================================================================================
ன்று,
அக்டோபர்-16.


  • உலக  உணவு தினம்
  • சிலி ஆசிரியர் தினம்
  • பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன், ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்(1799)
  • பிரிட்டன் இந்தியாவில் வங்காளப் பிரிவினை நடந்தது (1905)
  • வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1923)
=======================================================================================
ஐய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை ஏன்???
சபரிமலை ஐயப்பன் கோயில் இருக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் பெண்கள் எவ்வளவு அடிமைகளாக இருந்தனர் என்பதை தரவாடு முறை மற்றும் தோள் சீலைப் போராட்டத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
ஒரு காலத்தில் உயர் சாதிப் பெண்களைத் தவிர இடைநிலை பிற சாதிப் பெண்கள் மேலாடை அணியாமல் திறந்த மார்புடன் தான் இருக்க வேண்டும். அதுதான் பண்பாடு, மத கலாச்சாரம் என திருவாங்கூர் சமஸ்தானத்தில் சட்டம் இருந்தது. அதன் நீட்சிதான் பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்லக் கூடாது என்பதாகும்.
தரவாடு முறை என்பது நாயர் போன்ற மேல் சாதி சமூகத்தில் திருமணங்கள் நடைபெற்றால், முதல் குழந்தையை நம்பூதிரி பார்ப்பனர்கள் மூலம் பெற வேண்டும் என்பது தான். அதாவது திருமணம் நடந்ததும் முதல் இரவு நம்பூதிரி பார்ப்பனர்கள் உடன் தான்
இன்று இந்து மதக் கலாச்சாரம் என்று பெண்களுக்கு அவர்களின் உரிமைகளுக்கு எதிராக ஐயப்பன் கோயிலுக்குச் செல்லக்கூடாது எனச் சிந்திக்கும் , பேசும் , வலியுறுத்தும் நண்பர்கள் அனைவருமே இடைநிலைச் சாதிகள் என்பதை மறந்து விடக்கூடாது.

தோள் சீலைப் போராட்டம் 1822 முதல் 1859 வரை
கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது.அந்தக் கால கட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார்), பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் மார்பகத்தைத் திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் சமசுதானம் ஒரு நடைமுறையை வகுத்திருந்தது.
இதன்படி 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமானத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்தக் கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் சாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்துச் சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு, நாடார் கிருத்தவப் பெண்களுக்குத் தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.
போராட்டத்திற்கான காரணம்:
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மிசம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றாண்டுகளில் ஆரியப் பிராமணர்களின் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் , சேரநாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன.
12 ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, நடவாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாயிற்று. இந்தத் தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டுக்குக் கீழும் ஆடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு.
உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்கக் கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்துப் பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இவ்வுடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

உடை கட்டுப்பாடு.
திருவிதாங்கூர் சமசுதானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப் பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப் பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிராமணர்கள் முன்பு அனைத்துச் சாதிப் பெண்களும் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது. இந்த உடை கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாகக் கடைபிடிக்கப் பட்டன.
உடை அணியும் விதத்தை வைத்தே மக்கள் உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822ஆம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப் பேராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது.
முதல் கட்டப் போராட்டம் 1822 முதல் 1823 வரையும், இரண்டாம் கட்டப் போராட்டம் 1827 முதல் 1829 வரையும், மூன்றாம் கட்டப் போராட்டம் 1858 முதல் 1859 வரையும் நடைபெற்றது.
முதல் போராட்டம்:
சீர்திருத்தக் கிறித்தவ சமயத் தொண்டரான மீட் பாதிரியார் கிறித்தவப் பெண்களின் மார்பகங்களை மறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதனால் கிறித்தவப் பெண்கள் தங்கள் மார்பகங்களைத் துணிந்து மறைத்ததுமல்லாமல், அதற்கு மேல் ஒரு மேலாடையையும் பயன்படுத்தினர். இதனால் மேல் சாதியினர் கலவரம் செய்தனர். மே மாதம் 1822ம் வருடம் கல்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக மீட் ஐயர் என்ற ஐரோப்பிய மறைப்பணியாளர், ஆங்கிலேயத் தளபதி கார்னல் நேவால் என்பவருக்கு இச் சம்பவங்களைப் பற்றி விரிவாகக் கடிதம் எழுதினார். இதன் பயனாக ஆங்கிலேயத் தளபதி கார்னல் நேவால் , பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடுகிறார். இதன் பயனாக 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீதிமன்ற உத்தரவுப் படி சீர்திருத்தக் கிறித்தவர்களுக்கு மட்டும் குப்பாயம் என்ற உடையை அணியலாம் என்று தீர்ப்பளிக்கப் படுகிறது.
இரண்டாம் கட்டப் போராட்டம்:
மிக அதிகமாக பாதிக்கப் பட்ட இடங்களான ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை,உடையார்விளை, புலிப்பனம் ஆகிய இடங்களில் மீண்டும் 1827 ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. 1823 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ஒரு நிரந்தரமான தீர்வை அளிக்கத் தவறியது. இந்த ஆணையின் அடிப்படையில் கிறித்தவப் பெண்கள் உயர்சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடைகள் அணியக்கூடாது என்று தடை விதிக்கப் பட்டது. இதனால் கிறித்தவ நாடார் பெண்களிடம் அதிருப்தி ஓங்கியது. கிறித்தவ நாடார் பெண்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட குப்பாயம் என்ற மேலாடையை விட ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் மற்றும் உயர் சாதிப் பெண்கள் அணியும் உடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர்களைப் பின்பற்றி இந்து நாடார் பெண்களும் மேலாடை அணிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு முத்துக்குட்டி போன்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். இதற்கு ஆட்சியில் இருந்த நாயர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மூன்றாம் கட்டப் போராட்டம்:
1858 ம் ஆண்டு விக்டோரியா மகராணியின் பிரகடனத்தையடுத்து தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. விக்டோரியா மகராணியின் பிரகடனம்
'one soceity or Government should not interfere into the religious regulations or social restrictions of other society. Government servants should not intervene and discriminate anybody in the customary affairs that is being followed in the respective soceities. The violators of this order would be punished'[2]
இந்தப் பிரகடனம் நவம்பர் 1, 1858 ம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவை, ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது ஆற்றிய உரை.

இதை எதிர்த்து கிறித்தவ மறைப் பணியாளர்கள் ஆங்கிலேய அரசிடம் முறையிட்டனர். நெய்யாற்றின் கரையில் தொடங்கிய போராட்டம் பாறசாலை, நெய்யூர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் தெருக்களிலும், சந்தைகளிலும் பெண்கள் தாக்கப்பட்டனர். பெண்களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன. ஆண்கள் தங்கள் உயிருக்கு பயந்து பல இடங்களில் ஒளிந்து வாழ்ந்து வந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் ஐரோப்பிய மறை பரப்பாளர்களின் பங்களாக்களில் ஒளிந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.
டிசம்பர் 30, 1859 ம் நாள் கோட்டாறுப் பகுதியில் வைத்து கிறித்தவ நாடார்களுக்கும் உயர் சாதி நாயர்களுக்கும் இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. இந்து நாடார்களும் கிறித்தவர்களுடன் இதில் கைகோர்த்துக் கொண்டனர்.
உடை உடுத்த உரிமை:
இப் போராட்டத்தின் விளைவாகவும், ஆங்கிலேயர்களின் நெருக்கடியின் காரணமாகவும் திருவிதாங்கூர் அரசரும், திவானும் அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர். இதற்கான அரசாணை 26, சூலை மாதம் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை, மற்ற கீழ் சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.
மேற்கோள்கள்.
LIBERATION OF THE OPPRESSED, A CONTINUOUS STRUGGLE, A CASE STUDY (Since 1822 A.D.)
முத்துக்கமலம் இணைய இதழில் நெல்லை விவேகநந்தா எழுதிய கட்டுரை
மதத்தை வேரறுத்த தோள்சீலைப் போராட்டம்
தோள் சீலைப் போராட்டம்
தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்
மறுபக்கம் தோள் சீலைப் போராட்டம்
சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 5. உடை
எழுதப்படாத சரித்திரம் சமூக புரட்சியாளர் வைகுண்ட சாமி!
எழுதப்படாத சரித்திரம்
பொன்னீலன் எழுதிய தெற்கிலிருந்து
பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையம் வெளியிட்ட பண்பாட்டு வேர்களைத் தேடி
அ.கா.பெருமாள் எழுதிய தென் குமரியின் கதை
.
Kalai Arasu அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து....
-திருப்பூர் சுகுணாதேவி
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நாகராஜின், மகள் அர்ச்சனா,வயது  10.
 இரண்டரை மாதங்களாக, உடம்பில் வியர்வை வெளியேறுவது போல், தானாக ரத்தம் வெளியேறும் நோயால் பாதிக்கப்பட்டார். 
பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், குணமாகவில்லை. 

இதையறிந்த, ஓசூரைச் சேர்ந்த அக்குபஞ்சர் நிபுணர் கங்காதரன், அவருக்கு சிகிச்சை மேற்கொண்டார். 
ஒரு சில நிமிடங்களிலேயே, அர்ச்சனாவின் உடலில் ரத்தம் வெளியேறுவது நின்றது. அக்குபஞ்சர் நிபுணர் கங்காதரன் இது பற்றி கூறும் பொது 
" சிறுமியின், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட அதிக சூடு, நெஞ்சுப் பகுதியைத் தாக்கி, இதயத்திலிருந்து, ரத்தம் பம்பாகி செல்லும்போது, உடலின் பல்வேறு பகுதியில் இருந்து, ரத்தம் வெளியேறியுள்ளது. அக்குபஞ்சர் சிகிச்சையில், சூட்டை குறைக்க, ஊசி போடப்பட்டது. 
இரண்டு நிமிடங்களில், உடல் சூடு குறைந்து, ரத்தம் வெளியேறுவது நின்றது. 
இனி, அவரது உடலில் சூடு ஏற்படாதவாறு, பார்த்துக் கொள்ள வேண்டும். "
என்றார் . 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?