இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

லட்சக் கணக்கானோருக்கு

படம்
  தீர்ப்பு எப்போது? தமிழ்நாட்டில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, 15 மாதங்கள், மிகச் சரியாகச் சொன்னால் 471 நாள்கள் சிறை வைக்கப்பட்டு (சிறையில் இருந்த காலத்திலேயே இதய அறுவைச் சிகிச்சையெல்லாமும் நடந்தது), சில நாள்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தால்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை எவ்வளவு காலம் நடைபெறும்?  எப்போது தீர்ப்பு வரும்? தொடர்ந்து, ஏதாவதொரு தரப்பின் மேல் முறையீடுகள் எல்லாம் விசாரிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் எப்போது தண்டிக்கப்படுவார்?  அல்லது விடுவிக்கப்படுவார்?  ஒருவருக்கும் தெரியாது, ஒருவராலும் உறுதியாகக் கூற முடியாது. வழக்கு விசாரணையில் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இவ்வாறு நீண்ட காலம் சிறையில் இருந்துவிட்டுப் பிணையில் வெளிவருவதில் செந்தில் பாலாஜி ஒன்றும் புதியவரல்ல. இவரைப் போல இந்தியாவில் நிறைய பேர் இருக்கிறார்கள். இதேபோலத்தான், 2 ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா கைது செய்யப்பட்டு, செந்தில் பாலாஜியைவிட சில நாள்களே குறைவு – 466 நாள்கள் – சிறையில் இருந்துவிட்டுப் பின்னர் பிணையில...

எதற்கு நீக்கம்?ஏன் மாற்றம்?

படம்
  தமிழ்நாட்டில் மோட்டார் வாகன விதிமீறி வாகனம் ஓட்டியதாக 1.82 லட்சம் பேர் ஓட்டுநர் உரிமம் ரத்து.குடிபோதையில்  வாகனம் ஓட்டியதாக 13,270 வழக்குகள் பதிவு. மூலப்பொருட்கள் விலை உயர்வால் அட்டைபெட்டி விலை 15% அதிகரித்தது. விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 10வது குழியில் நடந்த அகழாய்வில் தங்கநாணயம்கண்டெடுக்கப்பட்டுள்ளது.இது17ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. எதற்கு நீக்கம்?ஏன் மாற்றம்? அமைச்சர் பொன்முடி அளவுக்கதிகமாக ஆளுநருடன் மோதிவந்தார். இது, உயர்கல்வி துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என, முதல்வரிடம் கல்வியாளர்கள் தெரிவித்தனர். தற்போது, பல பல்கலைகள் நிதி இல்லாமல் சிரமப்படுகின்றன. துணைவேந்தர் நியமனத்திலும் இழுபறி நீடிக்கிறது. இதே நிலை நீடித்தால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும்; கல்வி தரம் குறையும் அதனால் தான், பொன்முடியிடம் இருந்து, உயர்கல்வி துறை எடுக்கப்பட்டு  அவர் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். மனோதங்கராஜ் தன் வசமிருந்த பால் வளத்துறையின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தவில்லை. மாவட்டத்தில் கட்சியினரை அரவணைத்து செல்லவில்லை. நாகர்...

கோவி.செழியன்

படம்
  தலைமுறைகளைத் தாண்டிய பற்று தி.மு.க 2021-ல் ஆட்சி அமைத்த போது தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏக்கள் யாருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் இது பெரும் பேசு பொருளானது. ` டெல்டா மண்ணை சேர்ந்த முதல் அமைச்சரான நானே, டெல்டாவிற்கு அமைச்சராக இருப்பேன்’ என்றார் ஸ்டாலின். டெல்டா மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களையும் நியமனம் செய்தார். ஆனாலும் டெல்டாவை சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி கிடைக்காதது பெரும் ஏக்கமானது. இந்த சூழலில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் மன்னார்குடி தொகுதியை சேர்ந்த டி.ஆர்.பி.ராஜா அமைச்சர் ஆனதில் அக்குறை நீங்கியது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சர் ஆகப்போவதாக பரவலாக பேசப்பட்டன. உதயநிதி துணை முதலமைச்சர் ஆகும் போது அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் எனவும் பேச்சுக்கள் எழுந்தன. அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த பலரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள காய்நகர்த்த தொடங்கினர். குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் சீனியரான துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை அன்ப...

அத்துமீறலின் பின்னணி

படம்
  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின்துணைமுதலமைச்சராகிறார்.திட்டமிடல்மற்றும்வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை 2 படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.  தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  புதிதாக 4 பேர் அமைச்சர்களாக சேர்ப்பு.  இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.  மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல். கொல்கத்தாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளது. 150 ஆண்டுகால பழமையான டிராம் சேவையை நிறுத்துவது என்று மேற்கு வங்க அரசு முடிவு. கொல்கத்தாவில் 1873-ல் அறிமுகமான டிராம், பிறகு நாசிக், சென்னை, நாசிக், மும்பையில் இயக்கப்பட்டது.மக்கள் குறைந்த கட்டணத்தில் சென்று வர டிராம் உதவிகரமாக இருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில்27சிப்காட்தொழிற்பூங்காக்கள் தொ...