இடுகைகள்

அதிர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டெங்கு காய்ச்சல் புரியும்.அதை கவனி அரசே..

படம்
கமல்ஹாசன் அமைச்சர்களையும்,ஊழலையும் கலாய்த்துக்கொண்டிருக்கையில் திடீரென டெங்கு காய்ச்சலை பற்றியும் அதை அரசு ஒழிக்க வேண்டும் அல்லது நகர்ந்து தொலைக்க வேண்டும் என்றது, சம்பந்தமில்லா டுவிட்டாக அப்போது தெரிந்தது. ஆனால் கமல் எதையும் மிகவும் யோசித்தே சொல்பவர். சுனாமியை பற்றியும் கூட நாம்  சுனாமியை சந்திக்கும் முன்னரே அன்பே சிவத்தில் விவரித்தவர்.அவர். எனவே தமிழகத்தில் டெங்கு என்று நாம் ஆய்ந்த பொது கிடைத்தவை பகீர் . டெங்கு பற்றிய கமல்ஹாசன் எச்சரிக்கை அரசு தவிர்க்க முடியாதது.மக்கள் உயிர் சார்ந்தது.ஊழல் ஆதாரம் கமலிடம் கேட்டு பொழுதைப்போக்குவது போல் எளிதில் பாஜக ,மத்திய அரசு உதவியுடன் கடந்து விட  முடியாதது. தமிழகத்தில், 'டெங்கு' பாதிப்பு வேகமாக பரவி வரும் சூழலில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய மிக அவசியம் ஏற்பட்டுள்ளது.  ஆனால் அத்துறை அமைச்சரோ டெங்கு தீவிரம் தெரியாமல் அதை மறைக்க "டெங்கு இல்லை மர்ம காய்ச்சல்" என்று அறிவித்துக்கொண்டு தனது வருமான வரை வழக்கத்தில் இருந்து தப்பிப்பதில் தான் முழுக்கவனம் செலுத்துகிறார்.டெங்கு தடுப்பில் அல்ல...

இணைய பொறாமை,போட்டி தகவல்கள்.

படம்
இந்­தி­யா­வின் இன்­போ­சிஸ் முதல், பிரிட்­ட­னின் பிரிட்­டிஷ் அமெ­ரிக்­கன் டுபாக்கோ வரை, பல்­வேறு நிறு­வ­னங்­கள், சமூக வலை­த­ளங்­களில் பரப்­பப்­படும் பொய் தக­வல்­க­ளால், அவற்­றின் பாரம்­ப­ரிய பெருமை, மதிப்பு, வர்த்­த­கம் ஆகி­யவை பாதிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­வித்து உள்ளன. சமீ­பத்­தில், இன்­போ­சிஸ் மற்­றும் விப்ரோ நிறு­வ­னங்­களில் வைத்­துள்ள பங்­கு­களை, நிறு­வ­னர்­கள் விற்­று­விட்டு வெளி­யேற உள்­ள­தாக, ஊட­கம் மற்­றும் சமூக வலை­த­ளங்­களில் தக­வல் வெளி­யாகி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.  இதை­ய­டுத்து, அந்­நி­று­வ­னங்­களின் பங்­கு­களை, அவ­சர அவ­ச­ர­மாக முத­லீட்­டா­ளர்­கள் விற்­பனை செய்­த­னர். இத­னால், அப்­பங்­கு­கள் விலை வீழ்ச்சி­ அடைந்­தது.  உடனே நிறு­வ­னர்­கள், பங்கு விற்­பனை குறித்த செய்­தியை மறுத்து அறிக்கை வெளி­யிட்­ட­னர். இது போன்ற தவ­றான தக­வல்­கள், ‘பேஸ்­புக், டுவிட்­டர்’ போன்ற சமூக வலை­த­ளங்­களில் வெளி­யா­வ­தும், அதற்கு மறுப்பு தெரி­வித்து அறிக்கை வெளி­யி­டு­வ­தும், சமீ­ப­கா­ல­மாக அதி­க­ரித்து வரு­கிறது.  ‘இத்­த­கைய பொய் தக­வல்­கள், இயக்­கு­னர் குழு­வி...

பல லடசம் டாலர் கள் லாட்டரி

படம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு அந்த  சின்ன கிராமத்தில் ஐந்தாயிரம் பேர் மட்டுமே மக்கள் தொகை.  அங்கு ஒரே ஒரு செல்போன் கோபுரம் மட்டும்தான் உள்ளது.  ஆனால் அங்கிருந்து தினமும் மும்பைக்கு மட்டும் மூன்றாயிரம் மோசடி வங்கி அழைப்புகள் செல்வதாகச் சொல்லப்படுகிறது.  இங்கு மட்டுமல்ல, இந்தியாவின் பல இடங்களிலிருந்தும்,வெளிநாடுகளிலிருந்தும் கூட  மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் எனஇது போன்ற  மோசடி செய்திகள்,அழைப்புகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.  இதைத் தடுத்து நிறுத்துவது என்பது உண்மையில் முடியாத காரியம்.  ஏனெனில், இதுதான் டிஜிட்டல் இந்தியாவின் மறு  பக்கம். இந்த டிஜிட்டல் மயமான பணப்பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் உலகில் யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எங்கு இருந்து வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.உங்களுக்கு தெரியாமலே உங்கள் பணத்தை பிடுங்கலாம்.  இதையே இப்போது முழு நேர  தொழிலாக பலரும் செய்கிறார்கள். சமீபத்தில் டெல்லியில் இதற்கென 400 பேர்கள் பணிபுரிந்த கால் சென்டர் மாட்டிக்கொடுத...

அநீதி அரங்கேறுகிறது

படம்
நீட் தேர்வு குறித்து தமிழக சட்டப் பேரவையில் விவாதம் நடைபெற்றுள்ளது. இந்தாண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு உண்டா இல்லையா என்ற கேள்விக்கு அரசுத்தரப்பிலிருந்து தெளிவான பதில் அளிக்கப்பட வில்லை.  இது ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவில் மண் அள்ளிப் போடுவதாக உள்ளது. திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு நீட் தேர்வு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு மத்திய மோடி அரசு அனுப்பவே இல்லை என்று தகவல் வருகிறதே இது குறித்து அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு முறை சந்தித்ததாகவும், மனிதவள மேம்பாட்டுத்துறை, மத்திய சுகாதாரத்துறை ஆகிய துறைகளின் ஒப்புதலைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் மத்திய உள்துறை, சட்டத்துறை ஆகிய துறைகள் குடியரசுத்தலைவருக்கு மசோதாக்களை அனுப்பவில்லை என்று கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி....