இடுகைகள்

சமுகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகின் பயங்கரமான நகரம்

படம்
 “கராச்சி” ------------ உலகின் அதி பயங்கரமான நகரம் என்ற பெயரை பாகிஸ்தானின் கராச்சி நகரம் பெற்றுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களில் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலை குறித்து தனியார் பத்திரிகை நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் கராச்சி நகரமே அதி பயங்கரமான நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது. இதுகுறித்து ஆய்வறிக்கையில், பாகிஸ்தானில் நிலவும் வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால் வேலைவாய்ப்பை தேடி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கராச்சிக்கு வருகின்றனர். அங்கு அரசியல்வாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் கூட்டு சதியால் மக்கள் பெருமளவு துன்புறுத்தப்படுகின்றனர். குறிப்பாக அதிகளவிலான மக்கள் கொல்லப்படுகின்றனர். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக, கராச்சியில் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களிடையே பலத்த மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த 2011ம் ஆண்டில் 1723 பேரும், 2012ம் ஆண்டில் 2000க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ----------------------------------------------------------------------------------------------...

கும்பமேளா

படம்
உலகின் அதிக அளவில்  மக்கள் கலந்து கொள்ளும் விழாக்களில் ஒன்று  கும்பமேளா .  பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்ப மேளா .உலக அளவில் புகழ் பெற்றது. கங்கை- யமுனை நதிகள்  அலகாபாதில் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறும் இவ்விழா தற்பொது துவங்கியுள்ளது.. பத்து  நாட்கள் நடைபெறும் இந்த  விழாவில் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு அங்குள்ள நதியில்  நீராடுவார்கள் .வெளி நாடுகளில் இருந்து இதை வேடிக்கை பார்க்க மட்டும் 10 லட்சத்தி ற்கும் அதிமானோர் வந்துள்ளதாக தெரிகிறது.  இத்திருவிழாவின் முதல் நாளான நே ற் று(14.1.13) மட்டும் ஒரு கோடி பேர்  இச் சங்கமத்தின் நீராடியுள்ளனர். வட இந்தியாவில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது .ஆனாலும்  ஆயிரக்கணக்கான சாமியார்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியில் நீராடி னர். உடல் முழுவதும் திருநீரு பூசியபடி மலர் மாலை மட்டுமே அணிந்த நிர்வாண நாகா சாதுக்கள் இங்கு புனித நீராட வருவது, கு...

விஸ்வரூபங்கள்,,,,

படம்
இந்தியாவில் இரு விஸ்வரூபகங்கள் தலை எடுக்க தயாராகியுள்ளன. இரண்டுமே தமிழ் நாட்டில் இருந்துதான் வருகின்றது. இது அரசியலில் __________________ இந்தியாவின் மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுக்கு வரிசையாக சர்ச்சைகளில் மாட்டுவதுதான் இப்போதைய பணியாக உள்ளது. இக்குழுதயாரித்து வெளியிட்ட பாடப்புத்தகம் ஒன்றில் அம்பேத்கார் கருத்துப்படம் பிரசுரம் செய்யப்பட்டிருந்தது சமீபத்தில் பெரும் சர்ச்சையை மக்களவை வரை ஏற்படுத்தியது. இப்போது, அக்குழுவினர் தயாரித்து வெளியிட்டிருக்கும் புத்தகத்தில், தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து அக்காலகட்டத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளியான கேலிச்சித்திரம் ஒன்று போடப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை தூண்டியிருக்கிறது. இந்த கேலிச்சித்திரத்தில், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் பலர் ஈடுபட்டிருக்கையில், இந்தித் திணிப்பு இல்லை, ஆங்கிலக் கல்வி தொடரும் என்று கூறும் ஆங்கிலப் பதாகைகளை ராஜாஜி தாங்கிக்கொண்டிருப்பது போலவும், அதைப் பார்க்கும் வேறு சிலர், இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாண...

இன்று போய் நாளை வா !

படம்
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள ஏலகிரி மலை அத்தனாவூரில் சில நாட்களுக்கு முன்,ஒரு ரத்த காட்டேரி வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ளவர்களின் ரத்தத்தை குடித்து விட்டு சென்று விடுவதாக வதந்தி வேகமாக பரவியது. இவ்வதந்தியில் பயந்த, ஏலகிரி மலையடிவாரமக்கள் அருகில் உள்ள காளி கோவிலில்,  இரவு குறி கேட்டனராம். காளியிடம் யோசனைகேட்ட,  கோவில் பூசாரி முனியப்பன், ""வீடுகளுக்கு முன், "இன்று போய் நாளை வா' என சிகப்பு கலரில் எழுதி விட்டால், நள்ளிரவில் வரும் ரத்த காட்டேரி அதை படித்து விட்டு [?]வீட்டுக்குள் வராமல் போய் விடும்,'' என்று கூறினார். இதையடுத்து ஏலகிரி மலையில் உள்ள அத்னாவூர், நிலாவூர், மலைக்கு கீழே உள்ள ஏலகிரி, கோடியூர், ஜோலார்பேட்டை, நாட்டறாம்பள்ளி, முகமதுபுரம் உள்பட, 20 கிராமங்களி ல் உள்ள மக்கள் வீடுகளுக்கு முன், "இன்று போய் நாளை வா' என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளனர். ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் கிராமத்தில் உள்ள, 1,200 வீடுகளில், இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதற்காக, திருப்பத்தூரில் இருந்து பெயிண்டர்களை வரவழைத்து, சிகப்பு கலரில் வீட்டின் முன், ...

ரஜினிக்கு ஏன் இந்த விளம்பரம்,,,,,,,.

படம்
  பின்லாடன் கொலை ஹாலிவுட் படமாகிறது . அல்கொய்தா பயங்கவாத அமைப்பின் தலைவன் ஒசாமாபின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் ஹாலிவுட்டில் திரைப்படமாக விரைவில் எடுக்கப்படவுள்ளது. ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான கொலம்பியா பிக்சர்ஸ் என்ற திரைப்பட நிறுவனம் தான் இந்த திரைப்படத்தை எடுக்கவுள்ளது. பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கடந்த 2-ம் தேதியன்று பாகிஸ்தானின் , அபோதாபாத்தில் உள்ள ஒரு சொகுசு மாளிகையில் பதுங்கியிருந்த போது அமெரிக்க கமாண்டோ படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான். பின்னர் பின்லாடன் உடல் கடலில் வீசப்பட்டது. இந்நிலையில் பின்லாடன் என்கவுன்டர் சம்பவங்களை ஹாலிவுட்டின் கொலம்பியா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து சோனி பிக்சர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் திரைப்படமாக எடுக்கவு்ள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற பிரபல திரைப்பட இயக்குனர் கேத்ரின் பிக்லோ மற்றும், திரைக்கதையை ‌மார்க்போயல் என்பவர் எழுதுகிறார். மார்க்போயல் ஏற்கனவே தி ஹர்ட் லாக்கர் -2010 என்ற பெயரில் , ஈராக்கில் வெடிகுண்டு எதிர்ப்பு ‌படையினர் பற்றி திரைப்படம் எடுத்துள்ளார். முன்னதாக கடந்த 2008-ம் ஆண்டே பின்லாடன் பற்றி ‘ ஒசாமா, தி கேப்சர்,...

சில முரண்கள்.....

படம்
ரேஷன் கடைகளைவிட இங்கே மதுக் கடைகள்தான் அதிகம் என்று பத்திரிக்கை நிரூபர்களுக்கு இயக்குனர் அமீர் ஆவேசத்துடன் பேட்டியளித்தார். தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, திருவிழா பொம்மைகளைப்போல் தெருவுக்கு வரும் அத்தனை சினிமா நட்சத்திரங்களையும் கண்டிப்பதாகவும் கூறினார். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க-வுக்காக ஓட்டு கேட்ட சிம்ரனும் சினேகாவும் இன்றைக்கு எங்கே போனார்கள்? காவிரி விவகாரத்தில் கைவிட்டவர்கள், ஒகேனக்கல் விவகாரத்தில் ஒதுங்கி நின்றவர்கள், இப்போது வாக்குகளைத் திரட்ட மட்டும் வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இத்தனை வருட காலத்தில் இந்த வடிவேலு எங்கே போய் இருந்தார்? விஜயகாந்த் உடனான பழைய பகையை மனதில்வைத்து அவரை வசை பாடினார் வடிவேலு. சொந்தப் பிரச்னைக்கும் சொத்துத் தகராறுக்கும் அரசியல் களத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது சகிக்க முடியாத அவலம். இந்தத் தேர்தல் களத்தில் சீமானின் எழுச்சிமிகு பேச்சு தொடங்கி, வைகோ-வின் மௌனம் உட்பட, அனைத்து அரசியல் தலைவர்களின் பேச்சையும் நான் கூர்ந்து கவனித்தேன். வடிவேலு அளவுக்கு யாரும் கேவலமாகவோ கீழ்த் தரமாகவோ பேசவில்லை. குடிக்கிறவன் கெட்டவன் எ...