இடுகைகள்

தங்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூட்டை கட்டிய அன்சுல் மிஸ்ரா.

படம்
மதுரையில் அழகிரி சாம்ராஜ்யத்தை ஒடுக்க நியமிக்கப்பட்டவர்கள்தான் சகாயம்,அடுத்து அன்சுல் மிஸ்ரா போன்ற மாவட்ட ஆட்சியர்கள். இப்போது அழகிரி அமுங்கி விட்டார். சகாயம் துணிகள் விற்க [கோ -ஆப் டெக்ஸ் ]அனுப்பப்பட்டு விட்டார்.கல்கோரி விவகாரத்தில் அதிமுகவினரிடமும் அடங்காமல் இருந்ததால் இப்போது அன்சுல் மிஸ்ராவும் வணிகவரி கணக்கு-வழக்கு பார்க்க ஒதுக்கப்பட்டூ விட்டார். கலெக்டராக இருந்த சகாயம் கடந்தாண்டு மே மாதம் கோ ஆப்டெக்ஸ் இயக்குனராக மாற்றப்பட்டார். திருவண்ணாமலை கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா மதுரைக்கு மாற்றப்பட்டார். 2012 மே 28ல் புதிய கலெக்டராக அன்சுல் மிஸ்ரா பொறுப்பேற்றார். கிரானைட் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி பல்வேறு உண்மைகளை இவர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். பெரிய நிறுவனங்களுக்கு சீல் வைத்தார். கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 800க்கு மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில் ஆளுங்கட்சியினரின் பரிந்துரைகளை இவர் ஏற்கவில்லை. நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை மட்டும் நியமனம் செய்தார். இது ஆளும் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.வ...

தங்கம்......கடன் வழங்ககூடாது !

படம்
ரிசர்வ் வங்கி உத்தரவு !!. தங்கம் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக 50 கிராம் எடைக்கும் அதிகமான தங்க நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் பேரில் கடன் வழங்ககூடாது என ஊரக வங்கிகளுக்கும்  ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. விலை மிகவும் சரிவடைந்திருந்ததையடுத்து மே மாதத்தில் தங்கம் இறக்குமதி 162 டன்னாக மிகவும் உயர்ந்து இருந்தது. தங்கம் பயன்பாட்டில் உலக அளவில் நம்நாடு முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக கிராமங்களில் வசிப்பவர்கள் தங்கத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் கிராமங்களில் போதுமான அளவிற்கு வங்கி வசதி இல்லை. இந்தியாவில் விற்பனையாகும் தங்கத்தில் கிராமங்களின் பங்கு 60 சதவீதமாக உள்ளது. எனவே தங்க நாணயங்கள் மீது கடன் வழங்குவதில் ஊரக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்கனவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்க பரஸ்பர நிதி திட்ட யூனிட்டுகள் பேரில் கடன் வழங்ககூடாது என்று வங்கிகளுக்கு ஏற்கனவே தடை உள்ளது. ம...

குறைந்து வரும் தங்க விலை.

படம்
உலக அளவி ல் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே  வருகிறது.  கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 1900 டாலர்கள் என்ற அளவில் இருந்தது .  தற்போது அது 1600 டாலர்களுக்கும் கீழே இறங்கியுள்ளது.. கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து தங்கத்தின் விலை  மேல் நோக்கியே  சென்று கொண்டிருந்தது.2013 இல் தான் கொஞ்சம் விலை  குறைய ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டு  துவக்கத்திலிருந்து இதுவரை தங்கத்தின் விலை சுமார் 6 சதம் உலக சந்தையில் குறைந்து விட்டது. உலகின் அதிக அளவு தங்கத்தை உபயோகிக்கும்  நாடான  இந்தியாவில் இந்த அவிலை குறைவு அவ்வளவாக பயன் தர வில்லை. காரணம் இந்தியாவில்  உள்ளூர் வரிகள்,சேவை வரிகள் என்று வரிச்சுமை  அதிகமாக உள்ளதுதான். மேலும்  ரூபாயின் மதிப்பும்  தொடர்ந்து குறைந்து  வருவதாலும்  தங்கத்தின் விலை வீழ்ச்சி மூலம் தங்கம் வாங்கி வைக்கும் அளவு மக்களிடையே பணப்புழக்கம் இ ல்லை. இந்தியாவில்  ஒரு கிராம் தங்கத்தின் விலை தற்...