இடுகைகள்

அந்நிய மூலதனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வறுமைக்கோடும் குறைந்தபட்ச ஊதியமும்...!

படம்
குறைந்தபட்ச ஊதியம் தீர்மானிப்பதற்கான அடிப்படைஅளவுகோல் என்னஎன்பது இந்தியாவில் வெகுகாலத்திற்குமுன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டது.  இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் மட்டுமல்லாது, 1990களில் உச்சநீதிமன்றத்தாலும் சில முன்னேற்றங்கள் காணப்பட்டது. இப்படி செய்யப்பட்ட பல திருத்தங்களுக்குப் பின்னர் நமது நாட்டில் தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கான அடிப்படை அளவு கோல் என்னவாக இருக்கிறது? பேரா.பிரபாத் பட்நாயக் அடிப்படை அளவுகோல் குறைந்தபட்ச ஊதியத்திற்கான அடிப்படை அளவுகோலை தீர்மானிப்பதற்கு ஒரு அடிப்படை குடும்ப அலகாக கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என்று 4 பேர் கொண்ட குடும்பம் எடுத்துக் கொள்ளப்படும். இதில் இரண்டு குழந்தைகளும் சேர்ந்து ஒருநுகர்வு அலகாகக் கணக்கிடப்படுவர்.  எனவே,ஒரு அடிப்படை குடும்பம் என்பது 3 நுகர்வுஅலகுகளைக் கொண்டதாகக் கணக்கிடப்படுகிறது. ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு நுகர்வு அலகும் ஒரு நாளைக்கு 2700 கலோரிகளை தனித்தனியாக நுகர்வதாக வைத்துக் கொள்வோம்.  அதாவது ஒட்டு மொத்தமாக ஒருஅடிப்படை குடும்பத்தின் நுகர்வு அளவு 8100 கலோரிகள் ஆகும். அந்தக் குடும்பத்திற்கு ஒருவருடத...

அவமானப்பட்டு நிற்கும் இந்தியா!-

படம்
 பெரிதாக வெடித்திருக்கிறது இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸின் ரூ.2.32 லட்சம் கோடி ஊழல்.  இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய இழப்பாக இதுவரை  பேசப்படுவது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தான் .  அதை வீட்டா அதிகமாக இந்தியாவுக்கு இழப்பைத்தருகிறது  ஆன்ட்ரிக்ஸின் ஒப்பந்தம். 2ஜி ஈழத்தில் அரசுக்கு இழப்பு ஒன்றும் இல்லை.ஆனால் அதை இந்த அளவுக்கு ஏலம் விட்டிருந்தாள் இவ்வளவு கிடைக்குமே என்பதை வைத்து அதை ஊழல் என்றும் முறைகேடு என்றும் இந்திய அரசியல்வாதிகள் தங்கள் பிழைப்பை நடத்துகிறார்கள். ஆனால்  ஆன்ட்ரிக்ஸின் ஒப்பந்தம்  கைவிடப்பட்டதால் நம் இந்தியா ரூ.2.32 லட்சம் கோடிகளை  தேவாஸ் நிறுவனத்துக்கு கொடுத்தே ஆக வேண்டிய நிலையில் உள்ளது. ஆக 2ஜி ஊழலே அல்ல.அதனால் இந்தியாவுக்கு ஒரு பைசா கூட நட்டம் இல்லை. லாபத்தில் குறைவு என்பது மட்டுமே முறைகேடாக பெரிதாக ஊடங்களால்,எதிர்க்கட்சிகளால்  பேசப்படுகிறது. ஆனால்  ஆன்ட்ரிக்ஸ் தேவாஸ்  ஒப்பந்தம் விவகாரம் இந்தியாவுக்கு 2.32.லட்சம் கோடிகளை இழப்பாக்கியுள்ளது.மேலும் இந்திய விண்வெளித்துறையை அசிங...

சரக்கு மற்றும் சேவை வரி

படம்
இன்றைய சூடான செய்தி ஜி.எஸ்.டி.தான். நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இது.  நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது.  இது பற்றிய சிறு பார்வை. இது ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப் படும் மறைமுக வரி விதிப்பாகும். இது நாடு முழுவதற்கும் ஒரே அளவாக இருக்கும். பல முன்னேறிய நாடுகள் இத்தகைய வரி விதிப்பு முறையைத்தான் பின்பற்றுகின்றன.  உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய அனைத்துக்கும் ஒரே முனை வரி விதிப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த வரி விதிப்பாகும். மத்திய அரசு விதிக்கும் உற்பத்தி வரி, சேவை வரி, உற் பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட அனைத்து வரி விதிப்புகளும் நீக்கப்பட்டு ஒரு முனை வரியாக விதிக்கப் படும். மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய வரி, வாங்கும்போது வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி, விளம்பரங்கள் மீதான வரி, லாட்டரி, பந்தயம், சூதாட்டம், மாநில அரச...

செயற்கை அரிசி வந்துட்டு!

படம்
சீனாவில் ‘ பிளாஸ்டிக் அரிசி ’ கலப்படம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு  உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  எனவே, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அரிசியில் சீனாவின் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சிய வழக்கறிஞர் சுக்ரிவா துபே  என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.   இந்தியாவில் உள்ள  அரிசி மொத்த வியாபாரிகள், வர்த்தகர் தெரிந்தோ, தெரியாமலோ இந்த அரிசியை விற்பனை செய்கிறார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் பிளாஸ்டிக் அரிசி பாதிப்பை ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நியூஸ் சேனல் வெளியிட்டுள்ளது.  பிளாஸ்டிக் அரிசி கலப்படத்தைக் கண்டுபிடிப்பது குறிப்பாக வீடியோ வெளியாகியுள்ளது. சீனாவின் ஷாங்க்ஷி பகுதியில் இருந்துதான் இந்த பிளாஸ்டிக் அரிசி பற்றிய தகவல்கள் பரவின.  இந்த இடம் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் செயற்கை பிசின் அதிகமாக புழங்கும் இடம். அந்த பிசினைக் கொண்டு சீனர்களின் கலப்பட மூளையில் உதித்ததுதான் செயற்கை அரிசி. சீனிக் கிழங்கு, தொழிற்...

"நிதி ஆயோக் " - என்ன?

படம்
திட்டக்குழு’ கலைக்கப்பட்டு நிதி (NITI- national Institution for Transforming India) ஆயோக்உருவாக்கம் பற்றிய அறிவிப்பு அரசியல் மற்றும் சமூக தளத்தில் பெரியவிவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.  தனது கன்னி சுதந்திர தின விழா உரையில் இந்திய பிரதமர் மோடி ‘திட்டக்குழு’ முந்தய கால தேவைகளுக்காக உருவாக்கப்பட்டது எனக் கூறினார்.அதேநேரத்தில் தற்போதைய உள்நாட்டு, பன்னாட்டுச் சூழல் பெருமளவு மாறியுள்ளது.  இம்மாற்றங்களுக்கேற்ப இந்தியாவும் மாறவேண்டும். நாள்பட்ட பழைய வீட்டுக்கு சில சமயங்களில் பராமரிப்பு செய்யவேண்டியது இருக்கும். அதிக செலவுக்குப்பின்னும் அந்தச் சிறுசிறு பழுதுநீக்கங்கள் நமக்கு திருப்தி தருவதில்லை. அச்சூழலில் பழையவீட்டை இடித்துவிட்டு புதிய வீட்டைக் கட்டுவது காலத்தின் கட்டாயம் எனக் கூறினார்.  தற்போது நிதி ஆயோக் என்ற அமைப்பு திட்டக்குழுவிற்குப் பதிலாக ஏற்படுத்தப்பட்டிருப்பதாக மோடி அரசு அறிவித்துள்ளது.நிதி ஆயோக்கின் பிறப்பும் அதன் உள்ளடக்கமும் பல்வேறு கூறுகளைக் கொண்டது.முதலாவதாக ‘திட்டக்குழு’ கலைப்பு காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலின் ஒரு முகம்.இரண்டாவதாக, தேர்தல் களத்தில் பிரதமர் மோ...