இடுகைகள்

இயற்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

படங்களில் மட்டுமே புன்னகைப்பார்

படம்
பொய்யாக கண்ணீர் கதை சொல்ல மனதுவரவில்லை. காரணம் மனசாட்சி. காலமானவர்களின் நல்லவற்றை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதும், சொல்வதும் காலகாலமாக வந்த ,வரும் பொய்மையான மரபு. சக மனித மரணம் தரும் வருத்தம் மட்டுமே. ஆகா.ஓகோ என்று கூற .ஒன்றும் இல்லை. அப்படி புகழும் அளவுக்கு நான் பிரமுகனும் அல்ல. 2000க்கு  வங்கி முன் காத்திருப்பவர்களில் ஒருவன். சாதா தமிழக குடிமகன். முதல்வராக இருக்கையில் போட்ட கையெழுத்தினால்  பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோரில் நானும் ஒரு துளி. அவரால் வாழ்க்கையே ஆனது கேள்விக்குறி. இருந்து போன எதிர்காலத்தை சகிக்கமுடியாமல், எதிர் கொள்ள பயந்து என் சகாக்கள் வாழ்க்கையை செயற்கையாக முடித்துக்கொண்டதில் சிந்திய கண்ணீர் கோபம்,இயலாமையால்  எரிந்து சாம்பலாய் போன மனதில் இருந்து  வர மறுக்கிறது. உணர்ந்து போட்ட கையெழுத்துக்களில்  பலர் வேலையை,வாழ்க்கையை பறித்த கை உணரவே இல்லாமல் பிறர் மூலம் கைநாட்டிட்டது காலத்தின் கட்டாயமா? இவைகளே மனதில் இருந்து வரும்  இரங்கல் அறிக்கையாக இருக்கிறது. பொய்மை சொல்ல நினைத்தும் இயலாமை  மட்டுமே வருகிறத...

இந்த "போஸ் "போதுமா?

படம்
மனிதன் மட்டுமல்ல.வரவர உலகில் மற்ற உயிரினங்களும் காமிராவுக்கு "போஸ் "கொடுப்பதில் பயங்கர தேற்றம் ஆகி விட்டன. இதற்கும் உலக நாடுகள் அனைத்துக்கும் நம் பிரதமர் சென்று  செல்பி,காமிரா முன் கலக்கியதற்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ.? இந்த "போஸ் "போதுமா?என்று சவால் விடும் சில புகைப்படங்கள்.

வியக்கவைக்கும் மலர்கள்,

படம்
இயற்கை உலகில் உள்ள எல்லாவற்றையும் விட பெரியது. சக்தியுள்ளது. உதாரணம்.நீங்கள் மறக்க முடியா சென்னை வெள்ளப் பேரழிவு. எல்லாருக்கும் ஆணையிட்டுகொண்டிருந்தவர் கூட ஆடிப் போய் விட்டார் இயற்கையின் ஊழிக்கூத்து முன். இயற்கைதான் இங்கு அழகு. அதே இயற்கைதான் அதன் பாதையில் மனிதன் தன்னை பெரியவனாகக் காட்டி தன்னை ஆட்சி செய்ய நினைத்தால் தக்க பாடத்தையும் புகட்டி தான் அபாயமானது எனபதையும்  காட்டி விடுகிறது. இது இயற்கை அழகின்  மறு பக்கத்தை பற்றியது. உலகில் ஆர்டிக் மலர்கள் நூற்றுக்கணக்கான வகைகளைக் கொண்டது. அம்மலர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தில் மலர்ந்து மக்களை மயக்கம் கொள்ள வைப்பவை. கீழ்க்காணும் ஆர்டிக் மலர்கள் ,இயற்கையில் உருவான பிற உயிர்களை நம் கண் முன்னே கொண்டு வருபவை. நீங்களே அம்மலர்கள் எந்த உயிரினத்தை,வடிவத்தை நமக்கு காண்பிக்கிறது என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள்.  எனக்கு ஒரு வடிவமாகவும் உங்களுக்கு அதே மாற்று வடிவமாகவும் உங்கள் கற்பனையில் புலப்படலாம்.

நூறாண்டு காணா மழை...!

படம்
சென்னையில் கடந்த 100 ஆண்டில் இல்லாத மழை அளவால் தலைநகரம் வெள்ளக்காடானது. ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கியதால் மக்கள் அவதியுற்றுள்ளனர். சென்னை உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதி பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன், "தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் பெரும்...