இடுகைகள்

தூக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"தூக்கம்" இருவகை

படம்
தூக்கம் என்பது உடலுக்கு ஓய்வு கொடுத்து மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளையானது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஓர் இயற்கை வழி.  ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல் நலம் மற்றும் மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது. பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்,  தூக்கத்தில் ‘ரெம்’ தூக்கம், ‘நான் ரெம்’ தூக்கம் என்று இருவகை உண்டு.  நாம் தூங்கும்போது இந்த இரண்டும் மாறி மாறி அலைபோல வரும். ‘ரெம் தூக்கம்’ (REM Sleep - Rapid Eye Movement Sleep) என்பது கண் அசைவுத் தூக்கத்தைக் குறிக்கும்.  இந்தத் தூக்கத்தில் மூடிய இமைகளுக்குள் விழிகள் உருண்டபடி இருக்கும். கனவுகள் வருகிற தூக்கம் இது.  ‘நான் ரெம்’ தூக்கம் (NREM Sleep - Non Rapid Eye Movement Sleep) என்பது கண் அசையா தூக்கத்தைக் குறிக்கும். இது ஆழ்ந்த தூக்கம் உண்டாகிற நிலை.  இதில் கனவுகள் வருவதில்லை. ஆனால் இந்த தூக்கம் வந்து ஒன்றரை மணி நேரம் கழித்து ஒரு சிலருக்கு மட்டும் பேய்க்கனவு வந்து அலறி எழுந்திருப்பார்கள். தூக்கம் குறையும்போது உடலின் நலம்...

தூக்கம் இல்லாட்டா துக்கம்.

படம்
தூக்கம் என்பது நல்வாழ்வுக்கான அருமருந்தாகவே இருந்தது.  நம் முன்னோர், ஆரோக்கியத்தையும் தூக்கத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை. தொடர்ந்து ஒருவர், ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதால், மன அழுத்தம், சிந்திக்கும் திறன் குறைதல், எதிலும் கவனம் செலுத்த முடியாதது, ஞாபக சக்தியை இழத்தல், உடல் எடை அதிகரித்தல் போன்ற மனம், உடல் நலம் ரீதியிலான இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள், வீடு, அலுவலக பயணம், மன அழுத்தம், வேலைப்பளு, கோபம், சோர்வு போன்ற கழிவுகள், மூளையில் தேங்குகின்றன.  அவற்றை சுத்தம் செய்யும் வேலையைத் தான், தூக்கம் செய்கிறது. தினசரி செய்ய வேண்டிய செயல்களில் தூக்கமும் ஒன்று.  மூளையிலிருந்து மற்ற உறுப்புகளுக்கு, தொடர்ந்து சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன. இச்செயலுக்கு, ஓய்வு தேவை. ஒய்வு இருந்தால் தான், மறுநாள் வேலைகளை செய்ய முடியும். இல்லாவிடில், செயல்திறன் குறைந்துவிடும்.  எனவே கட்டாயம், எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். ஒருவருக்கு போதுமான அளவு தூக்கம் இருந்தால், அவரது நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்கிறது.  சர்க்கரை வியாதி...

தூ ......க்கம்...,

படம்
தூக்கமே வராமல் இருப்பவர்கள் பலர்.ஆனால் அதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும்.பணக்கவலை முதல் மனக்கவலை வரை  தூக்கம் வர மறுப்பதற்கு காரணமாக அமைந்து விடும். காதல் கவலை கூட தூக்கத்தை கெடுத்து விடும்.  தூ க்கம் வர ஆட்டுமந்தையை நினைத்து ஆடுகளை எண்ண ஆரம்பித்தால் சிறிது நேரத்தில் தூக்கம் கண்களைத் தழுவி விடும்  என்று கேள்விப்பட்டு விட்டால் வரை எண்ணியும் தூக்கமும் ஆடுகளின் கணக்கும் சரியாக வராமல் முழித்தவர்கள் பலர். தூக்கம் ஒவ்வொருத்தருக்கும் அவசியம். பகலெல்லாம் உழைத்த உடலுக்கு அதுதானே ஒய்வு.மறுபடியும் உழைக்க சக்தியை உடலுக்கு புதுப்பிக்கும் வாய்ப்பு. தூக்கம் வராமல்  புலம்பிக்கொண்டிருக்கும் சிலர் மத்தியில் எப்போதும் தூங்கி வழியும் நபர்களும் இருக்கிறார்கள் . தூங்க்கிக்கொண்டிருக்கும்  நோயும் சிலருக்கு உள்ளது.ஒருமாதம் தூங்கியே கழிக்கும் பெண்ணைப்பற்றி சமீபத்தில் படிக்க நேர்ந்தது.அவர் 30 நாட்கள் தூக்கத்தில் இருமுறைதான் எழுந்தாராம்.ஒருமுறை சாப்பிட.மற்றோர் முறை கழிப்பறை செல்ல.அதுவும் துங்கி வழிந்து கொண்டெதானாம் . மருத்துவர்கள் அதை இப்போதைக்க...