இடுகைகள்

இதழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அத்துடன் நன்றிகள்.!

படம்
தொடர்ந்து வந்து,சென்று கொண்டிருப்பவர்களுக்கு வணக்கம். அத்துடன் நன்றிகள்.! 2011 தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கலில்  தனது முதல் வாசகருடன்  பயணத்தை துவக்கிய "சுரன்" இன்று எட்டு லட்சம் (800000)பார்வைகளுடன்  தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுரன் துவங்கியபோது வலைப்பூக்கள் எண்ணிக்கையிலடங்காவைகளாக  வலம் வந்தன. அவற்றுக்கான திரட்டிகளும் பத்துக்கு மேல் உதவின. இன்டலி.தமிழ் 10,தமிழ் வெளி ,திரட்டி,உலவு,ஹாரம்,சங்கமம், இன்னும் பிற. அன்றிலிருந்து இன்றுவரை "தமிழ் மணம் "ஒன்றுதான்  தொடர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கிறது. மற்றவைகளை வலைப்பூ வலைஞ்சர்கள் இழந்து விட்டனர். கடைசியாக இன்டலி தனது பயணத்தை நிறுத்திவிட்டது. இவை வலைப்பூ தரப்பினரையும் மிக இழப்பு. அப்படி இல்லாவிட்டாலும் கூட வலைப்பூக்கள்  மிக குறைந்து விட்டன. காரணங்கள் முகநூலும்,வாட்ஸ் அப் களும்தான்  தனியே வலைப்பூ துவக்கி மெனக்கெட வேண்டாம். தங்கள் கருத்தை சூடாக இவைகளில் பதிந்து விடலாம். இவர்கள் வலைப்பூவுக்கு யார் வருகிறார்கள். எத்தனை பேர் வந்தார்கள் என்ற...

சின்ன ,சின்னஅழகுக் குறிப்புகள்.

படம்
அந்தக் காலத்தில் சாதாரணமாக ஏரி, குளங்களில் குளிக்கச் செல்லும் பெண்கள், இலையும் பூவுமாய் இருக்கும் ஆவாரம் செடியிலிருந்து ஒரு கொத்தை உடைத்து  நசுக்கித் தலையில் தேய்த்துக் குளிப்பார்கள்.  எள்ளுச் செடியும் இதற்குப் பயன்படும்.  கூந்தல் பூப்போல மென்மையாக மிளிறும். நவீனத்தின் தாக்கத்தில் ஷாம்புவுக்கும் விதவிதமான பசைகளுக்கும் மாறிய பெண்கள், அவற்றின் பக்க விளைவுகளை அறிந்துகொண்டு மீண்டும் பாரம்பரிய வழியில் அழகைக் காப்பாற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம், பக்க விளைவுகள் எதுவும் இல்லை. செலவும் கைக்குள் இருக்கும்! கஸ் தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ரோஜா மொட்டு, சம்பங்கி விதை, தவனம், வெட்டிவேர், மகிழம்பூ, ஆவாரம்பூ, திரவியப்பட்டை இதை எல்லாம் தேவையான அளவுக்கு வாங்கி அரைத்து பயன்படுத்தலாம். தினமும் இதில் குளித்தால் சருமம் பளபளக்கும்.  கூந்தல் உதிராது.  சோப்புக்கு பதிலாக உபயோகிப்பவர்கள் கடலைப் பருப்பு, பயத்த மாவு இரண்டையும் இதில் சேர்த்துக்கொள்கிறார்கள்ஒரு சிலருக்கு வறண்ட சருமம் இருக்கும்.  சிலருக்கு சருமம் எண்ணெய்ப் பசையாய் இருக்கும். அவரவருக்குத் த...

என்றும் அன்புடன்,

படம்
========================================================================= அன்பு உள்ளங்களுக்கு . "முதலில் நன்றிகள்.இன்றுதான் இவ் வலைப்பூ தொடங்கியது போல் இருக்கிறது.மூன்று ஆண்டுகளாகி விட்டது. கூடியவரை தொடர்ந்து  இந்தபக்கம் நீங்கள் அடிக்கடி வந்து போவது வருகைதாரகள் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தொடுவதில் இருந்து தெரிகிறது. அடிக்கடி வாருங்கள் என்பதைத் தவிர இந்த மகிழ்வான நாட்களில் வேறு என்ன சொல்லப்போகிறேன். என்னை பாதித்து,அதை நீங்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நான் விரும்புவதை அதிகமாக வெளியிட்டுள்ளேன்.அது உங்களுக்கு பிடித்தும் இருக்கலாம்.இல்லாமலும் போகலாம். அவ்வப்போது சொந்த இடுகைகளும் இடப்பட்டுள்ளன.ஆனால் அப்படி இட்டவைகள்தான் அதிக தோழர்களை பார்வையாளர்களாக வரவைத்துள்ளது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. 2011 அன்று தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் அன்று ஆரம்பமான "சுரன் " இந்த தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. வேறென்ன .இன்றைய இடுகை பிடிக்கவில்லை என்பதற்காக நாளை வராமல் இருந்து விடாதீர்கள். மீண்டும் நன்றிகள். என்றும் அன்பு...

2012 ம் ஆண்டில் சிறந்த மனிதர்கள்

படம்
இவர்கள் 2012 ம் ஆண்டில் சிறந்த மனிதர்கள் தேர்வுக்காக டைம் இதழ் தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்கள். இந்தப்படத்தில் உள்ளவர்கள் தவிர தேர்வுக்கான வரிசை யில்  இடம் பெற்றவர்கள் கீழே இருக்கிறார்கள். இதில் இந்தியர்கள் இருப்பதாக எனது பார்வைக்கு பெயர்கள் ஏதும் தட்டுப்பட வில்லை. உங்கள் பார்வையில் தட்டுப்படுகிறார்களா? சென்ற முறை ஈழத்தமிழர்கள் படுகொலை புகழ் பெரியண்ணன் ராஜ பக்சே வரிசையில் இடம்பிடித்து முதலிடம் பிடிக்க பலவகைகளில் லட்சக்கணக்கில் பணம் ,செல்வாக்கை பயன் படுத்தி கடைசியில் தமிழர்களின் எதிர் செயலால் வெற்றிகரமாக மண்ணைக் கவ்வினார் . Kim Jong Un   Mohamed Morsi  , Malala Yousafzai ,  Jon Stewart,  Stephen Colbert , Undocumented Immigrants ,  Psy ,  The Mars Rover ,  Barack Obama ,  Bashar Assad , Felix Baumgartner  , The Higgs Boson Particle , Hillary Clinton ,  Pussy Riot , Aung San Suu Kyi and Thein Sein ,  Bill Clinton ,Gabby Douglas மற்றும் ,Ai Weiwei, Sandra Fluk...

கருத்து[ப்படங்]கள்

படம்
அசீம் திரிவேதி என்ற ஓவியர் வரைந்த ஊழல் ஒழிப்பு சம்பந்தமாக வரைந்த கருத்துப் படங்கள் [கார்டூன்கள்] பிரசுரமாகியதை சென்ற வாரக் கடைசியில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜரான அஸீம் திரிவேதி பிணையில் வர   மறுத்து விட்டா ர். "உண்மையைச் சொல்வதற்கு துரோகிப் பட்டம் கிடைக்கும் என்றால் தேச துரோகி என்று தான் முத்திரை குத்தப்பட்டாலும் மகிழ்ச்சிதான் "  என்று அவர் கூறிவிட்டா ர். இந்திய அரசியல்வாதிகளை ,ஊழலை விமர்சித்து கேலிசெய்யும் கார்டூன்கள் சிலவற்றை வரைந்ததற்காக தான்  திரிவேதி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..  ஒரு படத்தில் இந்திய நாடாளுமன்றம் ராட்சத கழிப்பறையாக வரைந்திருந்தார்.  மற்றவற்றில் இந்தியாவின் தேசிய சின்னம் கேலிக்குள்ளாகும் விதமாக மாற்றி வரையப்பட்டிருந்தன. இந்திய அரசியல் சாசனத்தைக் இழிவுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தேச துரோகம் தொடர்பான சட்டப் பிரிவின் கீழ் ...

சொல்படி செயல் பட முடியா பிரதமர்

படம்
அமெரிக்காவில் இருந்து வெளி வரும் டைம் இதழ் உலக நாடுகள் பற்றிய செய்திகளை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்குவதுண்டு. அது இப்போது நமது இந்திய பிரதமரை ஸ்கேன் செய்துள்ளது. செயல்படாத பிரதமர் மன்மோகன் சிங் என்று அட்டை படத்துடன் செய்தி வெளியிட்டுபெருமை படுத்தியுள்ளது.  79 வயதாகும் மன்மோகன் சிங்கின் அட்டைப் படத்துடன் "டைம்' பத்திரிகையின் ஆசியப் பதிப்பு அடுத்த வாரம்தான் வெளிவர உள்ளது.  அதில் மன்மோகன் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரை பின் வருமாறு உள்ளது:  " "மன்மோகன் சிங் அரசில் நிலவும் பணவீக்கம், ஊழலால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தெளிவான பொருளாதாரத் திட்டம் எதுவும் இல்லை; நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது; ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.  அரசு மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், மன்மோகன் சிங் செல்வாக்கை இழந்து வருகிறார்.  கடந்த 3 ஆண்டுகளாக தனது நம்பிக்கைத் ததும்பும் சாந்தமான முகத்தை மன்மோகன் சிங் இழந்துவிட்டார்.  அவர் தனது அமைச்சரவை சகாக்களை கட்டுப்பாட்டில...