இடுகைகள்

ஆய்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறப்பிற்கு பின் வாழ்வு?

படம்
அறிவியல் வளர்ச்சி :                                                                                                                               வி.இ.குகநாதன்  18-11-16 பிரித்தானிய ஊடகங்களில் அலசப்பட்ட ஒரு முக்கிய விடயமாக 14 வயது சிறுமி (புற்றுநோயால்) தனது இறப்பிற்கு பின்னரான வாழும் ஆசையினை நிறைவேற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்ததனைக் குறிப்பிடலாம்.  அதாவது இன்றைய நிலையில் குறித்த புற்றுநோயிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.  ஆனால் இன்னும் ஒரு நூறு வருடங்களில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும்.  உதாரணமாக நூறு வருடங்களிற்கு முன்னர் உயிர்க்கொல்லி நோய்களான மலேரியா, கசம் போன்றவற்றுக்கு இன்று மருந்து இருப்பது போன்றது. எனவே இறந்த சிறுமியின...

இதுவும் கொஞ்ச காலம்தான்

படம்
பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக் களை, வங்கியில் கொடுத்து மாற்றும் திட்டத் தில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்து வோர் விபரம் வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும்.வருமானவரி செலுத்தாமல்  தவறு செய்திருந்தால், 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.  கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டு வரவும், கள்ள நோட்டுகளை ஒழிப் பதற்காகவுமே, பழைய ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தியர்களை, நியாயமாக வரி கட்டுபவர் களாக மாற்றுவதே, இதன் மற்றொரு நோக்கம். அதனால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து வைத்திருப்போருக்கு, இந்த திட்டத்தை பயன்படுத்தி, அபராதம் விதிக்கப்படும்.  நாட்டில், புழக்கத்தில் உள்ள, 17 லட்சம் கோடி ரூபாய் கரன்சியில், 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு, 88 சதவீதம் ஆகும். எனவே, கணிசமான தொகை பதுக்கி வைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. வங்கிகளுடன்தொடர்பு கொண்டு, இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், பழைய நோட்டுகளை கொடுத்து, புதிய நோட்டு பெறுவோர்; இரண்டு லட்சலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக, 'டெபாசிட்' செய்வோரின...

ஜி.எ.ஸ்டி., சாதகமா? பாதகமா?

படம்
ஜிஎஸ்டி என்ற சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியின் மிக முக்கிய கட்டமாக, 4 அடுக்கு வரி விதிப்பை முடிவு செய்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில்.  5%, 12%, 18%, 28% என்று நான்கு வகையாக இது விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு இதனால் சாதகமா? பாதகமா என்ற விவாதங்கள் நடந்த வண்ணம் இருந்தன.  பல்வேறு யூகங்கள் கிளம்பின. தற்போதுள்ள வரி அமைப்பு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.  பொருள் உற்பத்தியில் இருந்து நுகர்வோர் கையில் சேர்வது வரை உற்பத்தி வரி, விற்பனை வரி, நுழைவு வரி என்று ஏகப்பட்ட வரி விதிப்புகள் வரிசையாக சேர்க்கப்படுகின்றன.  இதனால் பொருள் கனக்கிறதோ இல்லையோ, விலை நிச்சயமாக கனமாக இருக்கும். இதுதான் தற்போதைய வரி விதிப்பில் உள்ள பாதகம். ஜிஎஸ்டி வந்தால் இதெல்லாம் காணாமல் போய்விடும். ஒரு பொருளுக்கு ஒரே வரிதான் என்றனர். வரியை முடிவு செய்து விட்டாலும் இன்னும் இதற்கான தெளிவு வந்தபாடில்லை.  எந்த பொருள் எவ்வளவு உயரும் அல்லது குறையும் என்பது பற்றி இன்னமும் யூகங்கள்தான் உலவுகின்றன.  இருந்தாலும், உணவு தானியம் உட்பட, மக்கள் அத்தியாவசியம் பயன்படுத்தக...

காவிரியில் அணை...?

படம்
காவிரி நீர் கேட்டுத் தமிழகத்தில் குரல் வலுக்கும் போதெல்லாம், இங்கே ஏன் இந்நாள்வரை எந்த அணையும் கட்டப்படவில்லை என்ற கேள்வியையும் சேர்த்தே எழுப்புகிறார்கள். “வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் காவிரித் தண்ணீரைத் தடுத்து நிறுத்த, நீங்கள் ஏன் அணை கட்டவில்லை?  அணை கட்டியிருந்தால் இந்நேரம் எவ்வளவோ நீரைச் சேமித்திருக்கலாமே... அதைவிட்டு அண்டை மாநிலத்திடம் ஏன் கையேந்திக்கொண்டிருக்க வேண்டும்?” என்று சிலர் கேட்பது வாடிக்கையாக இருக்கிறது. முதலில் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். ஆற்றின் முதல் துளி உயரமான இடத்தில் விழுகிறது. அது ஆறாகிப் பெருகிச் சேர்ந்து பள்ளமான இடத்தை நோக்கி வருகிறது. அது அடைகின்ற இறுதிப் பள்ளம் கடல். ஆறு உற்பத்தியாகும் இடம் மலைச் சிகரங்களாகவே இருக்கும். மலையிலிருந்து சமவெளிக்கு இறங்கும் போதுதான் அவ்வாறு அமைதியாகப் பாயும். சமவெளியில் ஆறு நகர்வதே தெரியாது. தேங்கிய நீர்ப்பரப்பாகவே தெரியும். மலையிலிருந்து இறங்கும் ஆற்றுக்குத்தான் சுற்றிலும் மேட்டு முகடுகள் வாய்க்கும். சமவெளியில் அதன் கரை மட்டுமே உயரமாக இருக்கும்.  ஆற்றுப் படுகையும் கரையை ஒட்டியுள்ள சமவெளி...