இடுகைகள்

காவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொது அமைதியை கெடுக்கும்

படம்
திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன், சில தினங்களுக்கு முன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை எடுத்துள்ளார். அதை டிடிஎச்சில் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி இருந்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் வந்த செல்போன் நம்பர்களை வைத்து விசாரித்தனர். இதில், ஓசூரை சேர்ந்த மூர்த்தி (26), முருகன் (42), சூர்யா (42) ஆகியோர் மிரட்டியது தெரியவந்தது.  கமல்ஹாசனின் ரசிகர்களான 3 பேர் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் களை போலீசார் கைது செய்தனர். நேற்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கொலை மிரட்டல் என்பது மிக மோசமான செயல்தான் .ஆனால் இவர்களை பொன்ற ரசிகர்கள் மிரட்டல் என்பது வெறும் வாய்ச்சொல்.அவர்கள் ரசிக்கும் நடிகரின் மீதான பாசத்தால்...

காவல்துறை -மின் துறை

படம்
 மின்சாரம் இல்லாதது மக்களை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது .வடிவேலு கிணறு காணவில்லை கதையாகிவிட்டது. மிசாரம் அதிக உற்பத்திக்கு வழி இருந்தும் அது கருணாநிதி போட்ட திட்டங்கள் என்பதால் அதை கண்டு கொள்ளாமல் ,அதிக விலைக்கு மின்சாரத்தை வெளியில் இருந்தும் வாங்காமல் ,மத்திய அரசிடம் அதிகம் மின்சாரம் கேட்டு வாங்காமல்  இருக்க பிடிவாத குணம் படைத்த ஜெயலலிதா வாழ் மட்டுமே இருக்க முடியும். மக்கள் பற்றி அவருக்கு கவலை இல்லை.அவர்களுக்கு மறதி அதிகம்.அது போக இரட்டை இலை ,எம்ஜிஆர் இருந்தால் போதும் என்றும் எண்ணுகிறார். இதே மக்கள்தான் முன்பு 40க்கு 0 வை முன்பு தந்தார்கள் என்பதை மறந்து விட்டார். அப்போது இரட்டை இலையும்,எம்ஜிஆரு ம் கைகொடுக்கவில்லை என்பதை ஜெ நினைவில் கொள்ள வேண்டும். அதற்குள் பிரதமர் கனவில் மிதப்பது தவறு. உண்டான முதல்வரை தக்கவைக்கப் பாருங்கள் . இனி இன்றைய கதைக்கு வருவோம் : தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறையை கண்டித்து ஆர்பாட்டம், உண்ணாவிரதம், கஞ்சித்தொட்டி திறப்பு போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது.    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் , நம்பி...

இத்தாலி மிரட்டல்

படம்
நம் இந்திய எல்லைக்குள் வந்து கடலில் மீனைப் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை காரண,காரியமில்லாமல் துப்பாக்கியால் சுட்டு இருவரை பலி கொண்ட இத்தாலிய மாலுமிகளை தங்களிடம் ஒப்படைக்காததால் தந்து தூதுவரை திரும்பப்பெற போவதாக இத்தாலி பிரதமர் மரியோ மோன்டி பயமுறுத்தியுள்ளார். திரும்பப்பெற்று விட்டு போங்களேன்.அதனால் இந்தியாவுக்கு என்ன இழப்பு? ஆனால் இந்திய சோனியா அரசு இத்தாலியர்களை விடுவிக்கத்தான் முயற்சித்தது,கேரள மக்களின் கோப எதிர்ப்பும்,நீதிமன்ற கோபமான கேள்வியால்தான் மன்மோகன் சிங் சோனியா,மோன்டி விருப்பப்படி மாலுமிகளை திரும்ப அனுப்ப முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார். பெரிய இடத்தையும் பகைக்க முடியவில்லை.இந்திய மீனவர்கள்,நீதிமன்றத்தின் கோபத்துக்கு எதிராகவும் ஒன்றும் செய்ய இயலவில்லை.மீனவர்கள் கோபம் என்றாலும் பரவாயில்லை,நீதிமன்றமும் அல்லவா மாலுமிகள் விடயத்தில் எதிர்ப்பாக இருக்கிறது. _______________________________________________________________________ சீனாவில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க பெரு நகரங்களின் கழிவு நீரை  சேகரித்து அதை பெரிய ,பெரிய தண்ணீர் தாங்கிகளில் வரிசையாக...

ஆரம்பம் அமர்க்களம்,,,,,,

படம்
| காவல்நிலையத்தில் இருந்து 7 பேரை மீட்டுச் சென்ற அமைச்சர், எம்எல்ஏ . செய்தித்துறை அமைச்சர் செந்தமிழன் சென்னையில் உள்ள காவல்நிலையத்திற்கு நேரில் வந்து, அதிமுகவினர் 7 பேரை மீட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுகவினர் சிலர்  இரவு கொடி, தோரணம் மற்றும் வரவேற்பு தட்டிகள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அவர்கள் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள சிலோன் ஹோட்டலில் அமர்ந்து உணவு அருந்துபோது, விவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அந்த நேரத்தில் தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசு அப்பகுதியில் சென்றுள்ளார். ஹோட்டலில் இருந்து சத்தம் வருவதை அறிந்த அவர், உள்ளே சென்று விசாரித்துள்ளார். அப்போது நாங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். அந்த சமயத்தில் அதிமுகவினருக்கும், தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து அதிமுகவினரை துணை ஆணையர் தாக்கியதாக கூறப்படுகிறது. நுங்கம்பாக்கம் ...