இடுகைகள்

அலைவரிசை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2ஜி கணக்கு?

படம்
2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்கான இரண்டாம் கட்ட ஏலத்தின் மூலம், மத்திய அரசுக்கு, 3,639 கோடி ரூபாய் மட்டும் கிடைக்கும் எனத் தெரிகிறது.  மும்பை, உ.பி., கிழக்கு பகுதி ஆகிய மண்டலங்களுக்கான ஏலத்துக்கு, யாருமே விண்ணப்பிக்க வில்லை. "2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில்ரூ  1,80,000கோடிகள்  முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட உரிமங்களுக்கு பதிலாக, புதிய உரிமங்கள் வழங்குவதற்கு, மறு ஏலம் நடத்தும்படியும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதன்படி, ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்துக்கான சேவையை வழங்குவதற்கு, கடந்தாண்டு நவம்பரில் ஏலம் விடப்பட்டது. இதில், அரசு எதிர்பார்த்த வருவாயை விட, மிக குறைவாக, 9,407 கோடி ரூபாய் மட்டும்  கிடைத்தது. அதேநேரத்தில், சி.டி.எம்.ஏ., தொழில் நுட்பத்துக்கான சேவையை வழங்கும் ஏலத்துக்கான அடிப்படை விலை, அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த ஏலத்தில், எந்த நிறுவனமும் பங்கேற்கவில்லை.இதையடுத்து, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஏல தொக...

சிதம்பர ரகசியம்

படம்
                           2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன் நடந்து வந்தாலும்... அந்த வழக்கின் வெளி விவகாரங்கள் அதிகமாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்தான் இந்த வழக்கின் தட்ப வெப்ப நிலையைத் தீர்மானித்து வருகிறது. வழக்கின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். 'ஏலம் எடுக்கும் முறை வேண்டாம், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற விதிமுறையைத் தொலைத் தொடர்புத் துறை பின்பற்றியபோது, நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம்  நினைத்து இருந்தால் அதனைத் தடுத்திருக்க முடியும்!’ என்று நிதி அமைச்சகத்தின் ரகசியக் கடிதம் ஒன்றைத் தனது மனுவுக்கான ஆதாரமாக சுவாமி கொண்டுவந்தார். ''மத்திய நிதி அமைச்சக அதிகாரியே ஒப்புக்கொண்டதைவைத்துப் பார்த்தால்... சிதம்பரத்துக்குத் தெரியாமல் எதுவும் நடந்து இரு...

ஸ்பெக்ட்ரம்:

ஆ.ராசாவின் கேள்விகள். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தனக் காக வாதாடி வரும் முன் னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தொடர் பல்டி அடித்து வருகிறார். முன் னுக்குபின் முரணான வாதங் களை அவர் முன்வைத்து வருகிறார். திங்களன்று வாதாடிய அவர், பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய நிதிய மைச்சர் ப.சிதம்பரம் ஆகி யோருக்கு தெரிந்துதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அனைத்தும் நடந்தது என்று கூறினார். ஆனால், செவ்வாயன்று ஆ.ராசாவின் சார்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் சுசீல்குமார், பிரதமர் மன் மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோரை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சேர்க்க வேண்டும் என்பது ஆ.ராசா வின் கருத்தல்ல என்றும், பத்திரிகைகள் அவ்வாறு திரித்து எழுதிவிட்டன என் றும் கூறினார். ஸ்பெக்ட்ரம் ஊழலை ஊடகங்கள்தான் ஊதி பெரிதாக்கிவிட்டன என்று திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து கூறி வரும்நிலை யில், ஆ.ராசாவின் வழக்கறி ஞரும் அதை எதிரொலிக் கும் வகையில் இவ்வாறு கூறினார். ஊடகங்கள் தங்க ளது வார்த்தைகளை எனது வாயில் திணிக்கக் கூடாது. நீதிமன்றத்தை விட்டு வெளி யே செல்லும்போது உண் மையை மட்டும் அவர்கள் எடுத்துச் செல்ல...