இடுகைகள்

அரிசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிணந்தின்னி பா.ஜ.க. ! பணந்தின்னி அ.தி.மு.க. !!

படம்
க டந்த நூறாண்டுகளில் காணப்படாத வறட்சியில் சிக்கி, தமிழகமே பாலைவனம் போலாகிவிட்டது.  மாநிலம் முழுவதும் தை பட்ட விவசாய சாகுபடி பொய்த்துப் போய், ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்துகொண்டும் இறந்து போனார்கள். வறட்சியால் விவசாயத்தின் துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பும் பாழ்பட்டு, ஆடு – மாடுகளை வந்த விலைக்கு விவசாயிகள் தள்ளிவிடுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. விவசாயம் பொய்த்துப் போனதால் வேலையில்லா திண்டாட்டம், குடிநீர்கூட இல்லாத அவல நிலைமை என்ற இரண்டு தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், கிராமப்புற மக்கள் ஊரைக் காலிசெய்துவிட்டு நகரங்களை நோக்கி அகதிகளாக ஓடிவரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனினும், இந்த வறட்சி தமிழக விவசாயிகளின், தமிழக மக்களின் போராட்டக் குணத்தை வற்றச் செய்துவிடவில்லை. கோவை மாவட்டம், சூலூர் ரோடு, ராவுத்தர் பிரிவு பகுதியில் தண்ணீரின்றிப் பட்டுப்போய் நிற்கும் தென்னை மரங்கள் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திவரும் போராட்டம் ஒரு மாதத்...

தொ[ல்]லை நோக்கு

படம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்து விட்டது. சென்னையில், 2003இல் இருந்த குடிநீர்ப் பிரச்சினை தற்போது எழுந்துள்ள தாகவும், முடிந்த அளவு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முயல்வதாகவும் சென்னை குடிநீர் வாரியமே குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது. சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் “சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு 15 ஆண்டு களில் இல்லாத அளவுக்குக் குறைந்து விட்டது. தற்போதைய இருப ்பு மொத்த கொள்ளளவில் 10 சதவிகிதம் தான்”என்று தெரிவித்துள்ளனர். இதிலிருந்தே குடிநீர்ப் பிரச்சினை எவ்வளவு பெரிதாக எழுந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். சென்னை குடிநீர் வாரியம் முன்பு 83 கோடி லிட்டர் குடிநீரை வினியோகித்தது. ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக 55 கோடி லிட்டர் குடிநீர் தான் நகர் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கும் சிக்கல் வந்து விட்டது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் பல பகுதிகளுக்கு தண்ணீர் விடப்படுகிறது. தாய்மார்கள் காலிக் குடங்களுடன் குடிநீருக்காக அலையும் அவல நி...

பழைய சோறு தேடி நிதம் தின்று

படம்
நமது உணவு முறைகள் இப்போது மாறி விட்டன.  நமது முன்னோர் சாப்பிட்ட பழைய சோறு, வெங்காயம் இணை  இன்றளவும் அவர்களை திடகாத்திரமாக வைத்திருக்கிறது.  துரித உணவு சாப்பிட்டு வரும் இன்றைய இளையமுறையினர், 30 வயதிலேயே சர்க்கரை, இதய நோய்களால் பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. ஆகவே, பழைய சோறு சாப்பிடுவதை இனி வழக்கமாக்கிக் கொண்டால் ஆரோக்கியம் நம்மை தேடி வரும்.  பழைய சோறு என்றால் கேவலமாக நினைக்கும் நாம், அதிலுள்ள நன்மைகள் குறித்து அறிந்து கொண்டால் இனி பழைய சோறை மிக பெருமையாக காண்பீர்கள்.. பழைய சோற்றில் தான், வைட்டமின் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிர, சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கின்றன. இது நமது உணவுப்பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்.  இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால், அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. சிறிய வெங்காயம் உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான் கொழுப்பைக் குறைத்து கட்டுடலுடன் வைத்திருக்கும். அதை விட மாரடைப்பை தடுக்கும் சக்தி அதற்கு உள்ளது. காலை உணவாக ...

சோறு சாப்பிடுவது எப்படி?

படம்
சரி விகித உணவு என்றால் என்ன?  எந்த விழுக்காட்டில் எந்த உணவை எப்படி உண்பது? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். சர்க்கரை சத்து: மாவு சத்து என்றும், சர்க்கரை சத்து என்றும் அழைக்கப்படும். இந்த உணவே நமது பெரும்பான்மையான உணவு என்று கூறலாம். உடலுக்கு தேவையான அதிவிரைவான சக்தியை இந்த சர்க்கரை சத்து தருகிறது. அதனால் தான் இந்த உணவை நாம் தேடி எடுத்துக்கொள்கிறோம். இந்த சக்தி இனிப்பில் இருந்து மட்டுமல்லாமல் தானியங்கள், கிழங்கு வகைகள் போன்றவற்றில் இருந்தும் பெறப்படுகிறது. இந்த உணவுகள் இரைப்பையில் சென்ற உடன் நொதிக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் குளுக்கோசாகமாற்றப்பட்டு மனிதன் என்ற இயந்திரம் சிறப்பாக இயங்க எரியூட்ட படுகிறது. இந்த குளுக்கோஸ் உயிர் அணுக்களில் விரைந்து புகுந்து சக்தியாக மாறி மனிதனை இயக்குகிறது. இதனால் தான் உடலுக்கு (நோயிலிருக்கும்போது) விரைந்து சக்தி தர குளுக்கோசு தரப்படுகிறது. ஒரு கிராம் சர்க்கரை சக்தியில் இருந்து நான்கு கலோரி வெப்பம் கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளனர். ஒரு கிராம் தண்ணீரை ஒரு டிகிரி செல்சியசு அளவு சூடு படுத்த தேவைப்படும் வெப்பமே ஒரு கலோரி எனப்படும். ச...