இடுகைகள்

பதிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"2,00,000"

படம்
இன்று என்னை  பொறுத்தவரை முக்கிய நாள். " சுரன் "வலைப்பக்கம் துவக்கி  இடுகைகள் இட ஆரம்பித்தப்பின்னர் இந்த பக்கம் வந்து சென்றவர்கள்.எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்டியுள்ளது. இரணடு லட்சம்பேர்களாக வந்திருக்க வாய்ப்பில்லை.இதில் பலர் பலமுற்றை திருப்பி வந்து சென்றவர்களாகவே இருப்பார்கள். வந்து சென்ற அனைவருமே பக்கத்தை -இடுகையை படித்து சென்றவர்களாக இருப்பார்கள் என்றும் சொல்லுவதற்கில்லை. இடுகை பிடித்தவர்களும் இருக்கலாம்.என்ன இடுகை இது என்று வெறுத்துப்பொனவர்களும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும்,எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் வந்து எண்ணிக்கையை 2,00,000 ஆக்கி சென்ற அனைவர்களுக்கும் எனது நன்றி. இந்த எண்ணிக்கை இடுகையை படித்தவர்களாக -விரும்பியவர்களாக இருப்பார்களேயானால் இன்னமும் மகிழ்ச்சி அடைபவனாக இருப்பேன். எனது எண்ணங்களையே பதிவதினாலும்,செய்திகள் ஏற்படுத்திய தாக்கங்களே இடுகைகளாக இருந்ததினாலுமே மற்றவர்கள் கருத்தை சொல்லும் வழியை எடுத்து விட்டேன்.காரணம் அவர்கள் கருத்து என்னை பாதித்து விடக்கூடாது.அவர்களுக்கு பதில் சொல்லி நான் சொல்லவந்தது மாறிவிடக்கூடாது என்ற பயம்தான்.மேலும் ...

ஒரு லட்ச வணக்கங்கள்.

படம்
இணையத்தில் செய்தி களை வாசித்து விட்டு கருத்துக்களை பதிவு செய்துவந்தேன்.சில இதழ்கள் நமது கருத்துக்கள் அவர்களை இடிப்பது போல் இருந்தால் மதிப்பாய்வுக்கு பின் அதை வெளியிடாமலேயே குப்பையில் போட்டது. அப்போதுதான் எல்லோரையும் போல் நாமும் ஒரு வலைப்பூவை உருவாக்கி உலவ விட்டால் என்ன என்ற நப்பாசை.யார் அதை படிக்கப்போகிறார்கள்.என்ற எண்ணமும் இருந்தது.அப்படி படிக்காததே நமது அரைவேக்காடு எழுத்துக்கும் நல்லது என்ற எண்ணமும் வர இந்த "சுரன்' உருவானது. இப்போது 'சுரன்'உருவாகி கிட்டதட்ட 15 மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை 1,00,080 முறை சுரன் பார்வையிடப்பட்டுள்ளது.இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தரும் நிகழ்வு. எனது கருத்துக்களைத்தான் இதுவரை தந்து வந்துள்ளேன்.பிற தளங்களில் இருந்து என்னை கவர்ந்த பிறர் படிக்க வேண்டும் என்று நான் எண்ணிய கட்டுரைகளை-செய்திகளை நன்றி: என்று குறிப்பிட்டு மறு பதிவிட்டுள்ளேன். அது மற்றவர்களை கவர்ந்ததா,படித்தார்களா என்பது வேறு விடயம்.அதை தொடர்ந்து செய்யவிருப்பம். சுரனில் கருத்திட்டவர்கள் கருத்தை அப்படியே வெளியிட்டு வந்துள்ளேன்.அதை எனக்கு ஆதரவாக திருத்தியமைக்கவில்லை.அதுவும...

ஏமாற்றுதலே காங்கிரசின் கொள்கை

படம்
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் -எஸ்.கண்ணன் உலகம் கண்டிருக்காத புது அனுப வத்துடன், ஊழல் இந்தியாவில் அதிகரித் திருக்கிறது. தோண்டத் தோண்ட வெளி வரும் ஒன்றாக அவதாரம் எடுத்திருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் சிறையில் அடைக் கப்பட்ட காலம் மலையேறி, இன்றைய அமைச்சர்கள், அவர்கள் ஆட்சியிலேயே ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகி, அதைத் தொடர்ந்து, பதவியை ராஜினாமா செய்வதும், பின் சிறைக்கு செல்வதும், அதனைத் தொடர்ந்து அவர் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் சிறைபுகுவதும், இந்திய வரலாறு கண்டிராத ஒன்று. காங்கிரஸ் தலைவர் களான அசோக் சவாண், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழலிலும், சுரேஷ் கல்மாடி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது ஒதுக்கீடு செய்த பணத்தில் ஊழல் செய்த விவகாரத்திலும் சிக்கியுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அசோக் சவாண் மீதான விசாரணை தீவிரப்படவில்லை. ஆதர்ஷ் ஊழல் குறித்த விவரங்கள் தீப்பி டித்து எரிந்து நாசம் ஆனதாக வெளிவந்த தகவல், ஊழல் குறித்த செய்தியை விடவும் பேரதிர்ச்சியைத் தருகிறது. திமுக தலைவர் களான ஆ. ராசா, மு. க. கனிமொழி ஆகியோர் கைதைத் தொடர்ந்த...