உடனே தூக்கிலிடுங்கள்-1,372 கடிதங்கள்
கசாப்பை உடனே தூக்கிலிடுங்கள்' என, வலியுறுத்தி சமூக சேவகர் ஒருவர், கடந்த நான்கு ஆண்டுகளாக, ஜனாதிபதிக்கு ஒருநாள் விடாமல், கடிதங்கள் எழுதி வருகிறார். மும்பையில், 2008, நவம்பர் 26ம் தேதி, பயங்கரவாதிகள், 10 பேர் தாக்குதல் நடத்தினர். இதில், வெளிநாட்டவர்கள் சிலர் உட்பட, 166 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானிலிருந்து, கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்திய, இந்த பயங்கரவாதிகளில் ஒன்பது பேர், பாதுகாப்புப் படையினரால், சுட்டுக் கொல் லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் சிக்கினான்.மும்பை, ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவனுக்கு, அதே சிறையில், அமைக்கப்பட்ட சிறப்புக் கோர்ட், மரண தண்டனை விதித்தது. அந்த மரண தண்டனையை, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து, தனக்கு கருணை காட்டக்கோரி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, கசாப், கருணை மனு அனுப்பியுள்ளான். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தன் நெருங்கிய நண்பரை பறிகொடுத்த, சமூக சேவகர் நாராயண் பாட்டீல் என்பவர், "பயங்கரவாதி கசாப்பிற்கு உடனே தண்டனை கிடைக்கும்' என, நம்பினார். நாட்கள்தான் உருண்டோடின....