அதிமுக:"வேறு வழி இல்லை."

சசிகலாவை அதிமுக தலைமைக்கு அழைப்பது காலங்காலமாக கட்சிக்காக உழைத்து வந்த தொண்டர்களுக்கு மட்டுமல்ல அவரை தேர்ந்தெடுத்தவர்களுக்குமே அதிர்சசியான ஒரு செயல்தான் ஆனால் அதை விட்டால் வேறு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. மற்ற கடசிகள்போல் இரண்டாம் கட்டத்த்தலைவர் யாருமே அதிமுகவில் கிடையாது. இருமுறை பன்னிர்செல்வம் செல்வம் ஒப்புக்கு முதல்வராக இருந்தாலும் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு கிடையாது. அப்படி செல்வாக்கிருந்திருந்தால் அதிகாரத்தை அவருக்கு ஜெயலலிதா கொடுத்திருக்க மாட்டார்.அது அவருக்கு ஆபத்தை அல்லவா உண்டாக்கி விடும். எப்பவும் ஜெயலலிதா தன்னைக்கு பின் யார் என்று கையை கட்டவும் இல்லை.அவருக்குப் பின் தலைமைக்கு யாரை தேர்தெடுக்கலாம் என்ற அளவுக்கு இரண்டாம் கட்ட தலைவர் யாரையும் வளர விடவில்லை. யாரை எப்போது பதவியில் ஊடக வைப்பார்,அவரை எப்போது புழுதியில் தள்ளி விடுவார் என்று அவருக்கே தெரியாது. தேர்தல்களில் முதலில் ஒருவரை வேட்பாளராக அறிவித்து விட்டு அவர் வேட்பு மனுத்தாக்கலுக்கு ஊர்வலமாக கிளம்பி வேட்பு மனுதாக்கல் செய்யும் முன்னர் வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிப்பது ஜெயலலிதாவின் வாடிக்கைதான். இ...