இடுகைகள்

இணையம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய வேகம் ?

படம்
உலகின் அனைத்து நாடுகளும், அதிவேக இணைய இணைப்பினைக் கொடுக்கத் தயாராகி வருகையில், இந்தியாவில் இணைய சேவை நிறுவனங்களைக் கண்காணித்து வரும், 'ட்ராய்' அமைப்பு, அண்மையில் மிக மோசமான முடிவினை எடுத்துள்ளது.  விநாடிக்கு 512 கிலோ பிட் வேக இணைப்பினை “பிராட்பேண்ட் இணைப்பின் வேகமாக” அறிவித்துள்ளது.  மிகச் சிறிய தென் கொரியா நாட்டில், அந்நாட்டு குடிமக்களுக்கு 29 mbps இணைய வேகமே சராசரி வேகமாக உள்ளது.  இது நார்வே நாட்டில் 21.3 mbps;  செக் குடியரசில் 17.8 mbps.  இந்தியாவில் சராசரி இணைய வேகம் 2.5 mbps.  இது இலங்கை , தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளில் உள்ள சராசரி வேகத்தைக் காட்டிலும் குறைவாகும்.  இது கம்பி வழி இணைய இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்துவோருக்கு பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.  இந்தியாவில், சென்ற ஜூன் மாதக் கணக்குப்படி, 1.73 கோடி பேர் கம்பிவழி இணைய இணைப்பினையும், 14.19 கோடி பேர் மொபைல் வழி இணைப்பினையும் கொண்டிருந்தனர்.  இந்திய இணைய பயனாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் இணையத்தின் வேகம் மிகவும் குறைவாகவும், ஒவ்வொரு சேவையும...

இலவச வை பையும் ,இணைய உளவும் ,,,.

படம்
இணையத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவரும் சூழலில், அதனால் தோன்றும் பிரச்சனைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.  நம்முடைய இணையப் பயன்பாட்டிற்கு பின்புலத்தில் நாம் அறியாத பல கோடி டாலர் பெருமானமுள்ள வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாம் பயன்படுத்தும் இணையக் கணக்குகள் ஒவ்வொன்றின் செயல்பாடும் கண்காணிக்கப்பட்டு வர்த்தக வாய்ப்புகள் குறித்த ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.  சிறு துளி பெரு வெள்ளமாய் மாறுவதுபோல, நம்முடைய தகவல்களும், நாம் தொடர்பில் வைத்திருக்கும் நபர்களின் தகவல்களும், அவர்கள் தொடர்பில் இருக்கும் நபர்களின் தகவல்கள் எனப் பல்கிப் பெருகும் மிகப்பெரிய சமூக வலைப்பின்னலின் எண்ணங்கள், ஆசைகள், கனவுகள் ஆகிய பலவும் தரவுகளாகப் பதியப்பட்டு, தேவைக்கேற்ப ஆய்வுகளாக தரம் பிரிக்கப்பட்டு நுகர்வோரின் தேவை அறியும் வர்த்தக செயல்பாடுகளுக்காக விற்கப்படுகின்றன. இத்தகைய செயல்பாடுகளைத்தான் முன்னணி இணையதளங்கள் பலவும் காலம்காலமாக செய்துவருகின்றன. ஆனால், அதே நேரத்தில், இத்தகவல்களைக் கொண்டு ஏமாற்றும் வழிகளைக் கையாள, ஏமாற்றுபவர்களுக்கு இந்தத் தொழில் நுட்பம் மிகுந்த அளவில் உதவி...

மொபைல் வழி இணையம்

படம்
உலக அளவில், மொபைல் போன்கள் வழி இணையத்தை அணுகுவது, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழியாக அணுகுவதைக் காட்டிலும் அதிகமாகியுள்ளதாக அறியப்பட்டுள்ளது.  இந்த வகையில் இதுவே முதல் முறை நிகழ்வாகக் கருதப்படுகிறது.  இணையப் பயன்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து வரும் StatCounter என்னும் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. மொபைல் போன் மற்றும் டேப்ளட் மூலம் 52.3% இணையப் பயன்பாடும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழியாக 47,3% பயன்பாடும் தற்போது உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இணையப் பயன்பாடு, தகவல் தொடர்பு உலகில் ஏற்படும் மாற்றங்களால், புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது. 4ஜி அலைவரிசைத் தொடர்புள்ள ஸ்மார்ட் போன்கள் வருகையால், இணையப் பயன்பாடு உலகளாவிய அளவில் அதிகரித்துள்ளது.  இதனால், வழக்கமாக மேற்கொள்ளப்படும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் அதன் கீ போர்ட் வழி இணைய பயன்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. போகிற போக்கில் மொபைல் போன்கள் வழியாக இணையத்தைப் பயன்படுத்துவது எளிதாகிப் போனது மட்டுமின்றி, ஸ்மார்ட் போன்களில் ஏற்படுத்தப்படும் கூடுதல் வசதிகள், இதனை அதிகரித்துள்...

இந்தியாவில் இணையம்.

படம்
முதல் இணைய தளத்தையும் அதனைத் தேடி அறிய பிரவுசரையும் தந்தவர் டிம் பெர்னர்ஸ் லீ.  URL, HTML, மற்றும் HTTP போன்ற பெயர்களை எல்லாம் அவர்தான் கொடுத்தார்.   தொடக்கத்தில் இணையம், யார் வேண்டுமானாலும் மேம்படுத்தக் கூடிய தகவல் மையமாகவும், அனைவரும் தங்களுக்குத் தேவையான தகவலைத் தேடி எடுத்துக் கொள்ளக் கூடிய தகவல் களஞ்சியமாகவும் தான் வடிவமைக்கப்பட்டது.  அப்படி துவக்கப்பட்ட இணையம்  1991ல் செயல்படத் தொடங்கி  ஆகஸ்ட் 6 அன்று தனது வெள்ளி விழா ஆண்டாகிய 25 ஐ அடிந்துள்ளது. “கல்வி சார்ந்த தகவல்கள் அனைத்தும், அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும்” என்ற  நோக்கம்தான்    டிம் பெர்னர்ஸ் லீ  இணையதளம் தோற்றுவிக்க  யொசனையை தூண்டியது.  அந்த நோக்கத்துடன் 1989ல் பணியாற்றத் தொடங்கி, 1990ஆம் ஆண்டு இதனை வடிவமைத்து சோதனை செய்திட்டார் பெர்னர்ஸ் லீ.  தகவல் மையமாக அமைந்தாலும், அங்கு அந்த தகவல் உள்ளது என எப்படி அறிவது? என்ற கேள்வி, இணையத்தை  அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது .  மேற்கண்ட  கேள்விக்கான விடையை, முதலில் உருவான இணைய நிறுவனங்களில் ...

மின் அஞ்சல்கள்

படம்
*ஒவ்வொரு நாளும் குத்துமதிப்பாக 20,500 கோடி மின் அஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு நொடியிலும் 24 லட்சம் அஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் 90% ஸ்பேம் மெயில்கள் என எடுத்துக் கொண்டாலும், மிஞ்சி நிற்கும் அஞ்சல்களின் எண்ணிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. *தங்களுக்கு ஏதாவது கடிதம் வந்திருக்கிறதா என வாசல் பக்கம் இருக்கும் தபால் பெட்டியையே நாள்கணக்கில் பார்க்காமல் தவிர்ப்பவர்கள் உண்டு. ஆனால் மின் அஞ்சல் பயன்படுத்துபவர்களில் 91% பேர், தினந்தோறும் ஒரு முறையாவது தங்கள் அஞ்சல் கணக்கைக் காண்கின்றனர். இணையம் பயன்படுத்தாமல் உங்களால் இருக்க முடியுமா? முடியாது. இந்த வகையில், மின் அஞ்சல்கள் சரியான இடத்தைப் பிடித்துள்ளன.  *மின் அஞ்சல் பயன்படுத்துபவர்களில் 75% பேர் இதற்காகத் தங்கள் ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்துகின்றனர். இந்த தகவல்தான், மக்கள் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகியுள்ளனர் என்பதைக் காட்டியது. *ஜிமெயில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ நூறு கோடியை எட்டிவிட்டது. உலகின் மக்கள்தொகை 700 கோடியை எட்டியுள்ளது. இவர்களில், இன்னும் பெரும்பாலானவர்களுக்கு இணைய இணைப்பு கிடைக்காமல் உள்...

கூகுளிடம் எச்சரிக்கை தேவை.

படம்
கம்ப்யூட்டர், இணையம் மற்றும் ஸ்மார்ட் போன்களில், நம்மைப் பற்றிய தகவல்களை அதிகம் பெற்றுக் கொண்டு, தன் நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதில் முதல் இடம் பெறுவது கூகுள்  வழங்கும் வசதிகளைத்தான்.  விளம்பரங்களைத் தன் வர்த்தகத்தின் அடிப்படையாகக் கொண்டுள்ள, கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு, மக்களும், அவர்களின் விருப்பு,வெறுப்புகளும்  தெரிந்தாக வேண்டியதுள்ளது. எனவே, ஏதேனும் ஒரு வகையில், வழியில் நம்மைப் பற்றிய தகவல்களை கூகுள் பெற்றுக் கொள்கிறது. நாம் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு செயலிகளால் பயன் பெறுவதால், நம்மால் தகவல்களைத் தராமலும் இருக்க முடிவதில்லை.  எனவே, இவற்றை எந்த அளவிற்குக் குறைக்கலாம் என்று பார்ப்போம். நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் சாதனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், கூகுள் ஏற்கனவே உங்களைப் பற்றிய பல தகவல்களைப் பின் தொடர்ந்து வரும் செயல்பாட்டினை மேற்கொண்டிருக்கும்.  அப்படியா! என் அக்கவுண்ட்டை மூடிவிடவா?  என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும்.  மூடுவதற்கும் கூகுள் எளிய வழிகளைத் தரும். ஆனால், நாம் அக்கவுண்ட்டினை மூடிவிட மாட்டோம். ...