இடுகைகள்

விலைவாசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

‘வரலாறு காணா விலைவாசி உயர்வு’

படம்
 - எனும் வாக்கியம் எக்காலத் திற்கும் பொருந்தும் போலும்! அந்த அளவுக்கு முந்திய காலத்தைவிட அதற்கு அடுத்த காலத்தில் அது உயருகிறதே தவிர, குறைந்தபாடாய் இல்லை. இப்போதும் இதே நிலைதான்.  ‘உயர்ந்தவன் யார் ? கிராமவாசியா- நகரவாசியா?  இல்லை,  'விலைவாசி’!' எனும் கந்தர்வனின் கவிதை நித்திய உண்மையாகிப் போனது. நல்ல பொன்னி அரிசி விலை கிலோ ரூபாய் ஐம்பதைத் தாண்டிவிட்டது.பருப்பு விலை நூறை எட்டிவிட்டது.நல்லெண்ணைய் விலை லிட்டர் இருநூற்றி ஐம்பதை நெருங்கிவிட்டது. இப்படியெல்லாம் ஆகும் என்று சில ஆண்டுகளுக்கு முன்புகூட யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.விலைவாசி உயருகிறது என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் இந்த வேகத்தில் அது எகிறும் என்று நினைத்த தில்லை.  முந்திய காலங்க ளுக்கும் தற்போதைய காலத் திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான் & இந்தப் படுவேகம் தான். நுகர்வோர் விலைவாசிப் புள்ளியானது ஆண்டுக்கு 9%க்கும் மேலே உயர்ந்து வருகிறது. அதிலும் உணவுப் பொருட்களின் விலையானது கிட்டத்தட்ட 11 % உயர்ந்து வருகிறது. “ இது மிகவும் அதிகம்தான்” என்று ரிசர்வ் வங்கி கவர்னர் (7.6.13 ...

கலெக்டருக்கும் கையூட்டு?....

படம்
இது யாரோ அரசியல் வாதியின் பேச்சல்ல.நமது முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியரும்,இப்போதைய கோ-ஆப் டெக்ஸ் இயக்குனருமான சகாயம் இ.ஆ.ப,பேசியதின் சுருக்கம். "எதிர்காலத்தில் ஊழலுக்கு எதிராக புரட்சி ஏற்படும் என்ற நம்பிக்கை இப்போது ஏற்பட்டுள்ளது. என்னுடைய 21 ஆண்டு கால அரசுப் பணியில் 19 முறை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். என்னை எத்தனை முறை வேண்டுமானாலும் இடமாற்றம் செய்யலாம். ஆனால் என் நேர்மை இடம் மாறாது. நான் கடந்த 2009-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த போது ராசிபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தேன். என் காருக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் 2 இளைஞர்கள் வேகமாக சென்று கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் நேராக செல்லாமல் வளைந்து வளைந்து சென்றனர். அவர்கள் ஏன் அப்படி வாகனத்தை ஓட்டுகிறார்கள் என்று சந்தேகப்பட்டு அவர்ளை மடக்கி நிறுத்துமாறு என் கார் டிரைவரிடம் கூறினேன். அதே போன்று அந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டது. உடனே நான் அவர்கள் 2 பேரையும் அழைத்து உங்களிடம் டிரைவிங் லைசென்சு இருக்கிறதா? என்று சோதித்த போது அவர்களிடம் டிரைவிங் லைசென்சு இல்லை என்பது தெரியவ...

சாதா பேருந்தே கிடையாது. இங்கே.....

படம்
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் சாதாரண, எல்எஸ்எஸ், எம்.சர்வீஸ், பி.பி, விரைவு, சொகுசு, வால்வோ ஏசி என 7 வகையான பேருந்துகள் இயக்கப்பட்டன.                               தற்போது எல்எஸ்எஸ், எம்.சர்வீஸ், பி.பி வகையான பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. சாதாரண, விரைவு, சொகுசு, வால்வோ என 4 வகை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 1000 குறைந்த கட்டண பேருந்துகள் விரைவு மற்றும் சொகுசு கட்டணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மேலும் அவதிப்படுகின்றனர்.  பேருந்து புறப்படும் இடத்தில் இருந்து, கடைசி வரையில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை குறைவு. 2 அல்லது 3வது ஸ்டேஜில் இறங்குவோர் தான் அதிகம். எனவே தற்போது ஒரு ஸ்டேஜூக்கு ஒரு கட்டணம் என வசூலிக்கப்படுகிறது. முன்பு 2 ஸ்டேஜூக்கு ஒரே கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த அதிரடி  கட்டண உயர்வினால் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மட்டுமே ரூ.1 கோடி கூடுதல் வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தினந்தோ...