இடுகைகள்

மதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"மதம் "பிடித்தவர்கள்?

படம்
இப்போது தூத்துக்குடியில் நடக்கும் கிருத்துவ-இந்து முன்னணி சண்டை மிக நன்றாக இருக்கிறது. "மா.ஆ.தலைவர் அலுவலகம் முன் இந்து முன்னணியினர் நடத்திய  ஆர்ப்பாட்டத்தில் எங்களின் புனித நூல் பைபிள் தரையில் கொட்டப்பட்டு கோசங்கள் எழுப்பப் பட்டன.இது புனித நூலுக்கு அவமானம்.இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுங்கள்" இதுதான் தற்போதைய சண்டை நிலவரம். நமக்கு இந்து முன்னணியினரின் மத வாதம் பிடிக்காது.இந்து முன்னணி மட்டுமல்ல எந்த மதத்தினரின் தீவிரவாதமும் பிடிப்பத்தில்லை.மதமும் பிடிப்பதில்லை. காரணம் நாம் மதம்,கடவுள்,சாதி இவைகள் எல்லாம் மனிதனை பிரித்து அடிமைகளாக்கிட சில ஆதிக்கவாதிகளின் செயல் என்பது நம் கருத்து. மதம் பிடிக்காத நாம் இந்த சண்டையை வேடிக்கை பார்க்க சென்ற போது கிடைத்தது சுவாரசியமானது . ஒரு பள்ளியில் கிருத்துவ மத பரப்பிகள் சிலர் புத் தம் புதிய பைபிள்களை மாண்வர்களுக்கு துண்டறிக்கை போல் வசங்கி தங்கள் ஏசுவிடம் அடைக்கலமாக வேண்டிக் கொள்ள அது மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிய அங்கேயே வாக்குவாதம் பெற்றோர்களுக்கும்,கிருத்துவ மதவாதிகளுக்கும் நடந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற பைபிள்கள் பள...

அமைதியும் சமாதனமும்

படம்
சில இந்திய நடப்புகள் புரிய மாட்டேன் என்கிறது.இந்திய நாடாளுமன்றத்தையே தகர்க்க திட்டமிட்டு தாக்குதல் நடத்தி 9பேர்களுக்கும் மேல் படுகொலை செய்த அப்சல் குரூ  தூக்கை சிலர் கண்டித்துவருவதாக தெரிகிறது. மற்றொரு நாட்டுக்கு ஆதரவாக இந்தியா வந்து மக்களாட்சியின் அடையாளமான கட்டிடத்தையே தகர்க்கவும்,அதை எதிர்த்து போராடியவர்களை கொல்லுவதுமான தீவிரவாதியை தூக்கில் மாட்டியது எதற்காக கண்டனத்துக்குள்ளாகுகிற்து? கண்டிப்பவர்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறார்களா?அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சட்டத்தை மட்டுமல்ல மனிதாபிமானத்தையே மீறி குண்டுகள் வைத்து அப்பாவி மக்களை கொன்று குவிக்கட்டும் அவர்களை சிறையில் மட்டும் வைத்து பாதுகாத்து  பிரியாணி எல்லாம் போட்டு காப்பாற்றுங்கள் என்பதுதான் அவர்களின் வேண்டுகோளா?  இசுலாமியர்கள் மட்டுமல்ல சில அரசியல் வியாதிகளும் சொல்லுகின்றனர். ஒன்றுமே தெரியாத சாலியில் நடந்து சென்ற குற்றத்துக்காக,கடைகளில் அடூத்த நாள் சாப்பாட்டுக்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள்,தங்கள் குழந்தைகளுக்கு பரிசு வாங்க வந்தவர்கள் போன்ற அப்பாவி மக்கள் அதாவது இந்தியர்கள்...

தேவையற்ற மத சீண்டல்கள்....

படம்
மேலை நாட்டினருக்கு என்ன ஆனது. தேவையே இல்லாமல் பிற மதத்தவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதே பொழுது போக்காகிவிட்டது. ஏசுவை பற்றி சில கருத்துக்களை விட்டனர்அவை அவர்கள் சார்ந்த மதம் என்பதால் பிரச்னை வெடிக்காமல் போய் விட்டது. அடுத்து முகமது நபியை கேலி செய்து கருத்துப்படம் வெளியிட்டு வாங்கிக்கட்டிக் கொண்டார்கள். பிள்ளையாரை செருப்பிலும்,சரஸ்வதியை ஜட்டியிலும் படமாக்கி அசிங்கப்பட்டுக்கொண்டார்கள். இப்போது மீண்டும் முகமது நபியை கேலி செய்து பிரான்ஸ் கேலிப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஏற்கனவே இசுலாம் மதத்தை விமர்சித்து குறும்படம் வெளிட்டவர் அமெரிக்கர் என்பதால் அமெரிக்காவுக்கு எதிராக உலகம் முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிற நிலையில் இது தேவையா/ லிபியா அமெரிக்க தூதர் உட்பட் 30 பேர்கள் உயிரை இந்த குறும்படம் குடித்துள்ளது. இப்போது பிரான்ஸ் முறையா? கேலிச் செய்திகளை வெளியிடும் பிரெஞ்சு பத்திரிகையான சார்லி ஹெப்டோ இருபது படங்களை வெளியிட்டுள்ளது. "இது பற்றி பிரான்ஸ் அரசு மிகவும் கவலையடைந்துள்ளதாக" வெளியுறவு அமைச்சர் லாரேண் ஃபாபியே தெரிவித்துள்ளார். அமெரிக்கா...