அழகிரிக்கே அதிரடியா,,,?
"" எனக்கு எதிராக பொய் வாக்குமூலம் அளிக்க, நடிகை ரஞ்சிதாவுக்கு, 20 கோடி ரூபாய் மற்றும் எம்.எல்.ஏ., சீட் தருவதாக பேரம் பேசப்பட்டது. இதற்கு நடிகை ரஞ்சிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கோர்ட்டில் தெரிவித்து, என் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய் வழக்கு என நிரூபிப்பேன்,'' என, சாமியார் நித்யானந்தா கூறினார். திருவண்ணாமலையில், கிரிவலப் பாதையில் உள்ள நித்யானந்தா பீடத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எந்த வேலையையும் துவங்கும் முன், திருவண்ணாமலைக்கு வந்து அருணாச்சலேஸ்வரரை தரிசித்து விட்டுச் செல்வது என் வழக்கம். இந்தியாவில் நாத்திகம் உள்ள தமிழகத்தில் தான், குடிப்பழக்கத்துக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. என் மீது ஆபாச புகார் கூறப்பட்டது. என்னைப் பற்றி அவதூறாக வெளியிட்ட, "சிடி' போலியானது என, கோர்ட்டில் நிரூபிக்க உள்ளேன். இதை வைத்து மிரட்டி, என் பக்தர்களிடம் பணம் பறித்தவர்களையும் கோர்ட்டில் நிரூபிப்பேன், என் மீது பொய் வழக்கு போட்டவர்கள், ரஞ்சிதாவிடம்,...