இடுகைகள்

ஈழம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிங்கள-இந்தி " கஃபே"

படம்
இந்தியாவில் எடுக்கப்பட்ட மெட்ராஸ் கபே என்ற திரைப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய தமிழக உணர்வாளர்களும் தமிழ் அமைப்புகளும், அப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் தங்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும் என வலியுறுத்தியதுடன், இது தொடர்பாக தமிழக காவல்துறை ஆணையாளரிடம் மனு ஒன்றையும் கொடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதில் அளித்த படத்தை இயக்கி, நடித்த ஜோன் ஆபிரகாம், தமிழ் அமைப்புகள் விரும்பினால் நாங்கள் படத்தை முன்கூட்டியே காட்டுவோம் என்று தெரிவித்தார்.  திரைப்படக் குழு, ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், திராவிட விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு  மற்றும் சில தமிழ் அமைப்புகள் மற்றும் இயக்குநர் கௌதமன், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் சீமான் ஆகியோர் உட்பட பலரும் இப்படத்தை பார்த்தனர். படத்தைப் பார்த்த இவர்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். படத்தை பார்த்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்டபோது, மிகவும் கோபத்துடன் ‘மெட்...

கறுப்பு ஜுலை-30ஆண்டு.

படம்
'நான் இறந்த பின்பு எனது இரு கண்களையும் ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப் போகும் தமிழீழத்தை நான் அந்த இரு கண்களாலும் பார்க்க வேண்டும்" ஆனால் மண்டைகள் பிளக்கப்படுகின்றன. வயிறுகள் கிழிக்கப்படுகின்றன; கை, கால்கள் வெட்டப்படுகின்றன; ஆணுறுப்புகள் அறுக்கப்படுகின்றன. தமிழீழத்தைக் காண தன் தன் கண்களை இன்னொருவனுக்கு வழங்கும்படி கேட்டுக் கொண்ட குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டு புத்தரின் காலடியில் போடப்படுகின்றன.   குட்டிமணி தங்கத்துரை, ஜெகன் உட்பட 34 தமிழ் இளைஞர்கள் அங்கு சிதைக்கப்பட்ட பிணங்களாக விழுந்து கிடக்கின்றனர்.   1983 ஆம் ஆண்டு ஜூலை 23 இலங்கை வரலாற்றில் கறுப்புத்தினம் இரத்தக் கறைபடிந்த நாள். பேரின வாதிகள் மிருகங்களாக மாறித் தமிழர்களை வேட்டையாடிய கொடுமை மிகுநாள். ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொலையுண்ட 29 ஆவது நிறைவு ஆண்டு. இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன் 30 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள்...

செல்லாக் காசான இந்திய நிலை,

படம்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன பயணத்தை மேற்கொண்டு அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி பல் பொருளாதார ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளார். இவற்றில் செய்மதித் தகவல் தொழில்நுட்பம், வீதி அமைப்புக்கள் போன்ற உட்கட்டுமானப் பணிகள் தொடர்பான ஒப்பந்தங்கள் முக்கியமானவையாகும். எதிர்வரும் செப்ரெம்பர் மாதமளவில் இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் செய்மதி மயப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது சீனாவின் அனுசரணையுடன் இலங்கையின் செய்மதி வானில் செயற்பட ஆரம்பிக்கும். அதன் தரைத் தொடர்பு மையமாக சீனாவால் அமைக்கப்படும் "லோட்டஸ்' தொலைத் தொடர்புக் கோபுரம் விளங்கும் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. அதேவேளையில் ஜனாதிபதியின் சீனப் பயணம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு சீனாவுக்கும் இலங்கைக்குமிடையே ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தங்கள் எந்தவொரு நாட்டுக்கும் பாதகமாக அமையாது எனவும் இலங்கைக்கு இந்தியாவும் சீனாவும் சம அளவிலான நட்பு நாடுகள் எனவும் தெரிவித்துள்ளது. அதேவேளையில் பாதுகாப்பு தரப்பிலிருந்தும் எந்தவொரு நாட்டுக்கு...

சரியான வழியல்ல .....,

படம்
'மாணவர்கள் போராட்டம் இதுவரை சரியான வழியில் தான் பொய் கொண்டிருக்கிறது.ஆனால் அதை திசை திருப்பி வன்முறையால் தடம் மாறி சென்று விடும் அபாயம் இப்போது வருகிறது.அப்படி சென்றால் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாணவர் போராட்ட மரியாதை மரியாதையை இழந்து விடும். காங்கிரசுக்காரனை எதிர்த்து போராடலாம்.ஆனால் அதை வன்முறையின் மூலம் திசைமாறிட செய்திடக்கூடாது. பேனர்களை கிழிப்பது மாணவர்களிடம் காங்கிரசின் மேல் இருக்கும் வெறுப்பை உணர்த்துகிறது.அதை வெளிக்காட்டும் முறையில் சில கட்சியினரால் குறிப்பாக நாம்தமிழர் கட்சியினரால் வன்முறை பாதையை மா ணவர்களுக்கு காட்டி வருவது பயத்தை தருகிறது. காரணம் இருபக்கமும் கூர்மையான ஆயுதம் வன்முறை. அதானால் மாணவர்கள் கைது .அதனால் அவர்கள் போராட்டத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு.காவல்துறை -அரசு நடவடிக்கைகள் என்று பல வழிகளில் போராட்டம் சென்று அதன் நோக்கமே சின்னாபின்னமாகிவிடும். ஈழப்பிரச்னையை மட்டுமே வைத்து தங்கள் அரசியலை செய்து வருவோர் மாணவர்களை தங்கள் கையில் எடுக்க இப்படி இளம்வயது வேகத்தை வன்முறை -பரபரப்பு என்று கொண்டு சென்று விடுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது போராட்ட...