இடுகைகள்

மின்சாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீட்டுக்கு, வீடு

படம்
  மின் தயாரிப்பு,,,, * ஒவ்வொரு வீட்டிலும் சூரியசக்தி மின்சாரம் * பயன்படுத்தியதுபோக விற்பனை செய்யலாம் * ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தப்பும் * அரசுக்கு பல ஆயிரம் கோடி செலவும் மிச்சம். அதானி தான் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க முடியுமா?  வீட்டுக்கு வீடு மக்களே சோலார் தகடுகளை பயன்படுத்தி தாங்களும் மின்சாரம் பயன்படுத்தி,  மீதமுள்ளதை அரசுக்கே திருப்பி தர  முடியாதா?  ஹெய்தி போன்ற குட்டி ஆப்ரிக்க நாடுகளால், அதன் மக்களால் சாதிக்க முடிந்தது, இந்தியா போன்ற  வல்லரசு நாடு ஆசையில் உள்ள ஒரு நாட்டு மக்களால் முடியாதா?   முடியும்...முடியும்...ஆனால்...  அரசுக்கு தான் மனது வேண்டும்;  மக்களால் முடியும்  என்று முனைப்பு காட்டி, வீட்டுக்கு வீடு சோலார் தகடுகளை பொருத்திக்கொள்ள, மானியமும் வாங்கித்தந்து, அதானியை விட அதிகமாக மின்சாரத்தை  தயாரித்து தர  முடியும்.  அப்படி தந்தால், அதானிக்காக ஒதுக்கி தர, விவசாயிகளிடம் இருந்து  பறிக்க வேண்டிய  ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் மிச்சம்  தானே; பல ஆண்டுகளாக அதானிக்கு தர வேண்டிய பல ஆய...

மின்தடை நீங்கும் ?

படம்
தூத்துக்குடியில்  புதிய அனல் மின் நிலையத்தில் பணிகள் முடியும் தறுவாயில் இருப்பதால், விரைவில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்க உள்ளது.மின்வெட்டு குறையும் நிலையம் வந்துள்ளது. ஏற்கனவே தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் துறைமுகத்துக்கு செல்லும் வழியில் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் ஏறத்தாழ 1050 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் புதிதாக அனல் மின் நிலையங்கள் அமைக்க சென்ற திமுக ஆட்சிகாலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மத்திய அரசு அனுமதியளித்ததன்படி, இப்போது உள்ள அனல் மின் நிலையத்துக்கு அருகிலேயே புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் பணி கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கியது. மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் (என்எல்சி), தமிழக மின்வாரியம் இணைந்து தலா 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள் மூலம் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான பங்கு முதலீட்டில் என்.எல்.சி. ந...

தொடரும் மின் வெட்டு காரணம் ?

படம்
தமிழகத்திற்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை.  ஆனால்  உற்பத்தியாவதோ 8 ஆயிரம்  மெகாவாட் மின்சாரம்தான். 4 ஆயிரம் மெகாவாட்  மின்சாரத்தை சரிகட்ட தனியார், வெளிமாநிலங்களில்  இருந்து மின்சாரம் பெறப்பட்டு  வருகிறது.  தமிழகத்தில் மொத்தம் 669 துணை மின்நிலையங்கள் உள் ளன. இதில் 400  கே.வி துணை மின்நிலையம் 14ம், 230 கே.வி துணை மின்நிலையம் 75ம், 110  கே.வி  துணை மின்நிலையம் 580ம் உள்ளன.  காற்றாலை, அனல்மின்நிலையம்,  நீர்மின்நிலையம், அணுமின்நிலையம் மூலம் தமிழகத்தில் மின்உற்பத்தி  செய்யப்பட்டு  வருகிறது. தமிழகத்தில் உள்ள வடசென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி, நெய்வேலி   அனல்மின்நிலையங்கள் 5710 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை.  கூடங்குளம், கல்பாக்கம்  அணுமின்நிலையம் மொத்தம் 1440 மெகாவாட் உற்பத்தி திறன்  கொண்டவை.  மேட்டூர், அமராவதி,  நீலகிரி, காட்டேறி, குண்டா, மோயாறு, பாபநாசம்,  வைகை, முல்லைப்பெரியார், கோதையாறு ஆகிய  நீர்மின்நிலையங்கள் சுமார் 1693  மெகாவாட் உற்பத்தி த...

"மின் உற்பத்தி தடங்கல்" உண்மையில் யார் காரணம்?

படம்
தமிழகமெங்கும் மின்தடை தலையை விரித்துப்போட்டு ஆடுகிறது. ஊர் முழுக்க 12 மணி நேரம் இந்த ஆட்டம் நடந்தாலும் சென்னையில் மட்டும் 2 மணி நேரம்.ஆனால் ஏற்காட்டில் மின்வெட்டு என்றால் என்னவென்று கேட்கும் நிலையில் ஏற்காடு தொகுதியே ஒளிர்கிறது.அதுவும் வரும் 4ம் தேதி வரைதான். தமிழக மின் வெட்டுக்கு திமுக-காங் கூட்டணிதான் காரணம் என்று ஜெயலலிதா கண்டு பிடித்துள்ளார். அதற்கே அவருக்கு மூன்றாண்டுகள் ஆகியுள்ளது.பொறுப்புடன் குற்றம் சாட்டத்தான் இந்த கால அவகாசம். ஸ்டாலின் மேயாராக இருந்ததுதான் இன்றைய டெங்கு கொசுக்கடிக்கு காரணம் என்ற சைதை துரை சாமியாரின் அதிரடி குற்றசாட்டுக்கு அம்மாவின் குற்றசாட்டு கொஞ்சம் குறைவான மதிப்பெண்தான். சரி. திமுக ஆட்சி அலங்கோலத்தை சீராக்கத்தானே மக்கள் உங்களை கோட்டையில் அமர்த்தியுள்ளார்கள்? மூன்றாண்டுகளாக திமுக ஆட்சியையும்,கலைஞரையும்  குற்றம் சாட்டுவதிலும்.அவர்கள் மீது நிலபகரிப்பு வழக்கு போட்டதையும்,அவதூறு வழக்கை போட்டதையும் தவிர வேறு சாதனையை இந்த ஜெயா அரசு செய்துள்ளதாகத் தெரியவில்லையே. திட்டுவதை தவிர தமிழக முன்னேற்றத் திட்டங்களை இதுவரை ஒன்...

மின் பற்றாக்குறை தொடருமா?

படம்
                                                                                                                                    -கே.விஜயன்   இந்திய நாட்டின் மக்கள்தொகை 120 கோடி ஆகும். சுதந்திரமடைந்து 67 ஆண்டு கள் ஆகின்றது. ஆனால் மக்களின் அடிப் படைத் தேவைகள் பெரும்பாலான மக்களை சென்றடையவில்ல...