இடுகைகள்

மறைவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டி.எம்.செளந்தரராஜன்,

படம்
டி.எம்.எஸ். என்று அனைவராலும் அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (மே 25) காலமானார். சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் கால் தவறி விழுந்ததில், டி.எம்.எஸ்-க்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பினார். சில நாள்களுக்கு முன்பு மீண்டும் டி.எம்.செளந்தரராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற அவர்,  19-ஆம் தேதி வீடு திரும்பினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சில நாள்களில் அவரது பேரனுக்கு திருமணம் நடைபெற்றது.  22-ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில் டி.எம்.எஸ். கலந்து கொண்டார். சென்னை மந்தைவெளியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த அவருக்கு, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் சில நாள்களாக டாக்டர்கள் அவரது வீட்டிற்கே வந்து சிகிச்சையளித்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் டி.எம்.எஸ்-க்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பிற்பகல் 3.50 மணிக்கு அவரது உயிர...

ஹியூகோ சாவேஸ்

படம்
வெனிசுலா அதிபர் சாவேஸ் இன்று காலை மரணமடைந்தார். புற்றுநோய் பாதிப்பிற்குள்ளான வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸூக்கு (வயது 58), கடந்த டிசம்பர் மாதம் கியூபாவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து நாடு திரும்பிய அவர் ஈர்‌‌னஸ்டோ கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. தொடர்‌ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.  சாவேஸ் மரணமடைந்த செய்தியை துணை அதிபர் நிக்கோலஸ் அந்நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியின் மூலம் தெரிவித்தார்.  கடந்த 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இதுவரை 4 முறை கியூபா சென்று புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்தார். இடதுசாரி புரட்சியாளரான சாவேஸ் கடந்த 1971-ம் ஆண்டு ராணுவ வீரராக வாழ்க்கையை துவக்கினார். ஐக்கிய சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவரான இவர் 1999ம் ஆண்டு வெனிசுலா நாட்டின் அதிபராக பொறுப்பேற்றார். அமெரிக்காவின் கடும் எதிரியான இவர் கடைசிவரை தென் அமெரிக்க நாடுகளை  அமமெ ரிக்கா சுரண்டுவதை  எதிர்த்து தனது நாட்டில் இடத...

"சோலை" -நினைவு.

படம்
சோலை. ========= தனது சுவையான ஆணித்தரமான அதேநேரம் கண்ணிய மான எழுத்தாளர். அவரின் கட்டுரைகளைப்படிப்பதற்காகவே மக்கள் குரல்,மக்கள் செய்தி,அலை ஓசை போன்ற தினசரிகளைமுன்பு படிப்பதுண்டு.இப்போது நக்கீரனில் தொடர்ந்து எழுதி வந்தார். எம்.ஜி.ஆர் நடத்திய "அண்ணா" நாளிதழில் எழுதியவர் சோலை.ஆனால் பொதுவுடமைவாதி அவர். எம்ஜிஆரால் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக வலம்புரி ஜானுக்கு முன் நியமிக்கப்பட்டவர்.ஜெ எழுதிய கட்டுரைகளுக்கு இவரின் கருத்துக்களும்-கரங்களும்தான் உதவியது. ஆனாலும் இவருக்கு ஜெயுடன் ஒத்துப்போகாததால் விலகிவிட்டார். அதன் பின் பல்வேறு இதழ்களில் சுதந்திரமாக எழுதியவர் சோலை. தனது 80 வயது வரை சாகும் வரை பேனாவை நிறுத்தவில்லை. அவரின் இழப்பு மிக கொடுமையானது.சின்ன குத்தூசியை இழந்த நமக்கு சோலை இழப்பும் பேரிழப்புதான். சோலை போன்று எழுத முயன்று தோற்றுப்போனவர்கள் பலரைத்தெரியும்.அக்கூட்டத்தில் நானும் உண்டு. சுவையுடன் அரசியல் கட்டுரைகளை சம்பந்தப்பட்டவர்கள் கூட வெறுப்பை காட்டமுடியாதவாறு கண்ணியமாக எழுதிட இனி யார்? வாழ்க்கை ____________ தமிழகத்தின் மூத்த பத் திரிகையாளரான சோலை அவர்கள் இன்...

இழப்புதான் ஆனால் ..............,,,

படம்
பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசைனின் உடல் இந்தியாவில் அடக்கம்.       $  பல்வேறு இனங்கள், மதங்கள், கலாச் சாரங்கள், சிந்தனையோட்டங்கள் இணைந்த மகத்தான இந்திய நாகரிகத் தின் மாண்புகளை மேலும் முன்னெடுத் துச் செல்வதில் அளப்பரிய பங்களிப்பு செய்தவர் ஓவியர் எம்.எப்.ஹூசேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகழாரம் சூட்டியுள்ளது .        இ ரங்கல் தீர்மானம் என்பதற்காக இப்படியா/? அதுவும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தா? .     @ சர்ச்சைக்குரிய பிரபல ஓவியர் எம்.எப் ஹூசைனின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவந்து இறுதிச்சடங்குகளைச் செய்ய அவரது குடும்பத்தினருக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 95 வயதான எம்.எப் ஹூசைன் உடல்நலக்குறைவு காரணமாக லண்டனில் றோயல் பிராம்ப்டன் மருத்துவமனையில் நேற்று காலமானார். இந்து கடவுள்களின் உருவங்களை நிர்வாணமாக வரைந்ததையடுத்து வலதுசாரி அமைப்புகளால் ஹூசைனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் 2006ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறினார். 2010 ஜனவரியில் அவருக்கு கத்தார் குடியுரிமை வழங்...