இடுகைகள்

அமெரிக்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எய்ட்ஸ் வியாபாரம்!

படம்
'ஃபயர் இன் த பிளட்' டைலன் மோகன் கிரேயின் ஆவணப்படம், ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் மருந்தை லாப நோக்கத்துக்காக மட்டுமே விற்பனை செய்த மேற்கத்திய மருந்து நிறுவனங்களின் தீய நோக்கத்தைத் துகிலுரித்தது. இந்த ஆவணப்படத்தைப் பார்த்தவர்களால் மருந்து நிறுவனங்கள் மேல் ஆத்திரப்படாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மருந்து நிறுவனங்கள் மனித உயிரைப் பொருட்டாக நினைக்காமல், வெறும் லாப நோக்கத்தை அதுவும், அதீத லாபத்தை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டதை இப்படம் விவரிக்கிறது. இந்த ஆவணப்படம் தற்போது, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா உள்பட உலகின் முக்கிய நாடாளுமன்றங்களில் திரையிடப்படவுள்ளது. லாபமே பிரதானம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பாதித்தவர்கள் அதிகம். மேற்கத்திய மருந்து நிறுவனங்கள் எய்ட்ஸுக்கான மருந்துகளை விநியோகித்துக் கொண்டிருந்தன. ஆனால், அந்நிறுவனங்களின் கருதுகோள் “நீ ஏழையா, எச்ஐவி பாதிப்பு இருக்கிறதா, அப்படியானால் நீ சாவதைத் தவிர வேறு வழியில்லை” என்பதாக இருந்தது. மலிவான விலையில் எச்ஐவிக்கான மருந்தை விற்பனை செய்ய முடியும் என்றபோதும் மேற்கத்திய மருந்து நிறுவனங்கள் அதைச் செய்யவி...

எண்ணை வாங்காதே

படம்
இப்போது கிலாரி கிளிண்டன் இந்தியா வந்தாலும் வந்தார்.ஈரானிடம் கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்துங்கள்.அதற்கு முன்னர் படிப்படியாக குறையுங்கள் என்று கூறியுள்ளார். அவர் சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மன்மோகன்சிங் ஒத்துக்கொண்டார்.வெளியுறவு அந்தோனியோ இந்தியா பெட்ரோலிய எண்ணைக்கு வெளிநாடுகளையே நம்ப வேண்டிய நிலையில் உள்ளது.ஈரான் இந்தியாவுக்கு குறைந்த விலையில் எண்ணையை வழங்குகிறது.அதனால் அத்னிடம் வாங்க வேண்டியதுள்ளது.என்று கூறியுள்ளார்.பரவாயில்லையே அந்தோனி தில்லுடன் பேசுகிறாரே என்று ஆச்சரியப்பட்டு முடிவதற்குள்ளேயே தோணி கவிழ்ந்து ஆனாலும் அதனிடம் பெட்ரோல் வாங்குவதை முன்னைவிட குறைந்தே வருகிறது.அது மேலும் படிப்படியாகக் குறைக்கப்படும் என்று சன்னமாகபுலம்பியுள்ளார். இந்தியாவுக்கு பெட்ரோல் தேவைக்கு அதுவும் குறைவான விலைக்கு தரும் ஈரானிடம் வாங்குவதுதான் சிறந்த-புத்திசாலிகள் எடுக்கும் முடிவு. ஆனால் அமெரிக்கா சொல்வதற்காக ஈரானிடம் வாங்காமல் அதிக விலைக்கு வாங்குவது எவ்வளவு புத்திசாலித்தனம்? நமது தேவையை ஈரானிடம் வாங்ககூடாது என்று சொல்ல அமெரிக்கா யார்?அல்லது அது ஈரான் போல் அதே விலைக்கு அதிக அளவ...

அமைதியும் - [அமெரிக்க]போரும்

படம்
அமைதிக்கான நோபல் பரிசு,                                 இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, லைபீரியாவின் அதிபர் எல்லன் ஜான்ஸன் சர்லீப், அந்நாட்டின் அமைதிப் போராளி லேமா போவீ மற்றும் யேமன் நாட்டைச் சேர்ந்த பெண் உரிமைப் போராளி டவாக்குள் கர்மான் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.              இந்த மூன்று பெண்களுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து நோபல் பரிசுக்குழுவினர் தெரிவித்துள்ளதாவது: ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கும் சமூக வளர்ச்சியில் பங்களிப்பு செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்என்றனர். எல்லன் ஜான்ஸன் சர்லீப் மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் முதல் பெண் அதிபராக 2005-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லன் ஜான்ஸன் சர்லீப், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவராவார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் சிறந்த சீர்திருத்தவாதி. அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், அந்நாட்ட...

நல்ல பாடம்,,,,,,,,,.

படம்
அமெரிக்காவுக்கு, தற்போது அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. நாடுகளின் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டை நிர்ணயிக்கும், பிரபல ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம், அமெரிக்காவின் உயர்தர கடன் மதிப்பீட்டை, ஒரு படி குறைத்து விட்டது. இதுகுறித்து, அந்நிறுவனம் மீது, ஒபாமா நிர்வாகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதேநேரம், "தனது கடனுக்கு அடிமையாகும் நோயைத் தீர்க்க, அமெரிக்கா பொது அறிவைப் பயன்படுத்தினால் நல்லது. புதிய, உறுதியான, பாதுகாப்பான மற்றொரு உலகளாவிய கரன்சியை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது' என, சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.   அமெரிக்காவின் கடன் நெருக்கடிக்கான தீர்வு, கடந்த 1ம் தேதி எட்டப்பட்டு, கடைசி கட்டத்தில் சட்டமாக்கப்பட்டது. ஆனால், கடன் மதிப்பீட்டு நிறுவனமான "ஸ்டாண்டர்டு அண்டு புவர்' (எஸ் அண்டு பி), "அமெரிக்கா தன் நிதிப் பற்றாக்குறையை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு, 4 டிரில்லியன் டாலர் அளவிற்காவது குறைத்தால் தான், அதன் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டுக்கு ஆபத்திருக்காது. மாறாக நடந்தால், குறியீடு குறைக்கப்படலாம்' என, கடந்த ஒரு மாத காலமாக எச்சரிக்கை விடுத்து வந்தது. ...

குடும்ப ஆட்சி

படம்
குடுமப ஆட்சி என்றவுடன் மத்திய ,மாநில அரசுகளின் நிலைதானே,வழக்கமான ஒன்றுதானே என நினத்து ஒரங்கட்டிவிடாமல் படியுங்கள்.இது அண்டை நாடான இலங்கை பற்றியது.சொன்னவர்கள் ஈழத்தமிழர்கள் அல்ல. பக்ஸேயின் பாதுகாவலர்களில் முக்கியமான அமெரிக்க அரசு. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் குடும்ப ஆதிக்கத்துக்குள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்தோடு, அங்கு மனித உரிமை மீறல்கள் முடிவின்றி தொடர்வதாகவும் அதற்காணவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் அமெரிக்க அரசு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்ப ஆதிக்கம் அரசாங்கத்தின்நிர்வாத்துறை மற்றும் எல்லாஅரசுதுறைகளிலும் அரசதுறைகளில் குடும்ப ஆதிக்கம் அனைத்தும் ஜனாதிபதியின் குடும்ப ஆதிக்கத்தின் பிடியிலேயே இருப்பதாக மனித உரி...

இது அமெரிக்க ஆர்ப்பாட்டம்

படம்
அமெரிக்காவின் மிக முக்கியமான மாநில அரசாங்கமான டெக்ஸாஸ் மாநிலம் தனியாகப் பிரிந்து செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்காவின் ஹுஸ்டன் குரோனிக்கல் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.டெக்ஸாஸ் மாநிலத்தின் முக்கியமான அரசியல் அமைப்பொன்று அமெரிக்காவின் அரசியல் கொள்கைகளை விமர்சித்தபடி அமெரிக்காவை விட்டு டெக்ஸாஸ் மாநிலம் தனிநாடாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்று கோரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை கடந்த ஐந்தாம் தேதி அவுஸ்டினிலுள்ள கெப்பிட்டல் கட்டிடத்தின் முன் நடத்தியுள்ளனர்.          “அமெரிக்க  அரசாங்கம் என்பது வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தமது நாட்டின் பாரம்பரிய குடிமக்களைப் பாதுகாக்கத் திராணியற்ற ஒன்றுக்கும் உதவாத ஒரு அரசாங்கம்” என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அது மட்டுமல்லாமல் டெக்ஸாஸ் மாநில மக்களின் வரிப்பணத்தை மட்டும் அறவிட்டுக் கொண்டு அம்மாநில மக்களின் பாதுகாப்பைப் பற்றி கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் அம்மாநிலத்திற்குள் வெளிநாட்டு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனி நபர்களை ஊடுருவ வழி ...