இடுகைகள்

உலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மார்க்ஸ் எனும் அரக்கன்

படம்
பி.பி.சி. ‘ரேடியோ 4′ அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்தனர். கையில் நயாபைசா இல்லாமல் புலம் பெயர்ந்து வந்து இலண்டன் மாநகரில் தஞ்சம் புகுந்த ஒரு அகதியை வசைபாடுவதற்கும், அவர் மீது பழிதூற்றுவதற்கும் இரண்டு முழுப் பக்கங்களைச் செலவிட்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் வலதுசாரிப் பத்திரிகையின் சென்ற வார இதழ். ’அகதி’ என்ற சொல்லைக் கேட்டாலே வலதுசாரிகளுக்கு உடம்பெல்லாம் எரியும் என்பதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான். எனினும் தாக்குதலுக்கு ஆளான இந்த அகதி இருக்கிறாரே, அவர் தற்போது உயிருடன் இல்லாதவர். அதாவது, 1883-இலேயே இறந்து விட்டவர். ஆம்! ‘மார்க்ஸ் எனும் அரக்கன்’ என்பதே மேற்படி கட்டுரையின் தலைப்பு. பி.பி.சி. ‘ரேடியோ 4′ அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்ததுதான் இந்த வெறிகொண்ட எதிர்வினைக்குக் காரணம். “ஸ்டாலின், மாவோ, போல்பாட், முகாபே போன்ற கொலைகாரச் சீடர்களை உருவாக்கிய ஒரு மனிதனை உலகின் தலைசிறந்த தத்துவஞானியாக எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?” இது அந்...

உண்மையான "புரட்சி"த் தலைவர்.!

படம்
முதல் உலகப் போர் 1914-ம் ஆண்டில் தொடங்கி, நான்கு ஆண்டுக் காலம் நடந்தது. ரஷ்யாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையில் அப்போது நடந்த போரில், ரஷ்யா தோல்வி அடைந்துகொண்டிருந்தது.   1914, 15, 16 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் கொல்லப்பட்ட ரஷ்யப் படை வீரர்கள் 17 லட்சம். போர்க் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டோர் 20 லட்சம்.  காணாமல்போனவர்கள் 10 லட்சம்! கொந்தளித்த ரஷ்யா இவர்களைப் பறிகொடுத்த லட்சக்கணக்கான தாய்களும், மனைவிகளும் வேதனையில் துடித்தார்கள்; வாழ வழியின்றித் தவித்தார்கள்.  மறுபுறம் தொழிலாளர்கள் வேலை நேர அதிகரிப்பு, ஊதியப் பற்றாக்குறை, போர்க்காலக் கெடுபிடிகள், அடக்குமுறைகள். விலைவாசியோ உச்சத்தில் இருந்தது. இந்தச் சூழலுக்கு இடையில், “போரை நிறுத்த வேண்டும், மன்னராட்சி ஒழிய வேண்டும்” என்று குரல்கொடுத்துவந்தார்கள் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியினர். ரஷ்யா கொந்தளிக்கத் தொடங்கியது.  மன்னராட்சியைத் தூக்கியெறிந்து, உலகின் முதல் சோஷலிஸ்ட் ஆட்சி அமைவதற்கு உண்மையில் கால்கோள் இடப்பட்ட பின்னாளில் மகளிர் நாளாக அறிவிக்கப்பட்ட - 1917, மார்ச் 8. ஒரு ரொட்டித் து...

திடீர் இதயத்துடிப்பு முடக்கம்,

படம்
(Sudden cardiac arrest) முதலுதவிகள் மாரடைப்புக்கும் ‘சடன் கார்டியாக் அரெஸ்ட்’ எனப்படும் திடீர் இதயத்துடிப்பு முடக்கத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இதயத்துடிப்பு திடீரென முடங்குவதற்கு ‘சீரற்ற இதயத்துடிப்பு’ எனப்படும் அரித்மியா உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதில் ஒரு காரணம்தான் மாரடைப்பு. மாரடைப்பு வரும்போது அறிகுறிகள் தெரியும்; இதயத்துடிப்பு இருக்கும். மாரடைப்பு வந்தவர்கள் நெஞ்சுவலியைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு சுயநினைவோடுதான் இருப்பார்கள். எனவே, உடனடியாக அவர்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரைகள் கொடுத்துக் காப்பாற்றிவிடலாம். திடீர் இதயத்துடிப்பு முடக்கம், மாரடைப்பை விடவும் தீவிரமான சிக்கல். இது, ஏற்பட்டால் உடனடியாக சுயநினைவை இழந்து, மரணம் நேரிடலாம். எப்படிக் கண்டுபிடிப்பது? திடீரென ஒருவர் நம் கண் முன் நிலைகுலைந்து விழுகிறார் எனில், உடனடியாகச் சில விநாடிகளுக்குள் அவரின் தோள்பட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும். எந்த உணர்ச்சியும் இன்றிக் காணப்பட்டால், அது திடீர் இதயத்துடிப்பு முடக்கமாக இருக்கலாம். அவரது கையில் நாடி பார்ப்பதோ, இதயத்த...

சீனா, குண்டு வெடிப்பு படங்கள்.

படம்

.பெருந்துளை இந்த கருந்துளை..

படம்
1200 கோடி சூரியன்களின் நிறையைக் கொண்டஆகப் பெரிய ராட்சசக் கருந்துளை ஒன்றைக் கண்டு பிடித்தஆச்சரியத்தில் விஞ்ஞானிகள் மூக்கில் விரல் வைத்து உள்ளனர். .  சமீபத்தில் பீகிங் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ஷு பிங் வு (Xue-Bing Wu) இனம் கண்ட கருந்துளை . இதுவரை நாம் பார்த்ததில் மிக மிக அதிக நிறை கொண்ட கருந்துளை. நம் சூரியனைப் போல 1200 சூரியன்களை உள்ளே வைக்கலாம்.அந்த அளவு பெருந்துளை.இந்த கருந்துளை. க[பெ]ருந்துளையைப் பற்றி பீகிங் பல்கலைக்கழகம் உருவாக்கிய வரை படம். நாம் வாழும் பூமியில் புவிஈர்ப்பு விசை உள்ளது.  அதனைச் சார்ந்து நாம் பொருள்களை எடைபோடுகிறோம்.  எடை வேறு. நிறை வேறு. நிறை (Mass) என்றால் ஒரு பொருளில் அடங்கியுள்ள பொருள்களின் திணிவு. விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் நிறை என்ற அடிப்படையில்தான் மதிப்பிடப்படுகின்றன. பூமியிலிருந்து 1260 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ளது இந்தக் கருந்துளை. அதாவது அங்கிருந்து புறப்பட்ட ஒளி நம்மை வந்து அடையச் சுமார் 1260 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்று அர்த்தம். ...