இடுகைகள்

தடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பான்மசாலா குவிக்கும் லாபம்.

படம்
  இந்த குட்கா,பாண் மசாலா தடையினால் ஒரே  நன்மை ! இதன் வியாபார முக வர்களுக்கு லாபம் முன்பை விட பன்மடங்கு கூடியதுதான். மற்றபடி எல்லா கடைகளிலும் விற்பனையாகிக் கொண்டுதான் உள்ளது. அதிகாரிகளுக்கு தெரிந்தும்-தெரியாமலும். ஜெயா அரசு முன்பு விதித்த குட்கா தடை போல்தான் இப்போதும். ஒரு வேளை அரசே மது பானம் போல் குட்கா விற்பனையையும் கையில் எடுக்க போகிறதோ?என்னவோ? அரசு தடைகள் எல்லாமே தடை விதித்த அடுத்த மாதத்திலேயே காற்றில் பறக்கும் என்பதை குட்காவும் நிரூபித்துள்ளது.  கடந்த மே மாதம் தமிழகத்தில் குட்கா, உண்ணக்கூடிய புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, சென்னை முழுவதும் அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். பெட்டிக்கடை முதல் மொத்த வியாபாரிகள் வரை சோதனை நடத்தி புகையிலை பொருட்கள், குட்கா விற்றவர்களுக்கு அபராதம் விதித்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆரம்பத்தில் அதிகாரிகள் கெடுபிடியாக இருந்ததால் புகையிலை பொருட்கள் விற்பனை கணிசமாக குறைந்தது. ஆனால், நாளாக நாளாக கள்ள சந்தையில் விற்பனைக்கு வந்தன. ரூ.2க்கு விற்கப்பட்ட குட்கா ரூ.20...

இந்த மாத்திரைகளை வாங்காதீர்கள் ...!

படம்
டெக்ஸ்ட்ரோ ப்ரோ பாக்ஸிபீன் (Dextropropoxy phene) என்ற பெயர் கொண்ட  வலி நிவாரணி மாத் திரை 1957ம் ஆண்டு அறி முகம் செய்யப்பட்டது. இந்த மாத்திரையை உட் கொள்வதன் மூலம் ஹைபர் டென்சன், இதயவலி உள் ளிட்ட பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டன.  ஏராளமானோர் மரணத் தைத் தழுவியது கண்டறி யப்பட்டது.  இதனால் இந்த வலி நிவாரண மாத்திரை யை பல நாடுகள் தடை செய்துவிட்டன. பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத் துவதாக கூறி உலகின் பல் வேறு நாடுகள் ஏற்கனவே தடை செய்துள்ள நிலை யில், இந்தியாவில் தற்போது அதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, இந்த மாத் திரையை விற்கவோ, உற் பத்தி செய்யவோ, விநி யோகிக்கவோ கூடாது. இந்த தடை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக வும் அரசு உத்தரவில் தெரி விக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட வலி நிவாரணிகள் : இதேபோல் சளி, இரு மல் போன்றவற்றுக்கு கொடுக்கப்பட்ட பீனைல் புரப்பனோலெமைன் (பி.பி.ஏ.,), பல்வேறு வலிகளைப் போக் குவதற்காக கொடுக்கப் பட்டு வந்த “பெயின் கில் லர்’ மருந்துகளான னைஸ், நிமுலிட் மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. கடந்த 2...

தடைக்கு தடை ...,

படம்
  விஸ்வரூபம் படம்தான் இன்றைய செய்திகளின் விஸ்வரூபம். இசுலாமிய  இயக்கங்களின் மனுவை மட்டும் வைத்துக்கொண்டு அரசு தடை விதித்தது சரியான செயலாகத் தெரியவில்லை. முன்னதாக படத்தை பார்த்து விட்டு மனுவில் கூறியபடி மதத்தை இழிவுபடுத்தியிருந்தால் தடை விதித்திருக்க வெண்டும்.அதுதான் நடைமுறையும் கூட.அவசரமாக தடை விதித்ததன் பின்னணி அரசியலாகத்தான் தெரிகிறது. தற்போதுள்ள இசுலாமிய கட்சிகள் கூட்டணி தொடர வேண்டும்.தன்னை இசுலாமியர்களின் காப்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பதுதான் பின்னணியின் முன்னணிக்காரணம். அரசு உள்துறை செயலருக்கு சட்டம் ஒழுங்கு பற்றிய அக்கறை இருக்க வெண்டும்.இருப்பது சரிதான்.அதற்காக இந்த படத்தை தடை செய்ய வெண்டும் என்று ஒரு சிலர் வந்து மனு கொடுத்தவுடன் தடை என்று மதியமே அரசாணை பிறப்பிப்பது சரியல்ல. படத்தை அவர் பார்த்திருக்க வெண்டும். அல்லது எதிர் மனுதாரை விசாரித்திருக்க வே ண்டும். திரைப்படத்தணிக்கை குழு படத்தை பார்த்து தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கியுள்ளது.அப்படி என்றால் ஆட்சேபகரமான விடயங்கள் இருக்காது --இல்லையா என்று  விசாரித்திருக்கலாம்.எந்த நடை...

பொற்காலம் வருகிறது...?

படம்
இந்தியாவில் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து, டிசம்பர் முதல் வாரத்தில் தங்கத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாதிடீரென மும்பை வியாபாரிகள் மத்தியில் ஒருதகவல் பரவியது.  இதனையடுத்து, தங்கத்தின் விலையில்  சரிவு ஏற்பட்டது.  ஆக இந்தியாவில் தங்கம் மட்டுமல்ல.அனைத்து பொருட்கள் விலையும் கன்னா -பின்னா என்று ஏற இந்த இணைய மோசடி விற்பனையாளர்கள்தான் [ஆன் லைன் ட்ரேடிங்] காரணம் என்பது மக்களுக்கு புரிகிறதா? சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்கள், உடனுக்குடன் இந்திய மார்க்கெட்டில் எதிரொலிக்கிறது.  2003ல் கிராம் 523 ரூபாய்க்கு விற்ற தங்கம், 2007 - 1,000, 2008 - 1,250, 2009 - 1,550 என தொடர்ந்து, 2010ல் ஒவ்வொரு நாளும் ஓர் விலை ஏற்றத்தை சந்தித்து, நேற்று முன்தினம் அதிகபட்சமாக, கிராம் 1,915 ரூபாய்க்கு விற்றது. இந்நிலையில் நேற்று, தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டு, கிராமுக்கு எட்டு ரூபாயும், சவரனுக்கு 64 ரூபாயும் குறைந்து, கிராம் 1,907 ரூபாய்க்கும், சவரன் 15 ஆயிரத்து 256 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.  ...