முதல்வர்;பரிதாபங்கள்.!

உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு.

இஸ்ரேல் நாட்டின் நிறுவனம் மூலம் பாஜக இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மாற்றி வருவதாக இங்கிலாந்து நாட்டின் பத்திரிகையான தி கார்டியன் தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சி புகார்.

மங்களூரில் கொடூரம்: கல்லூரி மாணவிக்கு பாலியல்வன்கொடுமை;2விரிவுரையாளர்கள்  உள்பட மூவர் கைது.
அமெரிக்காவின் கல்வித்துறையில் 1,400 ஊழியர்கள் பணி நீக்கம்: டிரம்ப் அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி.
கிராம ஊராட்சிகளில் அனுமதியில்லா கட்டடங்களுக்கு சீல்: தமிழக அரசு உத்தரவு.
கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி.
தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த 6 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு.
பீகார் யாதவர் சமுதாய மக்கள் அதிகம் வாழும் கிராமங்களில் இனி பிராமணர்கள் பூஜை, புனஸ்காரம் செய்வதற்கு தடை செய்திருக்கிறது கிராம பஞ்சாயத்துக்கள் என்று தி இந்து தமிழ் திசையில் வெளியாகியிருக்கிறது.

உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் கதாகாலட்சேபத்திற்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது.

 முன்பெல்லாம் பிராமணர்கள் மட்டுமே கோலோச்சி இந்த உபன்யாசங்களில் தற்போது மற்ற சாதியைச் சேர்ந்த சிறந்த பொழுதுபோக்குகளுடன் கதை சொல்லிகளும் வரவேற்பு பெற்று வருகிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் யாதவர் சமுதாயத்தை சேர்ந்த சிலரும் கதா காலட்சேபம் செய்கின்றனர். அதில் முகுந்த் மணியாதவ் என்பவர் கிராமங்களில் நல்ல வரவேற்பு பெற்று 15 ஆண்டுகளாக கதாகாலட்சேபம் செய்கிறார்.

 உத்திரபிரதேச எட்டவா மாவட்டத்தின் தந்தர்பூர் கிராமத்தில் மக்கள் அழைப்பில் முகுந்தமணி யாதவ் கதாகாலட்சேபம் செய்த போது, மிகப்பெரிய கலவரம் ஏற்படுத்தி இவரையும், இவரது உதவியாளரையும் தூக்கிச் சென்று மொட்டை அடித்து, சிறுநீர் அபிசேகம் செய்துவிட்டதோடு இவரிடம் இருந்து ரூ25,000 த்தையும், தங்கச் செயினையும் பறித்துவிட்டு, ’’அவரவர் குலத் தொழிலை அவரவர் செய்ய வேண்டும். நீங்க யாதவ் மாடு மேய்க்கவும், பால் விற்கவும் செய்ய வேண்டுமே தவிர எங்களுக்கு போட்டியாக வரக் கூடாது’’ என்று விரட்டி அடித்திருக்கிறார்கள்..

என்ன கொடுமை இது..

முகுந்த மணி காவல்துறையில் புகார் கொடுக்க, உடனே இதில் குதித்த அகில இந்திய பிராமண சபையினர் முகுந்த் மணி யாதவ் மீது அதிரடியாக பாலியல் புகாரையும், தன்னை பிராமணர் என பொய் சொல்லி வாய்ப்பு வாங்கினார் என்றும் புகார் கொடுத்தது. 

இது இரண்டுமே அப்பட்டமான பொய் என்பதால் யாதவர் சமூகத்தினர் மாநிலம் முழுவதும் களத்தில் இறங்கி போராட, அகிலேஷ் யாதவும் குரல்  கொடுக்க கொதித்து எழுந்தது பிராமண சமூகம். அகிலேஷ் யாதவ் சாதிச் சண்டையை மூட்டுகிறார்.

 முதலில் அவர் வீட்டில் பிறப்பு தொடங்கி இறப்பு வரை பிராமணர்களை தவிர்க்கும் தைரியம் அவருக்கு இருக்கிறதா?’’ என்ற கேள்வியையும் பிராமணர் சமூகத்தால் கேட்கப்பட்டதை தொடர்ந்து, பீகாரில் யாதவ் சமூகத்தினர் அதிகம் வாழும் கிராமங்கள் ஊர் கூடித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்கள்.

 நாங்கள் எக்காரணம் கொண்டும் பிராமணர்களை கொண்டு எந்தச் சடங்கும் செய்ய மாட்டோம். பிராமணர்களுக்கு எங்கள் கிராமத்தில் தடை விதிக்கிறோம்… என பகிரங்கமாக அறிவித்திருக்கிறது கிராம பஞ்சாயத்துக்கள்..

மோதிஹாரி மாவட்டத்தின் அடாபூரில் உள்ள திகுலியா என்ற கிராமத்தின் பல இடங்களில் இந்த கிராமத்தில் ’பிராமணர்கள் பூஜை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிடிபட்டால், அவர்களை அழைத்த நீங்களும் தண்டிக்கபடுவீர்கள்’ என எழுதப்பட்டிருக்கிறது.

பிராமணர்கள் அர்ச்சகர் தொழில் தவிர்த்து டாக்டர், இன்ஞினியர், ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், தொழில் அதிபர்கள், ஹோட்டல் முதலாளிகள், ஆட்சியாளர்கள் என்று பல்வேறு தொழில்களைப் பார்க்கும் நிலையில் எந்த சாதியினரும் அவர்களை, ’’ஏன் உன் தொழிலைவிட்டு இந்த தொழிலுக்கு வந்தாய்?” எனக் கேட்பதில்லை. 

ஆனால், அவர்களில் பலரும் இன்னும் இப்படி மற்றவர்களை பார்த்து, ’’உங்க குலத் தொழிலை மட்டும் பார்க்க வேண்டியது தானே’’ என்ற கேள்வியை தொடர்ந்து கேட்கும் நிலையில், தற்போது பீகாரில் தன்னிச்சையாக ’இனி பிராமணர்களின்றி பிறப்பு, திருமணம், இறப்பு உள்ளிட்ட அனைத்து நிகழ்வையும் நாமே நடத்துவோம்’ என மக்களே முடிவு எடுத்திருப்பது ஒருவகை புரட்சிதான்..

(Somasundaram(முகநூலில்)

முதல்வர்;பரிதாபங்கள்.!

ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருக்கிறது. தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரசும் இணைந்த அந்த அரசுக்கு, மக்கள் ஜனநாயக கட்சி போன்றவையும் பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவளிக்கின்றன

. காஷ்மீர் முதல்வராக ஒமர் அப்துல்லா இருக்கிறார். முதல்வரை போலீசார் கைது செய்து, வீட்டுச் சிறையில் அடைத்துவிட்டனர்.

ஒமர் அப்துல்லா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினாரா? அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி ஏதாவது சிக்கியதா? சிக்க வைக்கப்பட்டதா? வருமானவரித்துறை ஏய்ப்பா? எதுவுமில்லை. 

அப்புறம் ஏன், போலீசார் ஒரு முதல்வரை கைது செய்ய வேண்டும்? கைது செய்யப்படும் அளவுக்கு முதல்வர் என்ன தவறு செய்தார்? முதல்வரை கைது செய்யும் அளவுக்கு அதிகாரம் கொண்ட அந்த போலீசார் யார்?

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா செய்த தவறு, ஜூலை 13 அன்று காஷ்மீர் தியாகிகள் தினத்தையொட்டி, தியாகிகள் கல்லறையில் அஞ்சலி செலுத்த முயன்றதுதான். 

அவர் முதல்வராக இருந்தாலும், ஜம்மு-காஷ்மீர் போலீஸ் என்பது மத்திய பா.ஜ.க. அரசின் உள்துறை நிர்வாகத்தில் உள்ளது. 

காரணம், ஜம்மு-காஷ்மீர் இப்போது மாநிலமாக இல்லை. அது யூனியன் பிரதேசமாக தகுதியிறக்கம் செய்யப்பட்டுவிட்டது. அதாவது, தமிழ்நாடு போல இருந்த காஷ்மீர் இப்போது புதுச்சேரி (பாண்டிச்சேரி) போல ஆகிவிட்டது. 

அதனால், மத்திய அரசின் கையில் அதிகாரம் குவிந்திருக்கிறது. அந்த அதிகாரத் திமிர்தான் முதல்வரை கைது செய்ய வைத்திருக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிப்பட்ட வரலாற்றுப் பின்னணி உண்டு. ஆனால், மத்திய பா.ஜ.க. அரசின் பார்வையில், இதிகாச-புராணங்கள் மட்டுமே இந்தியாவின் வரலாறு. 

அது எல்லா மாநிலத்திலும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. இராமாயணம் என்பது இதிகாசம்தான். அதை வடமொழியில் வால்மீகி எழுதியதற்கும், தமிழில் கம்பர் எழுதியதற்கும் வேறுபாடுகள் உண்டு. தமிழ்ப் பண்பாட்டுப் பார்வையில் கம்பர் தனது இராமாயணத்தைப் படைத்திருப்பார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை, அது தனி சமஸ்தானமாக இருந்த பகுதி. இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது, அவர்களுக்கு வரி செலுத்திவிட்டு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்து மன்னர் ஹரிசிங் ஆட்சி செய்தார்.

 சமஸ்தானத்தில் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள். அவர்களின் பண்பாட்டு முறை- வழிபாட்டு நம்பிக்கைகள் மீது சமஸ்தான அதிகாரம் நடத்திய தாக்குதல்களால் மக்களின் போராட்டம் வெடித்தது.

 அப்துல் காதிர் என்பவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்டபோது, காஷ்மீர் மக்கள் வெகுண்டெழுந்தனர். 

அவர்கள் மீது சமஸ்தான அதிகார வர்க்கத்தினர்-பிரிட்டிஷ் இந்திய போலீசார் துணையுடன் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி தாக்குதலில் 15க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 

பலர் காயமடைந்தனர். 1931ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் நாள் இது நடந்ததால் அந்த நாளை காஷ்மீர் தியாகிகள் தினமாகக் கடைப்பிடித்து, அவர்களின் கல்லறையில் வீரவணக்கம் செலுத்துவது காஷ்மீர் அரசியல் தலைவர்களின் வழக்கம்.

மாநில அந்தஸ்தையும், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தையும் ரத்து செய்த மத்திய பா.ஜ.க. அரசு, காஷ்மீர் தியாகிகள் நாளுக்கான விடுமுறையையும் ரத்து செய்துவிட்டது.

 கடந்த ஜூலை 13 ஞாயிறன்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் மற்ற அரசியல் தலைவர்களும் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த முயன்றபோது கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். போலீசாரின் தடுப்பரணை மீறி, சுவரேறிக் குதித்துதான் முதல்வர் உள்ளிட்டவர்கள் வீரவணக்கம் செலுத்த முடிந்தது.

மராட்டிய மாநிலத்தில் பிரிட்டிஷார் ஆட்சியின்போது பேஷ்வா சமஸ்தானத்துடன் நடந்த போரில் பிரிட்டிஷ் படையில் தலித் மக்கள் பங்கேற்று, பேஷ்வா ராஜாங்கத்தின் சாதி ஒடுக்குமுறைகளுக்கெதிராகப் போராடினார்கள். 

அந்தப் போரில் வெற்றி பெற்று, அதன் நினைவாக போர் நடைபெற்ற பீமா கோரேகான் பகுதியில் வெற்றித்தூணையும் நிறுவினர். கடந்த 2018ஆம் ஆண்டு, பீமா கேரோகான் நினைவு தினத்தன்று வன்முறை வெடித்தது.

 வீரவணக்கம் செலுத்த முயன்றவர்களை அர்பன் நக்சல்களாக சித்தரித்து, கொடுமையான சட்டத்தில் கைது செய்தது பா.ஜ.க. அரசு. பழங்குடி இன செயல்பாட்டாளரான ஸ்டேன் சாமி. சிறையில் உடல்நலன் பாதிக்கப்பட்டநிலையில், ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஜாமீன் மனு விசாரணை முடிவடைவதற்கு முன்பே ஸ்டேன் சாமி இறந்து போனார்.

முன்பு மராட்டியத்திலும், தற்போது காஷ்மீரிலும் அந்தந்த மண்ணுக்குரிய பண்பாட்டை தேசவிரோதமாக சித்தரிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, 

தமிழ்நாட்டில் தாய்மொழி காத்திட தங்கள் உயிரையே தீக்குளிப்புக்கும் துப்பாக்கி சூட்டுக்கும் பலி கொடுத்து, இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்திய மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செய்வதையும் தேசவிரோதம் என்று நாளை தடை செய்யக்கூடும்.

காஷ்மீரில் பாலம் கட்டி ரயில் விட்டுப் பெருமை கொள்கிறது மோடி அரசு. கிளிக்கு தங்கக்கூண்டில் பால்சோறு வைத்தாலும் அதற்கு அதன் சிறகுதான் முக்கியம். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து என்பதுதான் சிறகு. 

அதை நறுக்கிவிட்டு, ரயில் விடுவது-கதை விடுவது எல்லாம் தங்கக்கூண்டு போலத்தான்.

           

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய