ஏன் இந்(திய)த வெறி?

 இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் டாக்காவில் உள்ள இந்திய உயர் தூதரகத்தை நோக்கி பேரணியாகச் சென்று தாக்குதல் நடத்துவது குறித்தான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது.

ஏன் இந்த வெறி.இந்தியர்கள் சிந்திய ரத்தத்தால்தான் வங்கதேசம் என்ற நாடே உருவானது

பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் (Bangladesh) விடுதலை பெற இந்தியா மிக முக்கியமான ராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியது.டிசம்பர் 6, 1971 அன்று வங்கதேசத்தை ஒரு தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 

1972-ல் 25 ஆண்டுகால நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

1975-ல் ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலைக்குப் பிறகு வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக எல்லைப் பிரச்சனைகள், நதிநீர் பங்கீடு மற்றும் பயங்கரவாதம் போன்ற விவகாரங்களால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.

1996-ல் ஷேக் ஹசீனா பிரதமரான பிறகு, 30 ஆண்டுகால கங்கை நீர் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உறவு மீண்டும் சீரடையத் தொடங்கியது. 

2024 ஆகஸ்டில் வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இரு நாட்டு உறவுகளில் புதிய சவால்கள் எழுந்துள்ளன: அதாவது, மாணவர் போராட்டங்களால் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவுக்குத் தப்பி வந்ததைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இடைக்கால அரசு முன்வைத்துள்ளது.2025-ல் எல்லைப் பகுதிகளில் வேலி அமைப்பது மற்றும் பதுங்கு குழிகள் கட்டுவது தொடர்பாக இந்திய எல்லை பாதுகாப்புப் படை (BSF) மற்றும் வங்கதேச எல்லைக் காவல்படை (BGB) இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

2025 ஜனவரி முதல் நவம்பர் வரை வங்கதேச எல்லையில் அதிகபட்சமாக 1,104 ஊடுருவல் முயற்சிகள் கண்டறியப்பட்டுள்ளன.1996-ல் கையெழுத்தான கங்கை நீர் ஒப்பந்தம் 2026-ல் முடிவடைய உள்ளது. இதைப் புதுப்பிப்பதில் இரு நாடுகளுக்கும் இடையே தற்போது இழுபறி நிலவுகிறது.

வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் போன்ற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து இந்தியா தனது கவலையைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. 

ஏழு சகோதரி மாநிலங்களை விடுவிப்பதன் மூலம், இந்தியா வங்காளதேசத்திற்கு செலுத்த வேண்டிய 1971 கடனை நாங்கள் திருப்பிச் செலுத்துவோம்” என்ற அறிக்கை, சில வங்காளதேச அரசியல் குழுக்கள் தெரிவித்து வருகிறது. 

இது வரலாற்று விவரிப்புகள் மற்றும் இறையாண்மை மற்றும் உள் அரசியல் தொடர்பான சர்ச்சைகளைப் பயன்படுத்தி பிராந்திய உறுதியற்ற தன்மையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஏழு சகோதரிகள் (Seven sisters) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகியவற்றைக் குறிக்கிறது. 

இவை அவற்றின் இயற்கை அழகு, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் தனித்துவமான மரபுகளுக்காக அறியப்படுகின்றன. மேலும், சிக்கிம் “சகோதரர்” மாநிலமாக சேர்க்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 2025-ல், வங்கதேசத்தின் தேசிய குடிமக்கள் கட்சி (NCP) தலைவர் ஹஸ்னாத் அப்துல்லா, இந்தியா வங்கதேசத்தைச் சீர்குலைக்க முயன்றால், இந்தியாவின் ஏழு சகோதரி மாநிலங்களை இந்தியாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து தனிமைப்படுத்துவோம் என்றும், அங்குள்ள பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்போம் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இந்த கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரை நேரில் அழைத்துத் தனது கவலையைத் தெரிவித்தது. குறிப்பாக, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இந்தக் கருத்துக்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

2025 ஏப்ரலில், வங்கதேச இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ், ஏழு சகோதரி மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டவை என்றும், அவற்றுக்கு வங்கதேசம் ஒரு ‘கடல் நுழைவாயிலாக’ (Ocean Gateway) செயல்பட முடியும் என்றும் சீன முதலீட்டாளர்களிடம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜூலை மாத கலவரங்களுடன் தொடர்புடைய இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் டாக்காவில் உள்ள இந்திய உயர் தூதரகத்தை (Indian High Commission) நோக்கி பேரணியாகச் சென்று தாக்குதல் நடத்தினர்.

 மேலும், இந்த முறை நாங்கள் இங்கு நிறுத்திவிட்டோம், அடுத்த முறை இந்திய தூதரகத்திற்குள் நுழைவோம் என்றும் 1971 கடனைத் திருப்பிச் செலுத்துவோம் என தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் எச்சரிக்கை விடுத்து பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் வைரலானது.

மேலும், இந்த பதற்றம் காரணமாக டாக்காவில் உள்ள ஜமுனா ஃபியூச்சர் பார்க் வளாகத்தில் இயங்கி வரும் இந்திய விசா விண்ணப்ப மையம் தற்காலிகமாக மூடபட்டது.தொடர்ந்து, பங்களாதேஷின் ராஜ்ஷாஹியில் உள்ள இந்திய உதவி உயர் ஆணையம் நோக்கி இந்தியத் தூதரகத்தைத் தாக்க வேண்டும் என்ற உறுதியுடன் தீவிரவாத போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். 

இதனால், போலீசார் கும்பலைத் தடுத்து நிறுத்தி அந்தப் பகுதியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும், வங்கதேசத்தின் தற்போதைய இடைக்கால அரசு இத்தகைய கருத்துக்கள் தனிப்பட்ட நபர்களின் கருத்துக்கள் என்று கூறி அவற்றுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. 

மேலும், புவியியல் மற்றும் ராணுவ வலிமையின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிப்பது என்பது சாத்தியமற்ற ஒரு கற்பனை என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். 

விதை மீதான உரிமை யாருக்கு?

இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயத் துறை ஏற்கெனவே பெரும் நெருக்கடி யில் சிக்கித் தவிக்கிறது. 

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்ளும் துயரம் நெருக்கடியை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகின்றது. இத்தகைய இக்கட்டான சூழலில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள “விதை மசோதா 2025” வரைவு, விவசாயிகளின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

1966-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த விதைச் சட்டம், வர்த்தக ரீதியான விதைகளை மட்டுமே கட்டுப்படுத்தியது. 

விவசாயிகளின் பாரம்பரிய உரிமைகளிலும், அவர்கள் விதை களைப் பகிர்ந்து கொள்வதிலும் அந்தச் சட்டம் தலையிடவில்லை. ஆனால், புதிய மசோதா- 2025 முற்றிலும் மாறுபட்டது. இது ‘விதை’ என் பதை ஒரு சமூகச் சொத்தாகப் பார்க்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களின் விற்பனைப் ‘பண்ட மாக’ மட்டுமே பார்க்கிறது.

இந்த மசோதாவின் மிக ஆபத்தான அம்சம், விதைகளின் விலையை நிர்ணயிக்கும் அதிகா ரத்தை மறைமுகமாகப் பெருநிறுவனங்களிடம் ஒப்படைப்பதாகும். விவசாயிகள் தங்கள் விளைச்சலிலிருந்து விதைகளைச் சேமிப்பதும்,  சக விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்வதும் இந்தியாவின் பல்லாயிரம் ஆண்டு காலப் பண் பாடு. 

ஆனால், இனி அனைத்து விதைகளும் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை, பாரம்பரிய நாட்டு ரகங்களைச் சந்தையிலிருந்து அந்நியப்படுத்தும். அகற்றி விடும். விவசாயிகளின் கைகளில் இருந்து விதை உரிமையைப் பறித்தால், நமது உணவு இறை யாண்மையே ஆபத்தில் சிக்கும்.

வேளாண்மை என்பது மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு துறை. ஆனால், இந்த மசோதா அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அர சிடம் குவிப்பதோடு, மாநில அரசுகளின் உரிமை களை நீர்க்கச் செய்கிறது. 

மேலும், 2001-ஆம் ஆண்டின் தாவர ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவ சாயிகள் உரிமைச் சட்டம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள பாதுகாப்புகளை இந்த புதிய வரைவு சிதைக்கிறது. உயிரியல் பல்லுயிர் பாது காப்பு தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக ளுக்கும் இது முரணாக உள்ளது.

தரமற்ற விதைகளால் பயிர் விளைச்சல் பொய்த்துப் போகும்போது, கார்ப்பரேட் நிறுவ னங்களிடம் இழப்பீடு பெறுவது விவசாயி களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். அந் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர அவர்கள் வெளிநாடுகளுக்கோ அல்லது தில்லிக்கோ அலைய முடியாது. 

பி.டி.பருத்தி போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளால் ஏற்கெனவே ஏற்பட்ட பொருளாதாரச் சரிவையும், விவசாயிகளின் தற் கொலைகளையும் நாடு மறக்கவில்லை.

விதை என்பது வெறும் வேளாண் இடு பொருள் அல்ல. அது நமது உணவின் உயிர் மூச்சு, உயிரியல் நினைவகம், பண்புக்கூறுகளின் மரபு, சூழலியல் அறிவு, நமது அடையாளம். 

அதைச் சில பெருநிறுவனங்களின் லாப வேட் டைக்குத் தாரை வார்ப்பது என்பது இந்தியா வின் எதிர்காலத்தையே அடகு வைப்பதற்குச் சமம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை