என்கவுன்டர்-ஒரு கவுன்டிங்,

தமிழகத்தில் இதுவரை காவல்துறையினர் என்கவுண்டருக்கு 75 பேர் வரை பலியாகியுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 1980ம் ஆண்டுதான் இது ஆரம்பமானது.
இப்போது சென்னை வேளச்சேரியில் ஐந்து வங்கிக் கொள்ளையர்கள் காவல் துறையினரால் என்கவுண்டர் மூலம்கொல்லப்பட்டுள்ளனர்.
இதுவரையிலான தமிழக என்கவுண்டர்கள். ஒரு பார்வை:…
தமிழகத்தில் 1980களில் நக்சலைட்கள் அட்டகாசம் தலை தூக்கியது அப்போதுதான் முதல் முறையாக என்கவுண்டர் கொலைகள் நடந்தேறின. நக்சலைட்கள் பலர் காவல்துறையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் 1998ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரி அருகே நடந்த மோதலின்போது ரவுடி ஆசைத்தம்பியும், அவனது கூட்டாளியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2002ம் ஆண்டு தமிழக போலீஸ் படை பெங்களூர் சென்று அங்கு பதுங்கியிருந்த இமாம் அலி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொன்றது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2003ம் ஆண்டு சென்னையில் வெங்கடேச பண்ணையார் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே ஆண்டில் சென்னை கடலில் வைத்து சென்னை மாநகரையே நடு நடுங்க வைத்த பிரபல தாதா அயோத்தியா குப்பம் வீரமணி சுட்டு வீழ்த்தப்பட்டான்.
2007ம் ஆண்டு சென்னையை கலங்க வைத்த ரவுடிகளில் ஒருவனான வெள்ளை ரவுடி போலீஸ் படையால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டான்.
2010ம் ஆண்டு கோவையில், பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த வழக்கில் கைதாகி, விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார்.

அதே ஆண்டு, திண்டுக்கல்லைச் சேர்ந்த பாண்டு உள்ளிட்ட 2 பேர் சென்னை அருகே நீலாங்கரையில் வைத்து என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டனர்.
தமிழகத்தில் அதிமுக ஜெயலலிதாவின் ஆட்சியில்தான்என்கவுன்டர்கள் 95%நடந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஜெயலலிதா பதவிக்காலத்தில் மட்டும் 11 பேர்களை காவ்ல்துறையினர்சுட்டுக் கொன்றுள்ளனர்.
குறிப்பாக சென்னை மாநகர ஆணையராக விஜயக்குமார் இருந்தபோதுதான் வீரமணி, வெங்கடேச பண்ணையார் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழ் தேசியவாதிகளான ராஜாராம் மற்றும் சரவணன் ஆகியோரும் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.
என்கவுண்டரைப் பொறுத்தவரை திமுக ஆட்சிக்காலத்தில் அதிக அளவில் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இப்போதைய 5 வட மாநிலத்தவர்களும் அவர்கள்தான் கொள்ளையடித்தனரா ?என்று தெரியாத அளவிலெயே சுட்டுத்தள்ளப்பட்டுள்ளனர்.


அவர்கள் அப்பாவிகளாக இருந்தால் ?அவர்களிடம் துப்பாக்கிகள் இருந்ததும் உண்மையா?அதை காவ்ல்துறையினரே ஏன் கொன்றபின்னர் போட்டிருக்கக்கூடாது என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதை நாம் புறக்கணிக்க முடியாது.ஒருவரை கூட உயிருடன் பிடிக்க முடியாதது துயரமே.
வங்கிக்கொள்ளைக்கு மரணம்தான் பரிசா?


பொதுமக்களை கூட்டமாக கொன்று குவிக்கும் தீவிரவாதிகளை உயிருடன் சிறையில் மரியாதையுடன் வைத்திருக்கும் காவல்துறை தொடர் கொள்ளையால் தனது பெயர் மக்களிடம் மிகவும் கீழ் நிலைக்கு சென்று விட்டதை உயர்த்தி பிடிக்கவே இந்த என்கவுன்டரை செய்துள்ளது என்ற சமுக ஆர்வலர்களின் கருத்து ஓரளவு உண்மையானதுதான்.
________________________________________________________________________


சிறுநீரகக் கல் தடுத்திட 


சிறுநீரகத்தை நலமுடன் பராமரிப்பதில் எலுமிச்சை யின் செயல்கள் பற்றி  ஆய்வு நடந்தது.


தினசரி 4 ஸ்பூன் எலுமிச் சைச் சாற்றை இரண்டு லிட் டர் தண்ணீருடன் கலந்து சிறிது சிறிதாக சிலரை குடிக் கச் செய்து பரிசோதிக்கப்பட்டது. சிறுநீரகத்தில் கற்கள் சேர் வதற்கான வாய்ப்பு 1 புள்ளியில் இருந்து 0.13 புள்ளியாகக் குறைந்தது தெரிய வந்தது. 

எலுமிச்சையில் சிட்ரஸ் அதிகளவில் உள்ளது. மற்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களைக் காட்டிலும், சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுப்பதில் எலு மிச்சை சிறப்பாக செயல்படு கிறது. எலுமிச்சை, சாத்துக் குடி தவிர்த்து மற்ற பழங்களில் சிட்ரஸ் மிகக் குறைவாகவே உள்ளது.

எனவே, தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பு, கால்சியம், புரோட்டீன் ஆகிய வற்றின் பாதிப்பைக் குறைக்க, எலுமிச்சை சாறு மிகவும் உத வும். உப்பில் உள்ள கால்சியம் தான் சிறுநீரக கல் உருவா வதில் அதிக பங்கு வகிக்கிறது.


 உணவில் உப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் கல் உருவாவதை தவிர்க்க முடியும்.எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் சிறிய அளவு உருவாகும் கற்களை ஆரம்பத்திலேயே தடுத்திடலாம்.
________________________________________________________________________குப்பையும் சிற்பமாகும்.






_________________________________________________________________________________
போட்டோவுக்கு போஸ் கொடுக்கவா செய்றீங்க?
------------------------------------------------------------------------------------------------------------

அதிகரித்த குளிர்.


========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?