இடுகைகள்

கடவுள் . லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"இறை" நம்பிக்கை?

படம்
உலகில் கடவுள், மத நம்பிக்கை யற்றவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. நார்வே நாட்டில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பெருகிவருகிறார்கள் என்கிற ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது. நார்வே நாட்டில் சுமார் நான்காயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், 39 விழுக்காட்டினர் முற்றிலும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருப்பதாகக் குறிப் பிட்டுள்ளனர்.  37 விழுக்காட்டினர் கடவுள்மீதான நம்பிக்கை கொண்டிருப்பதாகக்குறிப்பிட்ட அதேநேரத் தில், 23 விழுக்காட்டினர் கடவுள்குறித்து எவ்வித கருத் தையும் கொண்டிருக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளதாக ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே 1985ஆம் ஆண்டில் முதல்முறையாக கடவுள் நம்பிக்கைகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக 50 விழுக்காட்டினர் கூறியிருந்தனர். தற்போது அவ்வெண் ணிக்கை பெருமளவில் சரிந்து 37 விழுக்காடாகிவிட்டது.  1985ஆம் ஆண்டில் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக அய்ந்தில் ஒரு பங்கினர் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர். ஆனால் தற்போது அவ்வெண்ணிக்கை 39 விழுக்காட் டளவில் உயர்ந்துள்ளது. நார்வே நாட்டைச்சேர்ந்த ஜான் பால் பிரெக்க...

பிள்ளையார் உடைப்பு ! நீதிபதி தீர்ப்பு!!வரலாற்றைப் பார்ப்போம்.

படம்
மக்கள், வள்ளுவர் குறளை ஏற்று நடக்கும் தகுதி பெற்ற பிறகு, அடுத்தபடி என்ன என்று சிந்தித்தேன். புத்தர் கொள்கை பிரசார மாநாடு கூட்டினேன். நாம் எந்த லட்சியத்துக்காக நம் இயக்கத்தினை ஆரம்பித்தோமோ அந்தத் துறையில் நல்ல பலன் ஏற்பட்டு வருகிறது.  நம் இயக்கம் நல்ல முறையில் வளர்கிறது, பல கடவுள்கள், உருவ வழிபாடு வேண்டாம் என்று பல ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வந்தோம். மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை! ஏனோதானோ என இருந்தார்கள். மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருந்தால் பலன் என்ன?  விக்ரகங்களை உடைக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதன்படியே முதலாவதாக விநாயக உருவத்தை உடைத்தோம்.  ஓர் நாள் குறிப்பிட்டு பல்லாயிரக்கணக்கிலே உடைத்துக் காட்டினோம். அது குறித்துகூட சிலர் என் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். 4-நாட்களுக்கு முன்னேதான் நீதிபதி ராமன் நாயர் அவர்கள் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். தீர்ப்பில் அவர் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது. பிள்ளையார் உருவம் அவர்கள் செய்து அவர்கள் உடைக்கிறார்கள் - நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று அவர்களைக் கேட்டார்.  அவர்களுக்கு (ஆஸ்திகர்களுக்கு) இத...

நாணல் போல வளைவதுதான்..

படம்
இவரை திருமணம் செய்து கொள்ள தினமும் சென்னை வரும் பெண்கள் எண்ணிக்கை அதிகம்.அதிலும் தங்களது ஜமீந்தார் தந்தையுடன் வரும் பெண்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ரெயில் இவர் எங்காவது செல்கிறார் என்றால் ரெயில்வே அதிகாரிகளுக்கு சிக்கல்தான்.அன்று இவர் செல்லும் ரெயில் பல இடங்களில் நிறுத்தப்பட்டு குறைந்தது ஐந்து மணி நேரமாவது தாமதமாகத்தான் செல்லும். இவர் கார் ஓட்டுனர் காரை துடைக்கவே தேவை இல்லை. காலைதோறும் இவர் காரின் மீது படிந்துள்ள தூசியை எடுத்து நெற்றியில் பக்தியுடன் பூசிக்கொள்ள ஒரு கூட்டமே காத்துக்கிடக்கும். இப்படிப்பட்டவர் மீது சுமத்தப்பட்ட கொலை பழி ,வழக்கு தண்டனைக்குப்பின்னர் எல்லாமெ மாறி போனது. மூன்று தீபாவளிகளை ஒரே திரையரங்கில் கண்ட படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ‘தியாகராஜ பாகவதர் தான் இந்த இரு நிலைகளையும் கண்டவர். அதன் பின்னர் இவர் நடித்த படங்கள் சொற்பம்.அனைத்துமே வந்த வேகத்தில் திரையரங்கை விட்டு ஓடியது. இதற்கெல்லாம் காரணம் திரை உலகத்தினரின் அந்தரங்கங்களை வெளியிட்டு காசு பண்ணிய மஞ்சள் பத்திரிகை இந்து நேசன் ஆசிரியர் லட்சுமி காந்தன் சிலரால் ரிக்‌ஷாவில் செல்லும் போது கொலை செய்யப்பட்டதுதான். அதற்கு ...

கண்டு கொள்வோம் .. கடவுளர்களை

படம்
கலீலியோ கடவுள் . மனிதனின் மிகப்பெருமையான  படைப்புகளில் ஒன்று. தான் படைத்தவைகளுக்கே  பயப்படுவது மனிதனின் இயல்பு. நெருப்பு [உருவாக்கல்] ,சக்கரம்,கணிதம்,கணினி,கடவுள்.இவையே மனித கண்டுபிடிப்புகளில் -படைப்புகளில் ஐம் பூதங்கள்அவற்றில் ஒன்றான கடவுளரை பற்றி ஆய்வு செய்வது மிக சுவையானது . அப்பணியை 'புதிய கலாச்சாரம் "இதழ் செய்துள்ளது. 1997 -ல் வெளியிட்ட கட்டுரை மூலம் கண்டு கொள்வோம். கி.பி. 1860 -ஆம் வருடம், ஜூன் மாதம். இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வளாகம் மக்கள் வெள்ளத்தால் ததும்புகிறது; டார்வின் பற்பல நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் அறிஞர் பெருமக்கள், என்னதான் நடக்கும் என்று கிசுகிசுத்தவாறு அமர்ந்திருக்கும் பிரபு குலத்தவர்கள். நடைபெற இருந்த மாபெரும் விவாதப் போரைப் பற்றி ஆரவாரத்துடன் பேசிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் என ஆக்ஸ்போர்டு வளாகம் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆக்ஸ்போர்டின் கலகலப்பிற்கு காரணம் உண்டு, ‘இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு அன்றைய இங்கிலாந்தில் ஒரு சூறாவளியைக் கிளப்பியவர் சார்லஸ் டா...