இடுகைகள்

கனவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"மிரட்டல் ஆயுதம் செல்லுபடியாகுமா?"

படம்
  கருணாநிதி மத்திய காங்கிரசை மிரட்ட ஆட்சியில் இருந்து விலகுவோம் என்றிருக்கிறார். அவரிடம் எப்போதும் இருக்கும் கடைசி மிரட்டல் ஆயுதம் அதுதான் .ஆனால் அது இப்போதைக்கு காங்கிரசு ஆட்சி கவிழுமளவு செல்லுமா?என்று பார்த்தால் இல்லை.  இந்தியாவின் மொத்த எம்.பி.,க்கள் எண்ணிக்கை- 544.  ஆட்சி அமைக்க  தனிப்பெரும்பான்மை பலமாக  273 எம்.பி.,க்கள்  தேவை.  காங்கிரசுக்கு சொந்தமாக  206 எம்.பி.,க்கள்முன்பு  இருந்தனர்.  குஜராத்தைச் சேர்ந்த, ஒரு எம்.பி., காலமாகி விட்டதால், பலம் 205 ஆக குறைந்துவிட்டது . தி.மு.க. தவிர்த்து  மற்ற கட்சிகள் ஆதரவு  எம்.பி.,க்கள் 68 . இதுதவிர ஒன்பது சுயேச்சை எம்.பி.,க்களும், ஆதரவு தருகின்றனர். இந்த கணக்குப்படி பார்த்தால் சோனியாவின் காங்கிரசுக்கு  ஆதரவு தரும் எம்.பி.,க்கள் எண்ணிக்கை278 ஆக உள்ளது.பெரும்பான்மையை விட 5 அதிகம்.  தி.மு.க.வின் 18 மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஒருவர் என 19 எம்.பி.,க்கள் தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றாலும் கூட  மத்திய அரசு நம்பிக்க...

வரிசையாக மொத்தமாக வாங்க..!

படம்
"விஸ்வரூபம் " படத்துக்கு  தடை விதிக்கக் கோரி"  ஒரு  கிறிஸ்துவ அமைப்பினர் திடீர் என அதிரடி செய்தி வெளியிட்டுள்ளனர்.  நாடு முழுவதும் இந்தப் படத்தை தடை செய்யவேண்டும் என்று கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு உடனடியாக விசாரணைக்கு பட்டியலிடப் படவில்லை.அடுத்த வாரம் ஒரு நாள் நீதிமன்ற விசாரணைக்கு பட்டியலிடப் படும் என்று தெரிகிறது. படத்தில் நடித்துள்ள கமல்ஹாசனுக்கு எதிராக மனுதாரர் இந்த மனுவில் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். மனுதாரர் சார்பில் ஜெபகுமார் என்ற சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.  தடை விதிக்க கோரும் காரணம் இது வரை சரிவர தெரியவில்லை.இசுலாம்,இந்து மதத்தினர் எல்லாம்  தடை கோரி விட்டார்கள்  .நாம் மட்டும் சும்மா இருந்தால் நாம மதத்துக்கு அசிங்கம் என்று நினைத்திருப்பார். இன்னும் யார்,யார் எல்லாம் இருக்கிறார்கள்.அனைவரும் வரிசையாக வந்து மொத்தமாக மனுவை தாக்கல் செய்து விட்டால் வரிசையாக எண்ணிட்டு விசாரிக்கநீதிமன்றத்துக்கு வசதியாக இருக்கும்.அதன் நேரமும் விஸ்வரூபம் படத்த...

எனது கனவு ...., !

படம்
   காலம் யாருக்காகவும் காத்திருப்பதாக      தெரியவில்லை.      காலன் மட்டுமே      காத்திருத்தலில் இருக்கிறான்.    கனவுகள்  அனைவருக்கும் இருக்கிறது. கனவுகள் இல்லாதவன் - உயிரும் இல்லாதவனாகத்தான்  இருக்கிறான். கனவுகள்தான் மனிதனை இன்னமும்  வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. கனவுகள் விரியும்  மனதில்லாதவன்  வாழ்வும் நின்று விடுகிறது. கனவுகள்  இல்லாதவனுடன்  வாழ வாழ்வுக்கு   விருப்பம் கிடையாது. சிறுவனின் கனவு -மீசையுடன்  பெரியவனாக  மாறுவது. இளைஞனின்  கனவு  காதலில் இன்புறுவதாக  அதிகம். வாழ்வில் முன்னேறுவது  அங்கு கொஞ்சம்  இருக்கும் . வயதானவனின் கனவு  இன்னமும் இளமை தன்னுள் ஊஞ்சலாடுவதாக . கனவுகள் மாறலாம். கனவு காண்பது மாறாதது. பிச்சைக்காரனுக்கு கூட  தங்க பிச்சைப்பாத்திரக் கனவுகள்  ...

அன்பளிப்பு 'ரூ100'

படம்
காவிரி தண்ணீர் வராததாலும் கர்நாடக அரசு தராததாலும்  தமிழக நெற்களஞ்சியம் தஞ்சை வாடி நிற்கிறது.அங்குள்ள வயல்கள் காண்போர் மனதை அதிரச்செய்யும் வகையில் காய்ந்து கிடக்கிறது.இதுவரை காய்ந்த வயல்களைப்பார்த்து வாடிய விவசாயிகள் 11க்கும் மேற்பட்டவர்கள்  தற்கொலை,பலர் மாரடைப்பு என உயிரை விட்டுள்ளனர். அவர்கள் தங்கள் வயல் வெளிகள்-பயிர்கள் நாசமானதற்கு நிவாரணம் கேட்டு போராடிவருகிறார்கள்.ஆனால் தமிழக அரசு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 13ஆயிரம் மட்டும் ஏக்கருக்கு தருவதாக அறிவித்துள்ளது. ஆனால இன்றைய விதை நெல் விலை,உரங்கள் விலை யை சுட்டிக்காட்டி தாங்கள் செலவிட்ட   பணத்திற்கு  ஒத்து வரும் வகையில் ஏக்கருக்கு 25 ஆயிரம்,விவசாயிகள் கூலிகளுக்கு 10000 நிவாரணமாக வழங்கக் கூறி சாலைகளில் இரவு-பகலாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி கஞ்சித்தொட்டி திறந்து வருகிறர்கள். ஆனால் அவர்கள் நலத்தை புறந்தள்ளி விட்டு தமிழக அரசு பொங்கலைக் கொண்டாட அரிசி -சர்க்கரை தலா 100 ரூபாய் என்று கொடுத்து வாக்குகளை சேகரித்து வருகிறது.பொங்கலே விவசாயத்தின் முதல் அறுவடையை பொங்கி இயற்கைக்கு நன்றி தெ...

நான் தயார்..!நீங்கள் தயாரா,,,,,?

படம்
'அந்த பக்கம் போகாதீங்க.ஏதோ ஆர்ப்பாட்டம் நடக்கிறது."  ஆனால் அந்த பக்கம் போனால்தான் வீடுக்கு சீக்கிரம் போகலாம்.இது சுற்று வழி. எப்படியோ ஆர்ப்பாட்டத்தில் நுழைந்து சமாளித்துப்போய் விட வேண்டியதுதான்.எதிர் வந்தவர் கூறியதை காற்றில் பறக்க விட்டேன். வேகமாக நடை போட்டேன்.  ஒரே பெண்கள் கூட்டம்.ஆவேசமாக கூக்குரல்[ அவர்கள் மொழியில் கோசம்] போட்டுக்கொண்டிருந்தனர். ஏதாவது மாதர் சங்கமாக இருக்கும்.எங்காவது பெண் பாலியல் பலாத்காரம் விவகாரமாக இருக்கலாம். ஆனால் கோசங்கள் சற்று வேறுமாதிரி இருந்தது.கவனித்தேன். "வெறும் சம்பளம் மட்டும் போதாது.விலைவாசிப் புள்ளிகளுக்கேற்ப அகவிலைப்படி வேண்டும்,,வேண்டும், ஆண்டுக்கொருமுறை மிகை ஊதியம் போனஸ் வேண்டும்,,வேண்டும்." அடடா.சத்துணவு பெண்களாக இருக்காலாம்.அல்லது அங்கன்வாடி இனத்தவர்களாக இருக்கலாம்.மகளிர் காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொன்டிருப்பது பார்வையில் பட்டது. அது யார் .? ஒரு ஓரமாக.காசி போல் தெரிகிறதே. அது நண்பன் காசியேதான். ஏன் ஒரு ஓரமாக ஒளிந்து நிற்பது போல் இருக்கிறான்.என்னைப் பார்த்து விட்டான். கையை அசைத்து ரகசியமாக அல்லது...