இடுகைகள்

வெடிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பட்டாசு பலிகள்

படம்
தமிழ்நாட்டில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாவது என்பது முடிவில்லா தொடர்கதைதான்.செப்டம்பர் மாதம் சிவகாசியில் ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட  விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். அந்த கோரத்தில் இருந்து அரசும் பட்டாசு தொழில் செய்பவர்களும் பாடம் படித்ததாகத் தெரிய வில்லை.விபத்துகளின் சமீபங்களில் மட்டுமே அதை பற்றி பரபரப்பாக பேசுவதும்,பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசு கெடுபிடி செய்வதும் நடக்கிறது.பின் அவ்ளோதான்.இன்று அந்தவகையி மற்றுமொரு வெடி வெடித்து பலரை சிதற வைத்துள்ளது. தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் மேச்சேரி அருகே செங்காட்டூர் பிரிவு என்ற இடத்தில், பட்டாசு தயாரிக்கும் கூடத்தில் இன்று (25.12.12) பிற்பகல் ஏற்பட்ட  விபத்தில் நான்கு பெண்கள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். உரிமம் பெற்று பட்டாசு தயாரிக்கும் அந்த ஆலையில், வானவெடிகள் உள்பட திருவிழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.ஆனால் பட்டாசு தயாரிப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் கவனக்குறைவு வழக்கம் போல்தான். ...

மும்பை இந்தியாவின் சோகம்,

படம்
மும்பை இந்தியாவின் வர்த்தக தலைநகரம் மட்டுமல்ல.தீவிரவாதிகளின் கொடுஞ்செயல்களின் பலிகளமாகவும் உள்ள அவலம். எந்தநேரம் எங்கு குண்டு வெடிக்கும் .வீட்டுக்கு யாரெல்லாம் திரும்பிவருவார்கள் என்ற திக்,திக்,நெஞ்சோடு காத்திருக்கும் அவலம் நிறைந்த மாநரகமாகி விட்டது. ரா,ஐ.பி,போன்ற புலனாய்வு நிறுவனங்கள்.மாநில அளவிலான புலனாய்வு அமைப்புகள் பல இருந்தும் இது போன்ற கொடுஞ்செயல்களை கண்டுபிடித்து தடுத்து நிறுத்த இயலாமல் போவது அந்த அமைப்புகளின் தேவையை ஆய்வு செய்யவைக்கிறது.    அது மட்டுமல்ல ஏற்கனவே இது போன்ற கொடிய செயல்களை செய்து மாட்டிக்கொண்ட மிருகங்களை நாம் தண்டிக்காமல் சிறையில் வைத்து பாதுகாத்து பிரியாணி போட்டு பராமரிப்பதும்.இது போன்ற செயலை இந்தியாவில் செய்வதை தீவிரவாதிகள் சுற்றுலா பயணம் போல் வந்து செய்துவிட்டு போவதை ஊக்குவிக்கிறது.காசாப் ,பாராளுமன்றத் தாக்குதல் தீவிரவாதிகள் மீது நாம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்?இது போன்றவைதான் எவ்வளவு குண்டு வெடித்து எவ்வளவு பேர் செத்தாலும் இந்தியாவில் ஒன்றும் செய்யமாட்டார்கள்-மாட்டினாலும் பிரியாணியுடன் சிறையில் ஓய்வெடுத்து அடுத்த குண்டுவைப்புக்கு யோசிக்கலாம்.இவுங...