பேரறிஞர் அண்ணா.
தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பொழுக போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் 46-வது நினைவு தினம் இன்று. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காஞ்சீபுரத்தில், மத்தியத் தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த நடராசன்-பங்காரு அம்மையார் தம்பதியரின் அன்பு மகனாக 15-09-1909 அன்று பிறந்த தமிழ்நாட்டின் தலைமகனுக்கு பெற்றோர் இட்ட பெயர் அண்ணாதுரை என்பதாகும். காஞ்சீபுரம் நடராசன் அண்ணாதுரை என்ற முழுப்பெயரின் சுருக்கமாக சி.என்.அண்ணாதுரை என்று அறியப்பட்ட அவர், ஆரம்ப கல்வியை சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும், பட்டப்படிப்பை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றார். தமக்கையார் ராசாமணி அம்மையாரின் அரவணைப்பில் வளர்ந்த அண்ணா, மாணவப் பருவத்திலேயே ராணியம்மையாரை மணம் புரிந்தார். கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தை தவிர்த்து பிறமொழிகளில் பேசக்கூடாது என்ற ஆங்கில மோக மனப்பான்மை அன்றைய காலகட்டத்திலும் அதிகம் இருந்தது. ஆங்கிலத்தில் பேசுவதே கவுரவம் என்று எண்ணம் மேலோங்கியிருந...